Published:Updated:

இருளை நோக்கித் தமிழகம்...

இருளை நோக்கித் தமிழகம்...

விழித்துக்கொள்வாரா ஆற்'கட்'டார்...
இருளை நோக்கித் தமிழகம்...
இருளை நோக்கித் தமிழகம்...
இருளை நோக்கித் தமிழகம்...

''தமிழக அரசு மேற்கொண்ட போர்க்கால நடவடிக்கைகளால் டிசம்பரிலிருந்து வரும் ஏப்ரல் மாதம் வரை தமிழகத்தில் மின்வெட்டே இருக்காது!'' என்று அறிவித் திருக்கிறார் மின்துறை அமைச்சர் ஆற்'கட்'டார்... ஸாரி ஆற்காட்டார்.

ஆனால், ''அரசின் மெத்தனப் போக்காலும் நிர்வாகக் கோளாறுகளாலும் வருங்காலங்களில் மின் வெட்டுப் பிரச்னை இப்போது இருப்பதைவிடவும் மோசமாகப் போகிறது!'' என்று பதற வைக்கிறார் 'தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின்' மாநில துணைத் தலைவர் குமாரவேல்.

இது தொடர்பாக அவரை சந்தித்தபோது, ''தமிழ் நாட்டில் இருக்கிற தூத்துக்குடி, மேட்டூர், வட சென்னை, எண்ணூர் அனல் மின்நிலையங்களுக்கு

வடமாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளிருந்தும் நிலக்கரி கொண்டு வரப்படுகிறது. லட்சக்கணக்கான டன்கள் அளவுக்குக் கொள்முதல் செய்யப்படும் இந்த நிலக்கரி இறக்குமதி விவகாரத்தில், அதிகாரிகள் புகுந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி தரமற்று இருப்பதாக சமீபகாலமாக குற்றசாட்டு கிளம்பி வருகிறது. அரசோ இதை மறுக்கிறது. ஆனால்,

தொடர் மின்சாரத் தட்டுப்பாட்டுக்கு மக்களிடம் சரியான காரணம் சொல்லமுடியாமல் திணறி வரும் தமிழக அரசும் மின்சார வாரியமும்... இப்போது நிலக்கரி கொள்முதல் விவகாரத்திலும் சரியான திட்டமிடல் இல்லாமல் திணறுகின்றன. நிலக்கரி கொள்முதல் தொடர்பாக வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் போகும் அதிகாரிகளிடம், அங்கி ருக்கும் நிலக்கரி நிறுவனங்கள் அதிக எரிதிறன் கொண்ட சூப்பரான நிலக்கரியை சாம்பிளாகக் காட்டுகின்றன. அதோடு, அதிகாரிகளையும் அவர்கள் மூலம் பொறுப்பான அரசியல்வாதிகளையும் அந்த நிறுவனங்கள் 'உரிய முறையில் கவனித்து' அனுப்பி விடுகின்றன.

இருளை நோக்கித் தமிழகம்...

'கவனித்த' தைரியத்தில் நிலக்கரி நிறுவனங்கள், சாம் பிளுக்குக் காட்டிய தரமான நிலக்கரியை அனுப்பு வதற்கு பதிலாக தரம் குறைவான நிலக்கரியை அனுப்பி விடுகின்றன. இப்படி வந்திறங்கும் நிலக்கரி சாம்பிளின் அதே தரத்தில் இருக்கிறதா என்பதை எந்த அதிகாரியும் சோதனை செய்வது கிடையாது. இப்படி உள்ளே வரும் தரம் குறைவான நிலக்கரியைக் கொண்டு உற்பத்தி செய்வதால்தான், பற்றாக்குறையை சமாளிக் கும் அளவுக்கு மின்சாரத்தை நம்மால் உற்பத்தி செய்ய முடியவில்லை. நிலக்கரி கொள்முதல் விவகாரத் தில் கவனமாகவும் நேர்மை யாகவும் இருந்திருந்தால், தமிழகத்தில் இந்த அளவுக்கு மோசமாக மின் பற்றாக்குறை வந்திருக்காது!'' என்றவர்,

''இப்படி தரம் குறைந்த நிலக்கரியையும்கூட போதுமான அளவுக்கு வாங்கி ஸ்டாக் வைக்காமல் அதிகாரிகள் கோட்டை விட்டுவிட்டார்கள். அதனால், இனிவரும் காலங்களில் தமிழகத்தின் மின் உற்பத்தி இதைவிட மோசமான நிலைக்குப் போகும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. பொதுவாக தமிழக அனல் மின்நிலையங்களில் இருபத்தோரு நாட்களுக்குத் தேவையான நிலக்கரி முன்னதாகவே ஸ்டாக் வைக்கப்படும். ஆனால், இப்போது அப்படி இல்லை. உதாரணத்துக்கு எடுத்துக் கொண்டால், தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் இன்னும் ஐந்தாறு நாட்களுக்கு மட்டும்தான் நிலக்கரி ஸ்டாக் இருக்கிறது. கப்பலில் வந்திறங்கும் நிலக்கரியை உடனுக்குடன் பயன்படுத்த வேண்டிய நிலைதான் அங்கே இருக்கு. திடீரென புயல், மழை ஏற்பட்டு கப்பல் வருவதில் தாமதம் ஏற்பட்டால் இருளில் மூழ்கவேண்டியதுதான்.

ஆக மொத்தம், நிலக்கரி இறக்குமதி விஷயத்தில் நடக்கும் ஊழல் மற்றும் ஊழியர் பற்றாக்குறை ஆகிய காரணங்களால் தமிழ்நாட்டில் மின்சாரத் தட்டுப்பாடு தொடரும்!'' என்ற பகீரோடு முடித்தார் குமாரவேல்.

இது தொடர்பாக தூத்துக்குடி அனல் மின் நிலைய அதிகாரி ஒருவரிடம்

இருளை நோக்கித் தமிழகம்...

விசாரித்தோம். ''நீங்கள் சொல்றது உண்மைதான், சார்! மின் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிற இந்த நேரத்தில் அனைத்து பிளான்ட்டுகளையும் இயக்கினால் பிரச்னையை ஓரளவுக்கு சமாளிக்கலாம். ஆனால், நிலக்கரி பிரச்னையால் இங்கிருக்கும் பிளான்ட்டுகள் ஒவ்வொண்ணா நிறுத்தப்பட்டு வருது. இதனால் நாளுக்கு நாள் மின் உற்பத்தி குறைஞ்சிக்கிட்டே போகுது. நவம்பர் மாதத் தொடக்கத்தில் இருந்த மின் உற்பத்தியை விட, இப்போ குறைவாத்தான் உற்பத்தி இருக்கு. அநேகமா எல்லா அனல் மின்நிலையங்களிலும் இதுதான் நிலைமை. இப்படியே போனால், மின் பற்றாக் குறை நாளுக்கு நாள் மோசமாகவே செய்யும். மழைக்காலமாக இருப்பதால் லட்சக்கணக்கான விவசாய மோட்டார்கள் இயங்காமல் இருக்கு. மழை விட்டு அவை மறுபடியும் இயங்க ஆரம்பித் தால், மின் தேவை அதிகமாகும். இப்போ நிலக் கரிக்கு பதிலாக பெரும்பகுதி ஃபர்னஸ் ஆயிலை பயன்படுத்திக்கிட்டு இருக்கோம். நிலக்கரியை விடவும் இது கூடுதல் செலவாகும். ஆனாலும், நிலமையை சமாளிக்க வேறு வழியில்லையே...'' என்றார் அந்த அதிகாரி.

நிலக்கரி இறக்குமதியில் அதிகாரிகளுக்கு நோட்டுக் கட்டு பிரசாதம் கிடைப்பது ஒரு பக்கம் இருக்க, உள்ளூர் அரசியல்வாதிகள் சிலருக்கு 'சாம்பல் நிலக்கரி' வியாபாரம் ஜோராக நடப்பது குறித்து அ.தி.மு.க. தரப்பு சீரியஸாக நோண்டிக் கொண்டிருப்பதுதான் இதில் லேட்டஸ்ட் தகவல்!

- எஸ்.சரவணப்பெருமாள்
படங்கள் எல்.ராஜேந்திரன்