Published:Updated:

ரூ.4,000 லஞ்சம்; சிக்கிய ஜிஎஸ்டி அதிகாரி... வீட்டை சோதனையிட்டதில் சிக்கிய பணம் எவ்வளவு தெரியுமா?

ஜிஎஸ்டி அதிகாரி
News
ஜிஎஸ்டி அதிகாரி

அஸ்ஸாமில் ஒரே நாளில் இரண்டு அரசு அதிகாரிகள் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கும்போது, விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரக அதிகாரிகளால் வசமாகப் சிக்கவைக்கப்பட்டனர்.

Published:Updated:

ரூ.4,000 லஞ்சம்; சிக்கிய ஜிஎஸ்டி அதிகாரி... வீட்டை சோதனையிட்டதில் சிக்கிய பணம் எவ்வளவு தெரியுமா?

அஸ்ஸாமில் ஒரே நாளில் இரண்டு அரசு அதிகாரிகள் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கும்போது, விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரக அதிகாரிகளால் வசமாகப் சிக்கவைக்கப்பட்டனர்.

ஜிஎஸ்டி அதிகாரி
News
ஜிஎஸ்டி அதிகாரி

அஸ்ஸாம் மாநில ஜி.எஸ்.டி ஆணையர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக மாட்டிக்கொண்ட பெண் அதிகாரி வீட்டில் 65 லட்ச ரூபாய் கைப்பற்றப்பட்ட சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது.

அஸ்ஸாம் மாநில வரித்துறை உதவி ஆணையர் மீனாட்சி ககாதி கலிதா, ஜி.எஸ்.டி ஆன்லைன் செயல்பாடுகளை மீண்டும் செயல்படுத்துவதற்கு ஒருவரிடம் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதன் பின்னணி வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

மாநில ஜிஎஸ்டி ஆணையர் அலுவலகம் - அஸ்ஸாம்
மாநில ஜிஎஸ்டி ஆணையர் அலுவலகம் - அஸ்ஸாம்

இதில் மீனாட்சி ககாதி கலிதா ஒருவழியாக, பத்தாயிரத்திலிருந்து எட்டாயிரம் ரூபாய்க்கு இறங்கி வந்த பிறகு, சம்பந்தப்பட்ட நபர் லஞ்சம் தர மறுத்து அஸ்ஸாம் விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகத்தில் புகாரளித்திருக்கிறார்.

லஞ்சம் பெற்ற மீனாட்சி ககாதி கலிதா கைது
லஞ்சம் பெற்ற மீனாட்சி ககாதி கலிதா கைது

அதைத் தொடர்ந்து, அவரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டபோது, 65,37,500 ரூபாய் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. இறுதியில் கைதுசெய்யப்பட்ட மீனாட்சி ககாதி கலிதா மீது நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் ஊழல் தடுப்புச் சட்டம், 1988-ன் படி (2018ல் திருத்தப்பட்டது) அவர்மீது வழக்கு பதிவுசெய்தனர்.

லஞ்சப் பணம் பறிமுதல்
லஞ்சப் பணம் பறிமுதல்

இதேபோல் நேற்று மற்றுமொரு சம்பவத்தில், நிலத்துக்கான பட்டா வழங்க நான்காயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட கம்ரூப் கிராமப்புற வட்ட அதிகாரி மகேந்திர நாத்தை, ஊழல் தடுப்பு அதிகாரிகள் கையும் களவுமாகப் பிடித்துக் கைதுசெய்தனர். மகேந்திர நாத் மீதும் ஊழல் தடுப்புச் சட்டம், 1988-ன்படி அதிகாரிகள் வழக்கு பதிவுசெய்தனர்.