Published:Updated:

பட்டப்பகலில் திமுக கவுன்சிலர் மகனுக்கு அரிவாள் வெட்டு! - திருவள்ளூரில் பரபரப்பு

திருவள்ளூர்
News
திருவள்ளூர்

தி.மு.க கவுன்சிலரின் மகனை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பினர். இது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Published:Updated:

பட்டப்பகலில் திமுக கவுன்சிலர் மகனுக்கு அரிவாள் வெட்டு! - திருவள்ளூரில் பரபரப்பு

தி.மு.க கவுன்சிலரின் மகனை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பினர். இது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

திருவள்ளூர்
News
திருவள்ளூர்

திருவள்ளூர் நகராட்சியில் 16-வது வார்டு தி.மு.க கவுன்சிலராக இருப்பவர் இந்திரா பரசுராமன். இவரின் மகன் கலைவாணன், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே மருந்தகம் வைத்து நடத்திவருகிறார்.

கடந்த வாரம் கவுன்சிலர் பரசுராமன் மகன் கலைவாணனுக்கும், அவரின் நண்பர்களுக்குமிடையே சண்டை நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை வழக்கம்போல் கலைவாணன் தனது மருந்தகத்துக்குச் சென்றிருக்கிறார். திடீரென நான்குக்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் கத்தியுடன் மருந்தகத்துக்குள் நுழைந்து, கலைவாணனின் தலை, உடல் முழுவதும் பல இடங்களில் வெட்டிவிட்டுத் தப்பித்திருக்கின்றனர்.

நிகழ்விடம்
நிகழ்விடம்

அதையடுத்து அருகிலிருந்தவர்கள் கலைவாணனை மீட்டு எதிரிலுள்ள திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். கலைவாணன் தற்போது ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்

பட்டப்பகலில் தி.மு.க கவுன்சிலரின் மகன் வெட்டப்பட்ட சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்த திருவள்ளூர் நகர காவல்துறையினர் தாக்குதலுக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்துவருகின்றனர்.

அரசு மருத்துவமனை
அரசு மருத்துவமனை

மேலும் அசம்பாவிதங்களைத் தடுக்கும்பொருட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனை அருகே போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.