Published:Updated:

விருதுநகர்: அரசு அதிகாரியிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட திமுக, கூட்டணிக் கட்சியினர்? - போலீஸ் விசாரணை

வாக்குவாதம்
News
வாக்குவாதம்

விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியில் அரசு பெண் அதிகாரியிடம் அநாகரிகமான முறையில் நடந்துகொண்ட கட்சிப் பிரமுகர்‌கள்‌மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இது குறித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

Published:Updated:

விருதுநகர்: அரசு அதிகாரியிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட திமுக, கூட்டணிக் கட்சியினர்? - போலீஸ் விசாரணை

விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியில் அரசு பெண் அதிகாரியிடம் அநாகரிகமான முறையில் நடந்துகொண்ட கட்சிப் பிரமுகர்‌கள்‌மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இது குறித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

வாக்குவாதம்
News
வாக்குவாதம்

விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி தாலுகாவுக்குட்பட்ட கம்பிக்குடி ஊராட்சி தரகநேந்தல் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்துக்குப் பணித்தள பொறுப்பாளர் வேலைக்கு ஆள் நியமனம் செய்ய வேண்டியிருந்தது. தொடர்ந்து, இந்த வேலைத்திட்ட பொறுப்பாளர் பணிக்கு ஆள்கள் நியமிப்பதில் உள்ளூர் தி.மு.க-வின் இருதரப்பினரிடையே இருவேறு கருத்து நிலவி வந்ததாகத் தெரிகிறது. இதனால் ஆள் நியமனத்தில் தொடர் இழுபறி நீடித்துவந்திருக்கிறது.

வாக்குவாதம்
வாக்குவாதம்

இந்த நிலையில், 100 நாள் வேலைத்திட்ட பணித்தள பொறுப்பாளர்‌ இடத்துக்கு ஆள் நியமிப்பது தொடர்பாக, தி.மு.க ஒன்றியச் செயலாளர்‌ ஒருவரின் தலைமையில் ஒருதரப்பாகவும், மாற்றுக் கருத்துடையவர்கள் இன்னொரு தரப்பாகவும் இருதரப்புக்கும் ஆதரவாக சில மற்ற கட்சியினரும் காரியாப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு வந்ததாகச் சொல்லப்படுகிறது. அங்கு நியமன அதிகாரி அலுவலகத்தில் இல்லாததால் துணை அலுவலரான சுகப்பிரியா பணிகளைக் கவனித்து வந்திருக்கிறார். இந்த நிலையில், அங்குவந்த தி.மு.க-வைச் சேர்ந்த இருதரப்பினரும் மாறி மாறி தங்களுக்குச் சாதகமாக நடந்துகொள்ள வேண்டும் என்று அதிகாரி சுகப்பிரியாவுக்கு அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் வட்டார வளர்ச்சி அலுவலகமே பரபரப்புக்குள்ளானது. சிறிது நேரத்தில் கருத்துவேறுபாடுடைய இருதரப்பினருக்குமிடையே வார்த்தை மோதல் ஏற்பட்டு பிரச்னை பெரிதாகியிருக்கிறது. இந்த ஆத்திரத்தில் அதிகாரி சுகப்பிரியாவிடம், இருதரப்பினருமே வரிந்து கட்டிக்கொண்டு அநாகரிகமான வார்த்தைகளால் அவரைத் திட்டித்தீர்த்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் களேபரங்கள் தொடர்பான வீடியோ காட்சிகள் விருதுநகர் மாவட்டத்தில் வாட்ஸ்அப்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தகவலறிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், அரசு அதிகாரிகளை அநாகரிகமாக வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்த கட்சி நபர்கள்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸில் புகாரளித்தார். அதன்பேரில் சி.பி.எம்‌ கட்சியைச் சேர்ந்த மூன்று பேர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கத்தினரிடம் கேட்கையில், "அதிகாரி சுகப்பிரியாவிடம் அநாகரிகமான முறையில் நடந்துகொண்ட ஆளுங்கட்சிப் பிரமுகர்‌கள்மீது புகார் கொடுக்கப்படாமல் அவருக்கு ஆதரவாக வந்தவர்கள் மீதே புகார் தரப்பட்டிருக்கிறது. இது பற்றி சங்க அலுவலர்களுடன் ஆலோசித்து இயக்கரீதியான முன்னெடுப்புக்கு வழிவகுப்போம்" என்றனர்.