Published:Updated:

கொலை... அம் மணம்... ஆன்மிகம்!

கொலை... அம் மணம்... ஆன்மிகம்!

திண்டுக்கல்லை புரட்டி எடுத்த சைக்கோ!
கொலை... அம் மணம்... ஆன்மிகம்!
கொலை... அம் மணம்... ஆன்மிகம்!

ரு வாரத்துக்கு முன்பு வரை அவர் பெயர் நாகராஜ்.ஆனால், இப்போது ஒட்டுமொத்த திண்டுக்கல் நகரமும் அவரைப் பற்றி 'சைக்கோ... சைக்கோ' என உடல் நடுங்கிப் பேசுகிறது!

கொலை... அம் மணம்... ஆன்மிகம்!

எட்டு வருடங்களுக்கு முன் காதல் திருமணம் செய்துகொண்ட நாகராஜுக்கும் கருப்புக்கும் ஆறு வயதில் ஆஷா என்ற மகளும், மூன்று வயதில் அஜய் என்ற

மகனும், ஒன்றரை வயதில் இன்னொரு மகனும் இருக்கிறார்கள்.

இறப்பு நிகழ்ந்த வீடுகளில் தப்படித்து ஆடுவதுதான்நாகராஜின் தொழில். ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட அவருக்கு, எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது என்கிறார்கள். இப்படிப் பட்டவர்தான் முதியவர் ஒருவரை இரும்புக் கம்பியால் அடித்து... கழுத்தைக் கிழித்துக் கொன்ற குற்றத்துக்காகக் கைது செய்யப்பட் டிருக்கிறார்.

ஏன் இப்படி மாறினார்?!

நாகராஜின் மனைவி கருப்பிடம் பேச முற்பட்ட போது, குழந்தைகளைக் கட்டியணைத்தபடி அழுது கொண்டே இருந்தார். நம்மிடம் பேசும் நிலைமையில் இல்லை. நாகராஜின் மாமா வடிவேலுவிடம் பேசினோம்.

''எல்லார்கிட்டயும் நல்லா பழகிக்கிட்டிருந்தவன், சில மாசமா ஒரு மாதிரியா இருந்தான். தூங்கும்போது திடீர்னு எந்திரிச்சு, 'என்கிட்ட சிவன் பேசினாரு. இதோ வர்றேன்னாரு'னு சொல்லுவான். ஆரம்பத்துல ஏதோ கனாகினா கண்டுருப்பானு இதை பெருசா எடுத்துக்காம விட்டிருக்காங்க. ஆனா நாளாக நாளாக, தெய்வமெல்லாம் தன்னிடம் பேசுவதா சொன்னவன், சிவன் தனக்குள்ளயே

கொலை... அம் மணம்... ஆன்மிகம்!

வந்துட்டார்னு சொல்லியிருக்கான். இதோட மட்டுமில்ல, விளையாடிக் கிட்டிருந்த தன் மூணு வயசு மகன் அஜய்யைக் கூப்பிட்டு 'உன் மேல மோகினி பாய்ஞ்சிருக்கு. அதை உங்க அப்பாவுக்குள்ள இருக்குற சிவன் விரட்டப் போறேன்'னு சொல்லிப் புடிச்சிருக்கான். பாவம் அந்த பய, திமிறி ஓட முயற்சிக்க... வாயில், எலுமிச்சம் பழத்தையும், ருத்ராட்சக் கொட்டையையும் திணிச்சிருக்கான். நல்லவேளையா ஊர்க்காரங்க பாத்துக் காப்பாத்திட்டாங்க!

அதுலேர்ந்து ஒரு வாரம் விட்டேத்தியா திரிஞ்சான். டிசம்பர் ஒன்றாம் தேதி ராத்திரி எப்போதும் போல நண்பர்கள்கூட போய் ஒரு கடைல தூங்கியிருக்கான். திடீர்னு எந்திரிச்சவன், தன் பக்கத்துல படுத்திருந்த கூட்டாளி கண்ணனை கடிக்கப் பாஞ்சிருக்கான்... அவரு தப்பிச்சு ஓடிட்டாரு. ராத்திரி ரெண்டு மணிக்கு வெறியோட வெளியில வந்தவன், அங்க ரோட்டோரம் தூங்கிக்கிட்டு இருந்த கருப்பையாங்கற 68 வயசான பெரியவரையும் கடிக்கப் போயிருக்கான். அவர் திமிற, பக்கத்துல இருந்த இரும்புக் கம்பியால் அடிச்சும்... கழுத்தைக் கிழிச்சும் கொடூரமா கொன்னுட்டான். நல்லா இருந்தவன் தீவிரமா ஆன்மிகம் அது இதுனு அலைஞ்சு இப்படி ஆயிட்டானே!'' என வருத்தப்பட்டார் வடிவேலு.

இதற்கு அடுத்து நாகராஜ் செய்ததுதான் இன்னும் திகில். ''பெரியவர் கருப்பை யாவை அடிச்சு ரத்தம் சொட்டச் சொட்ட கொலை செஞ்சவன், அப்படியே அந்த ரத்தத்தை எடுத்துஉடம்பெல்லாம் பூசிக்கிட்டு அம்மணமா ரோட்ல வந்திருக் கான்.

கொலை... அம் மணம்... ஆன்மிகம்!

அங்க ஒரு பிள்ளையார் கோயில்ல போய் உக்காந்து 'ஓம் நமசிவாய'னு சொல்லிக்கிட்டு இருந்தான். விடிகாலையில அவனைப் பாத்து பயந்துபோய், போலீ ஸ§க்குத் தகவல் சொன்னோம். அவங்க வந்தும் பிடிக்க முடியல. அவனுக்குக் கட்டு மஸ்தான உடம்புங்குறதால திமிறி ஓடினான். அப்புறம் மக்கள் எல்லாம் சேர்ந்துதான் அவனைப் பிடிச்சு ஜீப்புல ஏத்தினோம். அப்பகூட, 'ஏய் ஏட்டு, ஸ்டேஷன் மேல குண்டு போட்ருவேன். எனக்கு கடவுளைத் தெரியும்!'னு ஓவர் ரவுசுதான்...'' என்கிறார்கள் பகுதி வாசிகள்.

சப்-இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி நம்மிடம், ''தகவல் கிடைச்சதும் நாகராஜை ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டு வந்தோம். இங்க வந்தும், அவன் ஜபிக்கிறதை விடல. திடீர்னு 'தசாவதாரம்' படத்துல வர்ற, 'கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது' பாட்டைப் பாடிக்கிட்டே... என்னைப் பாத்து 'ஹரியா சிவனா பார்த்துடலாம், வர்றியா?'னு கேக்கறான். கைது செய்யப்பட்ட அவனை மதுரை மத்திய சிறையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பியிருக்கோம்!'' என்றார்.

இது பற்றி மனநல மருத்துவர் மற்றும் மூளை, நரம்பியல் நிபுணர் டாக்டர்.சாமுவேல் குணசேகரனிடம் கேட்டோம்.

''அளவுக்கு மீறிய மன அழுத்தத்தை பகிர்ந்துகொள்வதற்கு சரியான ஆட்கள் கிடைக்காதபோது, மன அழுத்தம் கூடிப் போகும். இதை பக்குவத்தோடு சுயமாகக் கையாளத் தெரியாதவர்கள் தங்களுக்குள்ளேயே ஒரே சிந்தனையில் ஆழ்ந்துவிடும்போது... பலவித விளைவுகள் உண்டாகும். அதில் ஒன்றுதான் தன் உடம்புக்குள் பெரிய சக்தி வந்ததுபோல ஒரு ஃபீலிங்குக்கு - பிரமைக்கு ஆளாவது. 'அந்த சக்தியை வைத்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம். நம்மை

கொலை... அம் மணம்... ஆன்மிகம்!

யாராலயும் அழிக்க முடியாது' என ஒரு விதமான முரட்டு தைரியம் தோன்றும். இது போன்றவர்கள் தனக்குத்தானே பேசிக்கொள்வார்கள். ஆனால், அதைக் கடவுளின் உத்தரவு என சொல்லுவார்கள். படுத்துக் கிடந்தவரை கொல்வதற்கு முன்பு நாகராஜின் காதுகளில், 'நீ யாரை வேண்டுமானாலும் அழிக்கலாம்' என்கிற மாதிரி அவர் மனதுக்குள் அவரே பேசிக்கொண்ட வார்த்தைகள், யாருடைய உத்தரவு போலவோ ஒலித்திருக்கலாம்! மண்டைக்குள் குரல் கேட்கும் மனச் சிதைவின் ஒருவகைதான் இது! அந்த நிலையில் பிரமைக் குரலின் உத்தரவின்பேரில்தான் இப்படிச் செய்திருக்க வேண்டும்! இது மோட்டிவ் எதுவும் இல்லாமல் நடந்த கொலை.

தான் கொடூரமானவன், யாராலும் அழிக்க முடியாதவன் என்கிற எண்ணம் அவரது மூளையில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. இதை ஆங்கிலத்தில் delusion என்பர். குழந்தை வாயில் எலுமிச்சம் பழம் திணித்தது, தன் சக்தியைக் குழந்தைக்குக் கொடுக்க முடியும் என்ற அபத்தமான எண்ணத்தில்தான். இது திடீரென்று மூளையில் ஏற்படும் மாற்றங்களினால் உண்டாவது. இதை Phychosis என்பர். மூளை மாற்று மின்சார சிகிச்சை மூலம் இவரைக் குணப்படுத்தலாம். தக்க சமயத்தில் அவரைப் பிடித்ததால், பல உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கின்றன!'' என்றார் டாக்டர்.

கொலை... அம் மணம்... ஆன்மிகம்!

மதுரை சிறை மருத்துவமனை வட்டாரத்தில் விசாரித்தபோது, ''சிகிச்சை நடந்துவருகிறது. டாக்டர் களின் முழு அறிக்கை வந்தபிறகே மேற்கொண்டு சொல்ல முடியும்...'' என்கிறார்கள்.

'சென்னை சைக்கோ கொலைகாரன் மாதிரி திண்டுக்கல்லிலும் கிளம்பிவிட்டானோ!' என்ற மக்களின் பீதியை அமைதியாக்கியிருக்கிறது காவல்துறை.

- மு.பரணி சுந்தரம்