Published:Updated:

தேனி: `வேலைக்காக ம.பி-க்கு அழைத்துச் செல்லப்பட்ட பிள்ளைகளைக் காணவில்லை!' - பளியர் இன மக்கள் புகார்

தேனி ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த பளியர் இன மக்கள்
News
தேனி ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த பளியர் இன மக்கள்

​வேலைக்குச் சென்ற ​சிறுவர்கள் வீடு திரும்பாத காரணத்தால், அவர்களைக் கண்டுபிடித்துத் தரும்படி கடந்த 14-ம் தேதி பெற்றோர்கள் இராஜதானி காவல் நிலையத்தில் புகார் அளித்தும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது​.

Published:Updated:

தேனி: `வேலைக்காக ம.பி-க்கு அழைத்துச் செல்லப்பட்ட பிள்ளைகளைக் காணவில்லை!' - பளியர் இன மக்கள் புகார்

​வேலைக்குச் சென்ற ​சிறுவர்கள் வீடு திரும்பாத காரணத்தால், அவர்களைக் கண்டுபிடித்துத் தரும்படி கடந்த 14-ம் தேதி பெற்றோர்கள் இராஜதானி காவல் நிலையத்தில் புகார் அளித்தும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது​.

தேனி ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த பளியர் இன மக்கள்
News
தேனி ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த பளியர் இன மக்கள்

​தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகாவுக்குட்பட்ட வேலப்பர் கோயில் அருகே கதிர்வேல்புர​ம் அமைந்திருக்கிறது. இங்கு பளியர் இன​த்தைச் சேர்ந்த ​35 குடும்பங்கள் வசித்துவருகின்றன. இவர்கள் மேற்குத் தொடர்ச்சி மலையில் தேன், ஈச்சமாறு, கடுக்காய், நெல்லிக்காய், கிழங்குகள் எடுத்து பிழைத்து வருகின்றனர். ஏழ்மையிலுள்ள இந்தப் பகுதியைச் சேர்ந்த ரவி என்பவரின் 14 வயது மகன் தமிழரசன், சீனி என்பவ​ரின் ​​17 வயது ​மகன் பட்டவராயன், வேல்முருகன் என்பவ​ரின்​​ 15 வயது மகன் ஞானவேல்​ ஆகியோரை உசிலம்பட்டியைச் சேர்ந்த காசி, பிரபு ஆகியோ​ர்​ மத்தியப் பிரதேச​ மாநிலம், இந்தூரிலுள்ள ​ஹோட்டலில் வேலை​க்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். 

மாயமான சிறுவர்களின் தாயார்
மாயமான சிறுவர்களின் தாயார்

கடந்த ஐந்து மாதங்களாக ஹோட்டலுக்கு வேலைக்குச் சென்ற சிறுவர்கள், அவ்வப்போது பெற்றோருடன் ​போனில் பேசிவந்தனர். இந்த நிலையில் ​​கடந்த ஒரு மாத​மாக அவர்களைத்  தொடர்புகொள்ள முடியவில்லை. இது குறித்து சிறுவர்களை அழைத்துச் சென்ற காசியைத் தொடர்புகொண்டு விசாரித்தபோது, கடந்த மாத இறுதியில் மூ​ன்று சிறுவர்களும்  ஊருக்குச் சென்றுவிட்டதாகக் கூறியிருக்கிறார்.

​வேலைக்குச் சென்ற ​சிறுவர்கள் வீடு திரும்பாத காரணத்தால், இவர்களைக் கண்டுபிடித்துத் தரும்படி கடந்த 14-ம் தேதி பெற்றோர்கள் இராஜதானி காவல் நிலையத்தில் புகார் அளித்தும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது​. இதனால் மாயமான சி​றுவர்களின் பெற்றோர்களும் ​உறவினர்களும் ​தேனி ​மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து, வேலைக்குச் சென்ற தங்கள் மகன்களை மீட்டுத் தரும்படி ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

ஆட்சியர் அலுவலகம்
ஆட்சியர் அலுவலகம்

​இது குறித்து பாதிக்கப்பட்ட பெற்றோர்​, ``எங்கள் மகன்கள் ஊருக்கு வருவதாகத் தகவ​ல் ​தெரிவிக்கவில்லை​.​ எங்கள்  மகன்களை அழைத்துச் சென்றவர்களிடம் விசாரித்தால்,  முறையான பதில் த​ரவில்லை. எனவே மாவட்ட ஆட்சியர் எங்கள் மகன்களை மீட்க உரிய நடவடிக்கை ​எடுக்க வேண்டும்" என்றனர்.