Published:Updated:

தமிழக வனத்துக்குள் ஊடுருவிய‌ வேட்டைக் கும்பல் - ஊட்டியில் முகாமிட்டு வனத்துறை தீவிர சோதனை!

வேட்டைக் கும்பல்
News
வேட்டைக் கும்பல்

கொடூரமான கொள்ளை மற்றும் வேட்டைச் சம்பவங்களில் ஈடுபடும் வேட்டைக் கும்பல் தமிழக வனத்துக்குள் ஊடுருவியிருப்பதாகச் சொல்லப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:

தமிழக வனத்துக்குள் ஊடுருவிய‌ வேட்டைக் கும்பல் - ஊட்டியில் முகாமிட்டு வனத்துறை தீவிர சோதனை!

கொடூரமான கொள்ளை மற்றும் வேட்டைச் சம்பவங்களில் ஈடுபடும் வேட்டைக் கும்பல் தமிழக வனத்துக்குள் ஊடுருவியிருப்பதாகச் சொல்லப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வேட்டைக் கும்பல்
News
வேட்டைக் கும்பல்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகிலுள்ள அரசூர் பகுதியில் வடமாநிலத்தைச் சேர்ந்த சிலர் தற்காலிகக் குடில்கள் அமைத்து தங்கியிருப்பதாகவும், அவர்களின் நடவடிக்கைகள்மீது சந்தேகம் இருப்பதாகவும் சிலர் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றனர். மாறுவேடத்தில் சென்ற வனத்துறையினர், அவர்களின் தங்குமிடத்தைச் சோதனை செய்திருக்கின்றனர்.

அவர்களிடமிருந்த பைகளைச் சோதனை செய்ததில் புலித்தோல், புலிநகம், எலும்புகள் பதுக்கிவைத்திருப்பதைக் கண்டு வனத்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவற்றைப் பறிமுதல் செய்து, தொடர்புடைய நான்கு பேரைக் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

புலித்தோல்
புலித்தோல்

முதல் கட்ட விசாரணையில், வேட்டைக் கும்பலைச் சேர்ந்தவர்கள் நீலகிரி வனத்தில் வனவிலங்குகளை வேட்டையாடியதாக அதிர்ச்சித் தகவல்களைத் தெரிவித்திருக்கின்றனர். நான்கு பேரையும் நீலகிரி வனத்துக்கு அழைத்துவந்த வனத்துறையினர், வேட்டைச் சம்பவத்தில் அவர்கள் ஈடுபட்ட இடத்துக்கே அழைத்துச் சென்று சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.

வேட்டைக் கும்பல் ஊடுருவல் குறித்து தெரிவித்த வனத்துறை அதிகாரி ஒருவர், ``பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ரத்னா, மங்கல், கிருஷ்ணன் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராம்சந்தர் ஆகியோரைக் கைதுசெய்து விசாரணை நடத்திவருகிறோம். இவர்கள் புலி வேட்டையிலும் ஈடுபட்டிருக்கின்றனர். புலியின் உடல் பாகங்கள் சீன கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனையாகிறது.

நீலகிரியில் சோதனை
நீலகிரியில் சோதனை

இந்தியாவில் புலிகளை வேட்டையாடி விற்பனை செய்யத் திட்டமிட்டிருக்கின்றனர். நீலகிரி வனக் கோட்டத்துக்குட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் புலியை வேட்டையாடியதாகத் தெரிவித்திருக்கின்றனர். கைதுசெய்யப்பட்ட நான்கு பேரையும் அழைத்துவந்து சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனத்துறையினர், நீலகிரி மண்டல வனப் பாதுகாவலர், முதுமலைப் புலிகள் காப்பக கள இயக்குநர் மற்றும் நீலகிரி கோட்ட மாவட்ட வன அலுவலர் பலரும் விசாரணையில் ஈடுபட்டுவருகிறோம். பல விஷயங்கள் விரைவில் வெளிவரும்” என்றார்.