Published:Updated:

கேரளாவில் படகு கவிழ்ந்து 11 பேர் மரணம்; படகை உடைத்து மீட்புப்பணிகள் தீவிரம்!

கேரள படகு விபத்து மீட்புப்பணிகள்

படகு தலைகீழாக கவிழ்ந்த சமயத்தில் சிலர் தண்ணீரில் குதித்து கரையை நோக்கி நீந்தினர். படகு கவிழ்ந்து சேற்றில் புதைந்ததாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

Published:Updated:

கேரளாவில் படகு கவிழ்ந்து 11 பேர் மரணம்; படகை உடைத்து மீட்புப்பணிகள் தீவிரம்!

படகு தலைகீழாக கவிழ்ந்த சமயத்தில் சிலர் தண்ணீரில் குதித்து கரையை நோக்கி நீந்தினர். படகு கவிழ்ந்து சேற்றில் புதைந்ததாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

கேரள படகு விபத்து மீட்புப்பணிகள்

கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் தானூரை அடுத்துள்ள ஓட்டுப்புறம் கடற்கரை சுற்றுலாத் தலமாக இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் கடற்கரையில் குவிந்தனர். கடற்கரையை ஒட்டிய பகுதியிலுள்ள தூவல் ஆற்றில் சுற்றுலாப் பயணிகளுக்கான படகு சவாரி நடைபெற்றுவருகிறது.

இன்று இரவு சுமார் 7:30 மணியளவில் சுமார் 40-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் ஒரு படகில் பயணம் மேற்கொண்டனர். படகு புறப்பட்டு சுமார் 100 மீட்டர் தூரம் சென்றதும் ஒரு பக்கமாக சாய்ந்து விபத்து நடந்திருக்கிறது. படகு தலைகீழாகக் கவிழ்ந்த சமயத்தில் சிலர் தண்ணீரில் குதித்து கரையை நோக்கி நீந்தினர். படகு கவிழ்ந்து சேற்றில் புதைந்ததாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த விபத்தில் நான்கு குழந்தைகள் உட்பட 11 பேர் தண்ணீரில் மூழ்கி மரணம் அடைந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. சுமார் 16 பேர் மீட்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. மலப்புறம், கோழிக்கோடு மாவட்டங்களிலுள்ள தீயணைப்பு வீரர்கள் மீட்புப்பணிக்காக ஈடுபடுத்தப்பட்டனர்.

மீட்புப்பணிகள்
மீட்புப்பணிகள்

மேலும், படகை உடைத்து சுற்றுலாப் பயணிகளை மீட்கும் பணி நடைபெற்றுவருகிறது. இரவு நேரம் என்பதால், மீட்புப்பணியில் தொய்வு ஏற்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் பயணிகளை ஏற்றிச் சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், லைஃப் ஜாக்கெட் அணியாமல் இருந்ததும் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க காரணமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. அமைச்சர்கள் முஹம்மது ரியாஸ், அப்துல் ரஹ்மான் உள்ளிட்டவர்கள் அந்த பகுதிக்குச் சென்று மீட்புப்பணியைத் துரிதப்படுத்தி வருகின்றனர்.

கேரளா படகு விபத்து மீட்புப்பணிகள்
கேரளா படகு விபத்து மீட்புப்பணிகள்

இது குறித்து அமைச்சர் அப்துல் ரஹ்மான், "மாலை 5 மணிக்கு மேல் படகு ஓட்டக் கூடாது என்பது விதிமுறை. அது குறித்து பின்னர் விசாரிக்கப்படும். படகு தலைகீழாகக் கவிழ்ந்திருப்பதால் சுமார் 11 பேர் மரணமடைந்திருக்கின்றனர். மீட்புப்பணிகள் வேகமாக நடந்துவருகின்றன" என்றார். மரண எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.