Published:Updated:

``அம்மா சத்தியம் வாங்கினாங்க, அதனால பேசல!''- சேத்துப்பட்டில் வெட்டுப்பட்ட காதலி தேன்மொழி வாக்குமூலம்

``அம்மா சத்தியம் வாங்கினாங்க, அதனால பேசல!''- சேத்துப்பட்டில் வெட்டுப்பட்ட காதலி தேன்மொழி வாக்குமூலம்
News
``அம்மா சத்தியம் வாங்கினாங்க, அதனால பேசல!''- சேத்துப்பட்டில் வெட்டுப்பட்ட காதலி தேன்மொழி வாக்குமூலம்

``அம்மா சத்தியம் வாங்கினாங்க, அதனால பேசல!''- சேத்துப்பட்டில் வெட்டுப்பட்ட காதலி தேன்மொழி வாக்குமூலம்

Published:Updated:

``அம்மா சத்தியம் வாங்கினாங்க, அதனால பேசல!''- சேத்துப்பட்டில் வெட்டுப்பட்ட காதலி தேன்மொழி வாக்குமூலம்

``அம்மா சத்தியம் வாங்கினாங்க, அதனால பேசல!''- சேத்துப்பட்டில் வெட்டுப்பட்ட காதலி தேன்மொழி வாக்குமூலம்

``அம்மா சத்தியம் வாங்கினாங்க, அதனால பேசல!''- சேத்துப்பட்டில் வெட்டுப்பட்ட காதலி தேன்மொழி வாக்குமூலம்
News
``அம்மா சத்தியம் வாங்கினாங்க, அதனால பேசல!''- சேத்துப்பட்டில் வெட்டுப்பட்ட காதலி தேன்மொழி வாக்குமூலம்
``அம்மா சத்தியம் வாங்கினாங்க, அதனால பேசல!''- சேத்துப்பட்டில் வெட்டுப்பட்ட காதலி தேன்மொழி வாக்குமூலம்

``கல்லூரிக்குச் செல்லும்போது பஸ்சில்தான் சுரேந்தர் எனக்கு அறிமுகமானார். நாங்கள் இருவரும் காதலித்தோம். ஆனால் எங்கள் காதலுக்கு சாதி குறுக்கே வந்ததால் திருமணத்துக்கு பெற்றோர் சம்மதிக்கவில்லை. என் நிலைமையை சுரேந்தரிடம் சொல்லி புரியவைப்பதற்குள் என்னை அவன் அரிவாளால் வெட்டிவிட்டான்'' என்று தேன்மொழி வாக்குமூலம் அளித்துள்ளார். 

ஈரோடு மாவட்டம், கலியங்காட்டுவலக கவுண்டச்சிபாளையத்தைச் சேர்ந்தவர் வீரமணி. இவரின் மகள் தேன்மொழி (26). இவர், கீழ்ப்பாக்கத்தில் உள்ள கூட்டுறவு தலைமைப் பதிவாளர் அலுவலகத்தில் தட்டச்சராக வேலை பார்த்துவருகிறார். இவர் சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் விடுதிக்குச் செல்ல காத்திருந்தபோது அரிவாளால் வெட்டப்பட்டார். தற்போது கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி நடந்துள்ளது. 

எழும்பூர் ரயில்வே போலீஸாரிடம் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, ``நான் கல்லூரிக்கு பஸ்சில் செல்லும்போதுதான் சுரேந்தரைச் சந்தித்தேன். அவர் வேறு ஒரு கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார். பஸ்சில் எனக்கு அறிமுகமான சுரேந்தர் என்னைக் காதலிப்பதாகக் கூறினார். நானும் அவரைக் காதலித்தேன். 

``அம்மா சத்தியம் வாங்கினாங்க, அதனால பேசல!''- சேத்துப்பட்டில் வெட்டுப்பட்ட காதலி தேன்மொழி வாக்குமூலம்

கல்லூரி படிப்பு முடிந்ததும் அரசு தேர்வு எழுதினேன். அவர், இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்தார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன் எனக்கு சென்னைக் கீழ்ப்பாக்கத்தில் அரசு வேலை கிடைத்தது. இதனால் ஈரோட்டிலிருந்து சென்னை வந்தேன். இந்தச்சமயத்தில் என்னை திருமணம் செய்வதற்காக பெண் கேட்டு என் வீட்டுக்கு வந்தார் சுரேந்தர். என்னுடைய பெற்றோரிடம் அவர் பேசினார். 

அப்போது என் பெற்றோர் சில காரணங்களுக்காக என்னை சுரேந்தருக்கு திருமணம் செய்து கொடுக்கவில்லை. எங்கள் காதலுக்கு சாதி தடையாக இருந்தது. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு என்னை சுரேந்தருடன் பேசக் கூடாது எனப் பெற்றோர் சத்தியம் வாங்கினர். இதனால் சுரேந்தருடன் பேசுவதை தவிர்த்தேன். இருப்பினும் சுரேந்தர் என்னுடன் பேச பலதடவை முயற்சி செய்தார். 

இந்தச் சமயத்தில்தான் கடந்த 13-ம் தேதி ஈரோட்டிலிருந்து சுரேந்தர் போன் செய்தார். அப்போது அவர், உன்னை நான் சந்திக்க வேண்டும் என்று கூறினார். அதற்கு நான், வேண்டாம் என்று கூறினேன். இருப்பினும் 14-ம் தேதி சென்னையில் இருப்பேன் என்று சுரேந்தர் கூறிவிட்டு போன் இணைப்பைத் துண்டித்துவிட்டார். வழக்கம் போல வேலை முடிந்து நான் விடுதிக்குச் செல்ல சேத்துப்பட்டு ரயில் நிலையத்துக்கு வந்தேன். என்னைப்பின்தொடர்ந்து சுரேந்தர் அங்கு வந்தார். ரயில் நிலைய பிளாட்பாரத்தில் நானும் அவரும் பேசிக்கொண்டிருந்தோம். 

``அம்மா சத்தியம் வாங்கினாங்க, அதனால பேசல!''- சேத்துப்பட்டில் வெட்டுப்பட்ட காதலி தேன்மொழி வாக்குமூலம்

அப்போது என் நிலைமையை அவரிடம் கூறினேன். அதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. நாம் இருவரும் திருமணம் செய்து கொள்வோம் எனச் சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தார் சுரேந்தர். அப்போது நான், என் பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்ய முடியாது என்று கூறினேன். இந்தச்சமயத்தில்தான் அரிவாளை எடுத்த சுரேந்தர், எனக்கு கிடைக்காத நீ, உயிரோடு இருக்கக் கூடாது என்று ஆவேசமாகக் கூறியபடி வெட்டினார். நான் சுதாரிப்பதற்குள் அரிவாள் வெட்டு விழுந்தது. என்னுடைய இடது புற தாடையில் வெட்டுப்பட்டு ரத்தம் கொட்டியது. அடுத்து அவர், அரிவாளால் வெட்டியபோது அதைக் கையால் தடுத்தேன். இதனால் கையிலும் வெட்டு விழுந்தது. சுரேந்தர் இப்படி செய்வாருன்னு என் கனவில்கூட நினைக்கவில்லை. என் சத்தம் கேட்டு சிலர் அங்கு ஓடிவந்தனர். அதற்குள் நான் கீழே சரிந்தேன். அதன்பிறகு என்ன நடந்தது என்று தெரியாது" என்று கூறியுள்ளார். 

இதையடுத்து அவ்வழியாக வந்த மின்சார ரயிலில் சுரேந்தர் தற்கொலைக்கு முயன்றார். இதில் படுகாயடைந்த சுரேந்தர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவரிடமும் போலீஸார் என்ன நடந்தது என்று விசாரித்துள்ளனர். அப்போது அவர், `தேன்மொழியை உயிருக்கு உயிராக காதலித்தேன். அவள் இல்லாமல் என்னால் வாழ முடியாது' என்று மட்டும் கூறியுள்ளார். 

``அம்மா சத்தியம் வாங்கினாங்க, அதனால பேசல!''- சேத்துப்பட்டில் வெட்டுப்பட்ட காதலி தேன்மொழி வாக்குமூலம்

எழும்பூர் ரயில்வே போலீஸார், சுரேந்தர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஈரோட்டில் உள்ள சுரேந்தர் மற்றும் தேன்மொழியின் பெற்றோருக்கு எழும்பூர் ரயில்வே போலீஸார் நேற்றிரவு போனில் தகவல் தெரிவித்தனர். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். தேன்மொழிக்கு அவரின் பெற்றோர்கள் ஆறுதல் கூறினர். சுரேந்தரின் உறவினர்கள் காதலுக்காக இப்படிச் செய்துவிட்டானே என்று புலம்பியபடி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ளனர். 

 சுவாதி கொலைக்குப்பிறகும்....

கடந்த 2016 ஜூன் 24ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்ஜினீயர் சுவாதி, ராம்குமார் என்பவரால் வெட்டி கொலை செய்யப்பட்டதாக போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார், தற்கொலை செய்துகொண்டார். இதனால் இந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது. சுவாதி கொலைச் சம்பவம் நடந்தபோதும் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் போலீஸரால் மூன்றாவது கண் எனக் கருதப்படும் சி.சி.டி.வி. கேமரா அங்கு இல்லை. மூன்றாண்டுகள் கடந்தபிறகு தேன்மொழி, ரயில் நிலையத்தில் வெட்டப்பட்ட சம்பவத்திலும் சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் சி.சி.டி.வி. கேமரா இல்லை. 

அனைத்து ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராவைப் பொருத்தவேண்டும் என ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ள நிலையில் சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் கேமரா பொருத்த இரண்டாண்டுகளுக்கு முன் ஆர்டர் போடப்பட்டுள்ளது. ஆனாலும் இதுவரை அங்கு கேமரா பொருத்தப்படவில்லை. 

சம்பவத்தை நேரில் பார்த்த ஆர்.பி.ஆர் போலீஸ்காரர் 

தேன்மொழியும் சுரேந்தரும் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, ரயில்வே பாதுகாப்பு வீரர் (ஆர்.பி.எப்) ஒருவர் வந்து இருவரிடமும் பேசியுள்ளார். அந்த ரயில்வே பாதுகாப்பு வீரருக்கு தமிழ் தெரியாது. இதனால், இருவரையும் எச்சரித்த அந்த வீரர் அங்கிருந்து சென்றுவிட்டார். அதன்பிறகும் இருவரும் அங்கேயே பேசிக்கொண்டிருந்துள்ளனர். ரயில்வே பாதுகாப்பு வீரர் சென்றபிறகுதான் அரிவாளால் தேன்மொழியை சுரேந்தர் வெட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதைத் தடுக்க ரயில்வே பாதுகாப்பு படை வீரர் ஓடிவந்துள்ளார். தற்போது அந்த ரயில்வே பாதுகாப்பு படை வீரரிடமும் என்ன நடந்தது என்று விசாரணை நடந்துவருகிறது. 

தேன்மொழி அரிவாளால் வெட்டப்பட்ட போது ரயில் வந்ததால் பயணிகள் ஏறுவதிலும் இறங்குவதிலும் கவனம் செலுத்தியுள்ளனர். இந்தச்சமயத்தில்தான் தேன்மொழி வெட்டப்பட்டுள்ளார். அவரை வெட்டியதும் ரயில்முன் பாய்ந்த சுரேந்தர் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார். ஆனால் அவர் தற்கொலைக்கு முயன்றபோதும் காயங்களுடன் உயிர் தப்பிவிட்டார்.