''நான் முதன் முதலாக டெல்லியில் பிரதமர் இந்திராகாந்தி தலைமையில் நடைபெற்ற முதல்வர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசும்போது, 'சேலம் இரும்பாலை, சேது சமுத்திரத் திட்டம் ஆகியவை தமிழ்நாட்டுக்குத் தேவை' எனவும், 'இந்தியாவில் இருக்கிற பெரிய வங்கிகளை தேசியமயமாக ஆக்குங்கள். அப்படிச் செய்தால் சாதாரணமானவர்களுக்குச் சுலபமாக கடன் கிடைக்கும்' என்றும் பேசினேன். சில மாதங்களுக்குப் பிறகு பிரதமர் இந்திரா காந்தி வங்கிகளை தேசியமயமாக்கி ஆணை பிறப்பித்தார்!''
-கடந்த நவம் பர் 26-ம் தேதி மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு மணி மேகலை விருது வழங்கும் விழா வில் முதல்வர் கருணாநிதி பேசியதுதான் மேற்கண்டது.
வரலாற்றுப் புரட்டல் என்பது இதுதான்! பிரதமர் இந்திரா காந்தி 1969-ம் ஆண்டு ஜூலை 19-ம் தேதி 14 வங்கிகளைத் தேசிய மயமாக்கும் ஆணையைப் பிறப்பித்தார்.
ஆனால், வங்கிகள் தேசியமய மாக்கப்பட வேண்டும் என்ற திட்டம் குறித்து, பிரதமராக நேரு இருந்த காலத்திலேயே தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. 1963 அக்டோபரில் திட்டக்குழு உறுப்பினராக இருந்த டாக்டர் வி.கே.ஆர்.வி.ராவுடன் இந்தத் திட்டம் குறித்து நேரு கலந்து ஆலோசித்தார்.
'சந்தையில் விற்கப்படும் வங்கி களின் பங்குகளை அவ்வப்போது வாங்குமாறு ஆயுள் காப்பீட்டுக் கழகத்துக்கு உத்தரவு பிறப்பியுங்கள். போதுமான அளவுக்குப்
பங்குகள் வாங்கப்பட்டதும் வங்கிகள் தேசிய மயமாக்கப்படுவது எளிதாகிவிடும்' என்றும் அப்போது நேருவிடம் ராவ் யோசனை கூறினார்.அதன்படியே நேருவும் ஆணை பிறப்பித்தார்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவராக காமராஜர் பொறுப் பேற்ற பிறகு, இந்தத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்றும்படி நேருவிடம் வற்புறுத்தினார்.
நேரு அவர்களின் உடல் நலக் குறைவும், நாட்டின் அரசியல் நிலைமையும் இவற்றுக்குத் தடையாக இருந்துவிட்டன. அவருடைய மறைவுக்குப் பிறகு பிரதமர் லால்பகதூர் காலத் திலும் இந்தத் திட்டம் பற்றி தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. அப்போது நிதி அமைச்சராக இருந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரி இதற்கான நகல் திட்டத்தைக்கூட தயாரித்து விட்டார். ஆனால், எதிர்பாராதவிதமாக பாகிஸ் தானுடன் போர் மூளவே, திட்டம் பின் னுக்குத் தள்ளப்பட்டது. போரைத் தொடர்ந்து டி.டி.கிருஷ்ணமாச்சாரியின் பதவி விலகல், லால் பகதூரின் எதிர்பாராத மறைவு ஆகியவை மீண்டும் இந்தத் திட்டத்துக்கு முட்டுக்கட்டை ஆயின.
1966-ம் ஆண்டு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டது.
1967-ம் ஆண்டு ஜூன் மாதம் 23, 24, 25 ஆகிய தேதிகளில் டெல்லி யில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் குழு கூட்டத்தின் தலைவர் காமராஜர் 10 |