Published:Updated:

ராஜபாளையம்: ரூ.15,000 கடனுக்காக பிரபல ரெளடி காரில் கடத்திக் கொலை - நடந்தது என்ன?!

க்ரைம்
News
க்ரைம்

வாங்கிய கடனைத் திருப்பிக்கொடுக்காத ரெளடி குத்திக் கொலைசெய்யப்பட்டார். இதுதொடர்பாக சேத்தூர் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Published:Updated:

ராஜபாளையம்: ரூ.15,000 கடனுக்காக பிரபல ரெளடி காரில் கடத்திக் கொலை - நடந்தது என்ன?!

வாங்கிய கடனைத் திருப்பிக்கொடுக்காத ரெளடி குத்திக் கொலைசெய்யப்பட்டார். இதுதொடர்பாக சேத்தூர் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

க்ரைம்
News
க்ரைம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே, ரூ.15,000 கடனைத் திருப்பித் தராததால் ஆத்திரமடைந்த நபர் தன் நண்பர்களுடன் சேர்ந்து பிரபல ரெளடியை காரில் கடத்திக் கொலைசெய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து போலீஸ் தரப்பில் தெரிவிக்கையில், "விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரத்தைச் சேர்ந்தவர் ஆனந்தக்குமார். பிரபல ரெளடியான இவர் மீது விருதுநகர் மாவட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. இவரின் நண்பர், சேத்தூர் பாரதி நகரைச் சேர்ந்த மருதுபாண்டி.

இந்த நிலையில், மருதுபாண்டியிடம் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பாக ஆனந்தக்குமார் ரூ.15,000 கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. ஒருவாரத்தில் வாங்கியக் கடனைத் திருப்பித்தருவதாகக் கூறிய நிலையில், ஒருமாதம் கடந்தும் மருதுபாண்டியிடம் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காமல் ஆனந்தக்குமார் ஏமாற்றிவந்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த மருதுபாண்டி கடனைத் திருப்பித் தரவில்லை எனில் கொன்றுவிடுவதாக மிரட்டியிருக்கிறார். ஆனால், இந்த மிரட்டலைப் பெரிதாகக் கண்டுக்கொள்ளாத ஆனந்தக்குமார், வழக்கம்போல் தனது வேலைகளைக் கவனித்துவந்திருக்கிறார். இந்த நிலையில், ஆனந்தக்குமாரை செல்போனில் தொடர்புகொண்ட மருதுபாண்டி அவரிடம் நைசாகப் பேசி மெயின்ரோட்டுக்கு வரவழைத்திருக்கிறார்.

ஆனந்தக்குமார்
ஆனந்தக்குமார்

அந்த நேரம், எதிர்பாராத திருப்பமாக காரில் தன்னுடைய 4 நண்பர்களுடன் வந்த மருதுபாண்டி, ஆனந்தக்குமாரை வளைத்து காருக்குள் இழுத்துப்போட்டு கடத்திச் சென்றிருக்கிறார். இந்தத் தகவலையறிந்த ஆனந்தக்குமாரின் தந்தை ஆனந்தராஜ், சேத்தூர் ஊரக காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸ் வழக்கு பதிவுசெய்து கடத்தப்பட்ட ஆனந்தக்குமாரை தேடிவந்தனர். இந்த நிலையில், சேத்தூருக்கு அருகேயுள்ள செங்கல் சூளையில் ஆண் ஒருவர் பல இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் இறந்துகிடப்பதாக சேத்தூர் போலீஸுக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீஸார், இறந்து கிடந்த நபர் குறித்து விசாரணை நடத்தியதில் அவர், கடத்திச் செல்லப்பட்ட ஆனந்தக்குமார் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரின் உடல் மீட்கப்பட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், இந்தச் சம்பவம் குறித்து சேத்தூர் காவல் துறையினர் வழக்கு பதிவுசெய்து மருதுபாண்டி, அவரின் நண்பர்கள் நான்கு பேரைத் தேடிவருகின்றனர்" என்றனர்.