Published:Updated:

ரணகள ரவீந்திரன்?

ரணகள ரவீந்திரன்?

அதிர்ச்சியில் அரசு ஊழியர்கள் !
ரணகள ரவீந்திரன்?
ரணகள ரவீந்திரன்?
ரணகள ரவீந்திரன்?

'ஒட்டுமொத்த அரசு ஊழியர்களின் பாது காவலர் எங்கள் அரசுதான்!' என்று அடிக்கடி பெருமிதப்படுவது முதல்வர் கருணாநிதியின் இயல்பு. ஆனால், அரசு ஊழியர்கள் அவருடைய கட்சிக்காரர்களிடம் படும்பாட்டை சொல்லி மாளாது! அந்த வகையில் மதுரையில் தன்னுடைய வீட்டின் முன் குப்பை கொட் டியதைக் கண்டித்த பெண் அரசு ஊழியர் ஒருவரை, சட்டத்துக்குப் புறம்பாகக் காவலில் வைத்த சம்பவம், அரசு ஊழியர்களைப் போராட்ட களத்தில் இறங்கவைத்துவிடும் போலிருக்கிறது!

மதுரை மீனாம்பாள்புரத்தை சேர்ந்தவர் சுசீலா. மதுரை அரசு மருத்துவனையில் மருந்தாளுநராகப் பணிபுரிகிறார். இவரின் கணவர் வரதன், உசிலம்பட்டி போலீஸ்

ஸ்டேஷனில் ஏட்டாக இருக்கிறார். இவர்களுடைய வீட்டை ஒட்டி மதுரை மாநகர தி.மு.க. 1-ம் பகுதி கழக செயலாளர் ரவீந்திரனின் கட்சி அலுவலகம் உள்ளது. இவரைத்தான் சுசீலா குற்றம் சாட்டுகிறார்.நடந்த சம்பவங்களைத் தெரிந்துகொள்ள அவரை சந்தித்தோம்.

''மூணு வருஷமா கட்சி பேரை சொல்லிக்கிட்டு இவங்க எங்களைப் படுத்துறபாடு கொஞ்சநஞ்ச மில்லை. தினமும் வீட்டு வாசல்லயே குடிச்சுட்டுக் கூத்தடிக்கிறாங்க. இதனால அடிக்கடி ரவீந்திரனுக்கும் எனக்கும் வாக்குவாதம் ஏற்படும். நவம்பர் 27-ம் தேதி ராத்திரி கட்சி ஆபீஸ்ல மீட்டிங் நடந்தது. ராத்திரி ரெண்டு மணி வரைக்கும் ஒரே இரைச்சல். விடிஞ்சு எழுந்து பார்த்தா வீட்டு வாசல்ல பிராந்தி பாட்டில், பிளாஸ்டிக் டம்ளருங்கனு ஒரே குப்பை! அதைப் பார்த்துட்டு சத்தம் போட்டேன். அப்ப அங்க வந்த ரவீந்திரன், 'இஷ்டமிருந்தா இரு... இல்லாட்டா நான் சொல்ற விலைக்கு வீட்டை வித்துட்டு ஓடிப்போயிடு!'னு மிரட்டிட்டு

ரணகள ரவீந்திரன்?

போனாரு. அதுக்குப் பின்னாடி அன்னிக்கு ராத்திரி ஒன்பதரை மணிக்கு தல்லாகுளம் ஏ.சி-யான விஜயரகுநாதன், பத்துப் பதினஞ்சு போலீஸ்காரங்களோட வீட்டுக்கு வந்தாரு...'' என்றவர் கண்கலங்கிப் பேச முடியாமல் தவிக்க... அவரின் மூத்த மகள் அங்கயற்கண்ணி தொடர்ந்தார்.

''வந்தவங்க 'என்ன ஏது'னுகூட கேட்காம, அம்மாவை போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்துட்டுப் போயிட்டாங்க. அடுத்தநாள் மதியம் வரைக்கும் அம்மாவை ஸ்டேஷன்ல வெச்சுருந்துட்டு, 29-ம் தேதி சாயந்தரம் கோர்ட்டுல ஆஜர்படுத்தினாங்க. ஸ்டேஷன்ல பண்ண டார்ச்சர்ல, அம்மாவுக்கு உடம்பு முடியாம போயிடுச்சு. அதனால, உடனடியா ஆஸ்பத்திரியில சேர்க்க சொல்லி கோர்ட் ஆர்டர் போட்டுருச்சு. அதுக்கப்புறம், ஜாமீன்ல வந்திருக்காங்க...'' என்றார் வேதனையோடு.

சுசீலாவுக்கு ஆதரவாகக் களமிறங்கி இருக்கும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஜெயச்சந்திரனை சந்தித்தோம். ''சுசீலாவின் கணவர் போலீஸ் ஏட் டாக இருந்தும், அவரால ஒண்ணும் பண்ண முடியலை! கட்சிக்காரங்க மிரட்டுனதுல அவர் தலைமறைவா சுத்திக்கிட்டு இருக்காரு. சுசீலாவோட வீட்டை அடிமாட்டு விலைக்கு மிரட்டி வாங்குறதுதான் ரவீந்திரனோட திட்டம். இந்த ஒரு வருஷத்துல மட்டும் ஏகப் பட்ட அரசு ஊழியர்கள் தி.மு.க-வினரால் தாக்கப்பட்டு இருக்காங்க...'' என்று நிறுத்த... அந்த சம்பவங்களைப் பட்டியலிட்டார், சங்கத்தின் மதுரை மாவட்டச் செயலாளர் செல்வம்.

''பத்து மாசம் முன்னாடி மதுரை திட்ட அலுவலகப் பொறியாளர் அறம் என்பவரை, கான்ட்ராக்டர் ஒருத்தர் தாக்கினாரு. திருமங்கலம் நகராட்சி ஊழியர் வாசுதேவனை நகராட்சித் துணைத் தலைவர் செருப்பால் அடிச்சிருக்கார். ஆனையூர் பஞ்சாயத்துத் தலைவி அய்யம்மாள் ஒரு பில்கலெக்டரைத் தாக்கியிருக்காங்க. நாகர்கோவில்ல அமைச்சர் சுரேஷ் ராஜன் முன்னிலையிலேயே மேடையில் வெச்சு துணை கலெக்டரை அடிச்சிருக்காங்க. ஆர்.எஸ்.மங்களம் யூனியன் கமிஷனர் முருகேசனை, யூனியன் தலைவர் செருப்பால் அடிச்சிருக்காரு. தாக்குனவங்க எல்லாருமே தி.மு.க-காரங்கதான்!

ரணகள ரவீந்திரன்?

இப்ப சுசீலாவை சித்ரவதை செஞ்சிருக்காங்க! இந்தப் பிரச்னைக்குப் பிறகு சுசீலாவோட வீட்டின்முன்பகுதி ரோட்டை ஆக்கிரமிச்சு கட்டியிருக்கிறதா சொல்லி இடிச்சிருக்காங்க. பக்கத்துல இருக்கிற தி.மு.க. அலுவலகம் சுசீலாவோட வீட்டைவிட அதிகமா ரோட்டை மறிச்சு கட்டப்பட்டிருக்கு. நியாயமா பார்த்தா, அதிகாரிங்க அதையும் இடிச்சிருக்கணும்தானே? இந்த விஷயம் பற்றி தமிழக முதல்வருக்கும், தலைமைச் செயலாளருக்கும் புகார் கொடுக்கப் போகிறோம்...'' என்றார்.

சங்கத்தின் மதுரை மாவட்ட தலைவரான சங்கரலிங்கம், ''ஏற்கெனவே கடந்த ஜூலை மாசம் வேலூரில் நடந்த சங்கக் கூட்டத்துல 'அரசு ஊழியர்களைத் தாக்கிய கட்சிக்காரங்க மேல நடவடிக்கை எடுக்கணும்'னு தீர்மானம் நிறைவேற்றி, தலைமைச் செயலாளர்கிட்ட புகாரா கொடுத்திருக்கோம். இப்ப இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கு. இதுக்கும் நடவடிக்கை எடுக்கலைனா, மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபடுவோம்...'' என்றார் ஆவேசமாக.

ரணகள ரவீந்திரன்?

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ரவீந்திரனிடம் பேசினோம். ''அந்தம்மா ரொம்ப நாளாவே இங்க வர்ற கட்சிக்காரங்களை நோக்கி ஆபாசமா, ஆத் திரமா வார்த்தைகளை வீசிக்கிட்டு இருந்தாங்க. வீட்டு முன்னால பைக்கை நிறுத்தினாகூட கெட்ட வார்த்தையில திட்டுறாங்க. அப்படித்தான் அன்னிக்கு விடிகாலையில கட்சி ஆபீஸ்ல இருந்தவங்ககிட்டயும் சண்டை போட்டு ரொம்ப கேவலமா நடந்துகிட்டாங்க. அதனாலதான் புகார் பண்ணோம். போலீஸ் நடவ டிக்கை எடுத்திருக்காங்க. அந்தம்மா வீடு ரோட்டை ஆக்கிரமிச்சு கட்டியிருக்கிறதால, மாநகராட்சியே அந்த ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்தியிருக்கு...'' என்றவரிடம்,

ரணகள ரவீந்திரன்?

''உங்களுடைய கட்சி அலுவலகமும் ரோட்டை ஆக்கிரமித்துதானே கட்டப்பட்டுள்ளது?'' என்றோம். ''அது ஒன்றும் போக்குவரத்துக்கு இடைஞ்சலா இல்லையே..(!)'' என்றொரு புதிய தத்துவம் தந்தார் ரவீந்திரன்.

உதவி கமிஷனர் விஜயரகுநாதனோ, ''புகாரை விசாரிக்க நாங்க போனப்ப, எங்க முன்னாடியே அந்த லேடி அசிங்கமா பேசுனாங்க. வேற வழியில்லாமதான் அரெஸ்ட் பண்ணி நடவடிக்கை எடுக்கவேண்டியதா போச்சு...'' என்றார் இதற்கு சேர்ந்திசையாக!

- டி.எல்.சஞ்சீவிகுமார்
படங்கள் எஸ்.கிருஷ்ணமூர்த்தி