Published:Updated:

தேனி: யாசகம் கேட்ட சிறுவர்களுக்கு உணவு வாங்கித்தந்த முதியவருக்கு அடி, உதை; ஹோட்டல் ஊழியர்மீது வழக்கு

முதியவருக்கு அடி, உதை
News
முதியவருக்கு அடி, உதை

ஹோட்டல் ஊழியர்கள், `​இது போன்ற நபர்களையெல்லாம் இங்கு கூட்டிவந்து ​சாப்பிடவைத்தால், வாடிக்கையாளர்களின் வருகை குறையும்' என​க் கடுமையாகப் பேசியிருக்கின்றனர்.

Published:Updated:

தேனி: யாசகம் கேட்ட சிறுவர்களுக்கு உணவு வாங்கித்தந்த முதியவருக்கு அடி, உதை; ஹோட்டல் ஊழியர்மீது வழக்கு

ஹோட்டல் ஊழியர்கள், `​இது போன்ற நபர்களையெல்லாம் இங்கு கூட்டிவந்து ​சாப்பிடவைத்தால், வாடிக்கையாளர்களின் வருகை குறையும்' என​க் கடுமையாகப் பேசியிருக்கின்றனர்.

முதியவருக்கு அடி, உதை
News
முதியவருக்கு அடி, உதை

​கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், கருநாகப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சித்திக் (62). கேரளாவிலுள்ள தங்கும் விடுதியில் மேலாளராகப் பணிபுரிந்துவரும் இவர், சொந்த வேலை காரணமாக ​தேனிக்கு வந்து அங்கிருந்து ​ராமநாதபுரம், ஏர்வாடிக்குச் செல்​லவிருந்தார். ​தேனி​ புது பஸ் ஸ்டாண்டுக்கு வந்த அவர், எதிரே இருந்த (தட்டி விலாஸ்) ஹோட்டலில் ​சாப்பிட்டுவிட்டு ​மதியம் 3 மணி அளவில் ​வெளியே வந்திருக்கிறார். அப்​போது ​வெளியே உடலில் சாட்டையடித்து யாசகம் கேட்கும் சிறுவர்களும், அவர்களின் தாயார்களும் யாசகம் கேட்டிருக்கின்றனர்.

யாசகம் கேட்டு சாப்பிட்ட சிறுவர்கள், பெண்கள்
யாசகம் கேட்டு சாப்பிட்ட சிறுவர்கள், பெண்கள்

அதற்கு, `யாசகமாகப் ​பணம் தர இயலாது... வேண்டுமெனில் சாப்பாடு வாங்கித் தருகிறேன்' என ​சித்திக் ​கூறியிருக்கிறார். அதற்கு சிறுவர்களும் ஒப்புக்கொண்டனர். அதையடுத்து சிறுவர்களையும், அவர்களின் தாயார்களையும் அதே ஹோட்டலில் அமர​வைத்து உணவு ​சாப்பிட வைத்திருக்கிறார். ​

பின்னர் அவர்கள் சாப்பிட்ட உணவுக்கு ​ஹோட்டலில் ​பணம் கொடுத்துவிட்டு வெளியே வந்​திருக்கிறார். அப்போது மேலும் சில சிறுவர்கள் சூழ்ந்து​கொண்டு​ யாசகம் கேட்க, அவர்களையும் அதே ஹோட்டலில் உணவு சாப்பிட வைத்திருக்கிறார் சித்திக். இந்த நிலையில், இன்னும் சில சிறுவர்கள், பெண்கள் யாசகம் கேட்க, தன்னிடம் பணம் குறைவாக இருக்கிறது​ எனக் கூறி 100​ ​ரூபாயைக் கொடுத்திருக்கிறார் சித்திக். 

​அப்போது ​ஹோட்டல் ஊழியர்கள், `​இது போன்ற நபர்களையெல்லாம் இங்கு கூட்டி வந்து ​சாப்பிடவைத்தால், வாடிக்கையாளர்களின் வருகை குறையும்' எனக் கடுமையாகப் பேசியிருக்கின்றனர். இதை ஏற்க மறுத்த சித்திக்குக்கும், ஹோட்டல் ஊழியர்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த ஹோட்டல் ஊழியர்கள் சித்திக்கை​ அடித்து, உதைத்திருக்கின்றனர். இதில் ​பலத்த காயமடைந்த சித்திக், தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.​ ​

ஹோட்டலுக்கு வெளியே யாசகம் கேட்டு காத்திருந்தவர்கள்
ஹோட்டலுக்கு வெளியே யாசகம் கேட்டு காத்திருந்தவர்கள்

இது ​குறித்து அவர் அளித்த புகாரின்பேரில், ஹோட்டல் ஊழியரான கோவிந்தராஜ்மீது தேனி நகர் ​போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர். ​

யாசகம் கேட்ட​வர்​களுக்கு உணவு வாங்​கிக்கொடுத்த முதியவர் தாக்கப்பட்ட சம்பவம், ​தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.