Published:Updated:

எகிறும் உர விலை...

எகிறும் உர விலை...

கிர்ர்ரடித்து நிற்கும் விவசாயிகள்...
எகிறும் உர விலை....
எகிறும் உர விலை...
எகிறும் உர விலை...

'நிஷா' புயலைத் தொடர்ந்த வெள்ளத் தாண்டவத்தால் விக்கித்துப் போயி ருக்கும் விவசாயிகளை, மேலும்உலுக்கிப் போட்டிருக்கிறது உரவிலை உயர்வு!

''பிரபல உரத் தயாரிப்பு நிறுவனமான 'ஸ்பிக்' நிறுவனத்தின் விநியோகக் குளறுபடிகளால், குறிப்பிட்ட ஒரு வகை உரம் மட்டும் கண்டபடி விலை உயர்ந்துவிட்டது!'' என மார்க்சிஸ்ட்களும் ம.தி.மு.க-வினரும் புகார் கிளப்புகிறார்கள். இது தொடர்பாக சி.ஐ.டி.யு-வின் மாநிலச் செயலாளர் கருமலையானிடம் கேட்டோம்.

''தூத்துக்குடியில் உள்ள 'ஸ்பிக்' நிறுவனம் உர உற்பத்தியை அடிக்கடி நிறுத்தி விடுவதால், செயற்கையான உரத்தட்டுப்பாடு ஏற்படுகிறது. அதன்படி, இந்த வருஷமும் உரத்தட்டுப் பாடு ஏற்படும் அபாயம் இருப்பதைச் சுட்டிக்காட்டி, எங்கள் எம்.பி-யான பெல்லார்மின் தலைமையில் நவம்பர் 16-ம் தேதி தூத்துக்குடியில் நடைபயணம் மேற் கொண்டோம். 'ஸ்பிக்' நிறுவனம் எதிரிலேயே நவம்பர் 20-ம் தேதி பொதுக்கூட்டம் நடத்தி உடனடியாக உர உற்பத்தியைத்

தொடங்க வலியுறுத்தினோம். அப்புறம் தான், அந்த நிறுவனத்தின் உயரதிகாரிகள் சிலரை முதல் வரே நேரில் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் விளைவாக நவம்பர் 24-ம் தேதியிலிருந்து உர உற்பத்தியைத் தொடங்கி னார்கள். இப்போது உற்பத்தி செய்யப்படும் 'ஸ்பிக் 2020 காம்ப்ளக்ஸ்' அடியுரமாக எல்லாப் பயிர்களுக்கும் தேவைப்படுகிறது. ஆனால், அதைப் போதிய அளவில் உற்பத்தி செய்யாததால்... தட்டுப்பாடு தொடர்கிறது. அதனால் கூடுதல் விலை கொடுத்து அந்த உரத்தை வாங்க வேண்டியிருப்பதாக விவசாயிகள் சொல் கிறார்கள். நெல் நடவு நேரத்தில் 'ஸ்பிக்' நிறுவனத்தால் இப்படி சோதனைகள் எழுவதை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறோம். விரைவில் அடுத்தகட்டப் போராட்டத்தில் இறங்குவோம்...'' என்றார் காட்டமாக.

தூத்துக்குடி மாவட்ட ம.தி.மு.க செயலாளரான ஜோயல் நம்மிடம், ''ஸ்பிக் நிறுவனம் டி.ஏ.பி. உரம், யூரியா ஆகியவற்றைத்தான் அதிக அளவில் உற்பத்தி செய்யும். எப்போதாவதுதான் 2020 காம்ப்ளக்ஸ் உர உற்பத்தியில் இறங்கும். இந்த

எகிறும் உர விலை...

வருடம் காம்ப்ளக்ஸ் உரத்தை விநியோகம் செய்வதில் குளறுபடி நடப்பதாக உர விற்பனை ஏஜென்ட்கள் சொல்கிறார்கள். அதாவது ஒரு டன் காம்ப்ளக்ஸ் உரத்தை 6,500 ரூபாய்க்கு ஏஜென்ட்டுக்குக் கொடுக்கவேண்டும். அதை வாங்கி உர விற்பனையாளர்கள் 50 கிலோ மூட்டையை 327 ரூபாய்க்கு விவசாயிகளுக்குக் கொடுப்பார்கள். ஆனால், இந்த வருடம் அந்த நிறுவனம் எல்லா ஏஜென்ட்களுக்கும் உரத்தைக் கொடுக்காமல், குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே கூடுதலாகப் பணம் பெற்றுக் கொண்டு உரத்தைக் கொடுத்திருக்கிறது. கூடுதலாக பெறப் பட்ட தொகைக்கு ரசீது கிடையாது. அதாவது, அந்தத் தொகை கணக்கில் வராது. அப்படிச் செய்ததில்தான் முறைகேடு நடந்திருக்கிறது. இப்படி கணக்கில் வராமல் கூடுதல் தொகை கொடுத்து வாங்க எல்லா எஜென்ட்களும் முன்வரமாட்டார்கள் என்பதால்தான், எல்லோருக்கும் உரம் சப்ளை செய்யாமல், தங்களுக்குச் சாதகமாக இருக்கும் சிலருக்கும் மட்டும் உரம் சப்ளை செய்திருக்கிறார்கள் ஸ்பிக் அதிகாரிகள். இதன் மூலம் பல லட்ச ரூபாய்க்கு முறைகேடு நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது...'' என்றவர்,

எகிறும் உர விலை...

''இந்த முறைகேடுகளால் விவசாயிகளுக்கு 327ரூபாய்க்குக் கிடைக்கவேண்டிய உர மூட்டை, 500 ரூபாய்க்கு விற்கப் படுகிறது. ஏஜென்ட்களிடம் கேட்டால், 'நாங்கள் டன்னுக்கு ரெண்டாயிரம் வரைக்கும் கூடுதலாகக் கொடுத்திருக்கோம். அதனால், இதுக்குக் குறைவா விற்க முடியாது!' என்கிறார்கள். அரசு நிர்ணயித்த விலைக்கு உரம் விற்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய அதிகாரிகளோ... கண்டும் காணாமல் இருக்கிறார்கள். விளைநிலங்கள் எல்லாம் வீட்டு மனைகளாக மாறிக்கொண்டு இருக்கையில், அடி உரம் விற்பதிலும் மோசடிகள் நடந்தால், விவசாயம் பார்க்கும் கொஞ்சநஞ்ச ஆட்களும் வேறு வேலைக்குப் போய் விடுவார்கள். அதை உணர்ந்து தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்!'' என்றார்.

'தமிழ்நாடு உர விற்பனையாளர் சங்க' செயற்குழு உறுப்பினரான 'மின்னல்' முகமதுஅலியிடம் இந்த பிரச்னை பற்றி கேட்டோம்.

''வழக்கமா சிறிய, பெரிய ஏஜென்ட்கள்னு எல்லாருக்கும் உரம் சப்ளை

எகிறும் உர விலை...

பண்ணுவாங்க. ஆனா, இந்த முறை எங்களைப் போன்றவர்கள் கேட்டதற்கு, 'ஏ கிரேட் ஏஜென்ட்களுக்கு மட்டும்தான் கொடுப்போம். நிர்வாக நடவடிக்கையா நாங்க எடுத்திருக்கும் சில முடிவுகளுக்கு நீங்க உடன்பட மாட்டீங்க. அதனால, உங்களுக்கு காம்ப்ளக்ஸ் உரத்தைக் கொடுக்க முடியாது'னு 'ஸ்பிக்' அதிகாரிங்க சொல்லிட்டாங்க. கிராமப் பகுதிகள்ல இருக்குற விவசாயிகள் ஏ-கிரேடு ஏஜென்ட்களைத் தேடி நகரத்துக்குப் போய்த் திண்டாடுறாங்க. எங்களுக்கும் தொழில் நடத்த முடியல. விவசாயிகளுக்கு உரிய விலையில தட்டுப்பாடு இல்லாம உரம் கிடைக்க, அனைத்து ஏஜென்ட்களுக்கும் உரத்தை வழங்க நடவடிக்கை எடுக்கணும்!'' என்றார்.

இது குறித்து தூத்துக்குடி 'ஸ்பிக்' நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு மண்டல மேலாளர் ராஜேந்திரனிடம் கேட்டதற்கு, ''நீண்ட நாட்களுக்கு பிறகு எங்க நிறுவனம் இப்போதுதான் உர உற்பத்தியை ஆரம்பிச்சிருக்கு. அதிலும் காம்ப்ளக்ஸ் உரத்தை சிறிய அளவில் உற்பத்தி செஞ்சுட்டிருக்கோம். அதனால்தான் எல்லா ஏஜென்ட்களுக்கும் கொடுக்க முடியலை. ஏற்கெனவே, எங்களிடம் பணம் கட்டி நிலுவையில் இருந்த ஏஜென்ட்களுக்கு மட்டுமே இப்போது உரம் தந்திருக்கோம். கூடிய சீக்கிரம் எல்லா ஏஜென்ட்களுக்கும் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது தவிர, உரத்துக்குக் கூடுதல் தொகை வசூலிப்பதாகச் சொல்வதில் கொஞ்சமும் உண்மை இல்லை!'' என்றார் உறுதியாக.

ஆனால் கடைகளிலோ... 327 ரூபாய் விற்ற காம்ப்ளக்ஸ் உரம் மூட்டை ஐந்நூறு ரூபாய்க்கு விற்றுக் கொண்டுதான் இருக்கிறது!

- ஆண்டனிராஜ்