Published:Updated:

கும்பகோணம்: மாற்றுத்திறனாளி வெட்டிக் கொலை - கள்ளச்சாரயம் குறித்துத் தகவல் கொடுத்ததால் கொலையா?!

கொலைசெய்யப்பட்ட தனபால்
News
கொலைசெய்யப்பட்ட தனபால்

``கள்ளச்சாராயம் விற்பனை செய்வது தொடர்பாக, போலீஸாருக்குத் தகவல் கொடுத்ததாலேயே தனபால் கொலைசெய்யப்பட்டிருக்கிறார். எனவே, அந்த சாராய வியாபாரியான குற்றவாளியைக் கைதுசெய்ய வேண்டும்.” - உறவினர்கள்

Published:Updated:

கும்பகோணம்: மாற்றுத்திறனாளி வெட்டிக் கொலை - கள்ளச்சாரயம் குறித்துத் தகவல் கொடுத்ததால் கொலையா?!

``கள்ளச்சாராயம் விற்பனை செய்வது தொடர்பாக, போலீஸாருக்குத் தகவல் கொடுத்ததாலேயே தனபால் கொலைசெய்யப்பட்டிருக்கிறார். எனவே, அந்த சாராய வியாபாரியான குற்றவாளியைக் கைதுசெய்ய வேண்டும்.” - உறவினர்கள்

கொலைசெய்யப்பட்ட தனபால்
News
கொலைசெய்யப்பட்ட தனபால்

கும்பகோணத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த நபர் குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்த கொத்தனார் ஒருவர் மர்மக் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இறந்தவரின் மனைவி மற்றும் உறவினர்கள் குற்றவாளியைக் கைதுசெய்ய வேண்டும் என சாலைமறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

உறவினர்கள் போராட்டம்
உறவினர்கள் போராட்டம்

கும்பகோணம், திருவிடைமருதூர் அருகேயுள்ள நரசிங்கம்பேட்டை அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் தனபால் (32). மாற்றுத்திறனாளியான இவர், கொத்தனார் வேலை செய்துவந்தார். இவருக்கு மனைவியும் மூன்று வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறார்கள். அந்தக் குழந்தை வாய் பேசாத, காது கேட்காத மாற்றுத்திறனாளி. தனபால் நேற்று இரவு நரசிங்கம்பேட்டை கடைத்தெருவில் தனது நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, டூ வீலரில் அங்கு வந்த மூன்று மர்ம நபர்கள் தனபாலை வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதில் ரத்தவெள்ளத்தில் சரிந்து, உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தனபாலை அருகி;இருந்தவர்கள் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே தனபால் உயிரிழந்துவிட்டார். அவரது உடல் உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது.

கும்பகோணத்தில் போராட்டம் நடத்திய உறவினர்கள்
கும்பகோணத்தில் போராட்டம் நடத்திய உறவினர்கள்

இது குறித்து திருநீலக்குடி போலீஸார் வழக்கு பதிவுசெய்து தனபாலைக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய மர்ம நபர்களைத் தேடிவருகின்றனர். இந்த நிலையில் இன்று தனபாலின் மனைவி மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட பலர் அரசு மருத்துவமனைக்கு முன்பு திரண்டனர். கள்ளச்சாராயம் விற்பனை செய்வது தொடர்பாக, போலீஸாருக்குத் தகவல் கொடுத்ததாலேயே தனபால் கொலை செய்யப்பட்டிருக்கிறார். எனவே, அந்தச் சாராய வியாபாரியான குற்றவாளியைக் கைதுசெய்ய வேண்டும் எனக் கூறி உடலை வாங்க மறுத்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

குற்றவாளிகளை உடனே கைதுசெய்ய வேண்டும் என கோஷமிட்டனர். தனபாலின் மனைவி, வாய் பேசாத பெண் குழந்தையை வைத்துக்கொண்டு, `இனி நான் என்ன செய்யப்போகிறேன்’ எனக் கதறியது சோகத்தை ஏற்படுத்தியது. இதனால் அந்தப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து வந்த கும்பகோணம் டி.எஸ்.பி மகேஷ் குமார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, குற்றவாளிகளை விரைவில் கைதுசெய்வதாக உறுதியளித்தார். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

சாலைமறியல்
சாலைமறியல்

இது குறித்து தனபால் குடும்பத்தினர் கூறுகையில், ``எங்க பகுதியில் ஒருவர் கள்ளச்சாரயம் விற்பனை செய்துவந்தார். தனபாலின் உறவினர் ஒருவர் இது தொடர்பாக எதிர்த்து கேட்டதால் சில மாதங்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் விற்பனை செய்கிற அந்த நபர் அவரை வெட்டினார். இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கிறது. அதன் பின்னரும் அவர் கள்ளச்சாராயம் விற்பதை நிறுத்தவில்லை.

இதை தனபால், திருநீலக்குடி போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். இது எப்படியோ கள்ளச்சாராயம் விற்பனை செய்கிற நபருக்குத் தெரிய, அந்த ஆத்திரத்தில் தனபாலை வெட்டிக் கொலை செய்திருக்கிறார். ஆனால் போலீஸார் இதை திசைதிருப்பும் நோக்கத்தில் கள்ளச்சாராய விவகாரத்தை சேர்க்காமல் வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர்” எனத் தெரிவித்தனர். போலீஸ் தரப்பிலோ, முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாகத் தெரிவிக்கிறார்கள். முழுமையான விசாரணையின் முடிவில்தான் உண்மை தெரியவரும்!