Published:Updated:

முன்னாள் கணவருக்காக இன்னாள் கணவர் வீட்டில் ரூ.8 லட்சம் திருடிய பெண்; போலீஸில் சிக்கியது எப்படி?

இளம்பெண் கைது
News
இளம்பெண் கைது ( சித்திரிப்புப் படம் )

சொந்த வீட்டிலேயே பணம், தங்கநகைகளைத் திருடிய பெண் கைதுசெய்யப்பட்டார்.

Published:Updated:

முன்னாள் கணவருக்காக இன்னாள் கணவர் வீட்டில் ரூ.8 லட்சம் திருடிய பெண்; போலீஸில் சிக்கியது எப்படி?

சொந்த வீட்டிலேயே பணம், தங்கநகைகளைத் திருடிய பெண் கைதுசெய்யப்பட்டார்.

இளம்பெண் கைது
News
இளம்பெண் கைது ( சித்திரிப்புப் படம் )

மும்பை மலாடு குரார் பகுதியில் வசிப்பவர் ஜோதிராம். இவரின் மனைவி பாயல். பாயலுக்கு இது இரண்டாவது திருமணமாகும். முதல் திருமணத்தின் மூலம் ஒரு மகன் இருக்கிறார். மகனும், முதல் கணவனும் தனியாக வசித்துவருகின்றனர். ஆனாலும் முதல் கணவனுடன் பாயல் தொடர்பில் இருந்துவந்தார்.

கடந்த மே மாதம் 7-ம் தேதி ஜோதிராம் தன் மனைவியுடன் சாங்கிலியில் இருக்கும் தன் நண்பர் ஒருவரைப் பார்க்கச் சென்றார். அவர்கள் மே 13-ம் தேதி திரும்ப வந்தனர். வீட்டுக்குள் வந்து பார்த்தபோது உள் கதவின் பூட்டு காணாமல் போயிருந்தது. அதோடு வீடு முழுக்க பொருள்கள் சிதறிக்கிடந்தன.

பாயல்
பாயல்

வீட்டின் பீரோவிலிருந்த 4 லட்சம் பணம், நகைகள் காணாமல் போயிருந்தன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.8.3 லட்சமாகும். பக்கத்து வீட்டில் விசாரித்துப் பார்த்துவிட்டு, இது குறித்து ஜோதிராம் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்துவந்தனர். உதவி இன்ஸ்பெக்டர் பங்கஜ் தலைமையில் இதற்காகத் தனிப்படை அமைக்கப்பட்டது.

ஜோதிராம் வசித்த கட்டடத்திலோ அல்லது அருகிலோ கண்காணிப்பு கேமரா எதுவும் இல்லை. இதனால் யார் வந்து சென்றது என்பதைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. கைரேகை நிபுணர்களின் உதவியோடு திருடப்பட்ட பீரோ, தங்கநகைகள் இருந்த பெட்டகத்தில் பதிவாகியிருந்த கைரேகையைப் பதிவுசெய்தனர்.

போலீஸாருக்கு கைரேகை மட்டுமே ஆதாரமாகக் கிடைத்தது. எனவே, இந்த வழக்கை முன்னெடுத்துச் செல்வதில் தாமதம் ஏற்பட்டது. ஜோதிராம் மனைவி பாயல் கைரேகையுடன் வீட்டில் கிடைத்த கைரேகையை ஒப்பிட்டுப் பார்த்ததில் கைரேகை ஒத்துப்போனது. ஆனால், இந்தத் திருட்டில் தனக்குத் தொடர்பில்லை என்று பாயல் மறுத்துவந்தார். தீவிர விசாரணைக்குப் பிறகு திருடியதை ஒப்புக்கொண்டார். அதன் பிறகு போலீஸார் அவரைக் கைதுசெய்தனர்.

பணம்
பணம்

இது குறித்து போலீஸ் அதிகாரி பங்கஜ், ``ஜோதிராம் சாங்கிலி புறப்படும் முன்பு காரைக் கழுவி தயாராக வைப்பதாகக் கூறிவிட்டு, புறப்பட்டுச் சென்றார். தான் ஒரு மணி நேரத்தில் வருவதாக பாயல் தெரிவித்திருந்தார். அந்த இடைப்பட்ட நேரத்தில் பாயல் தன் முன்னால் கணவருக்கு போன் செய்து வரவழைத்து வீட்டில் இருந்த நகை, பணத்தை எடுத்துக் கொடுத்து அனுப்பிவைத்தார். பின்னர் வீட்டில் இருந்த பொருள்களை எடுத்து ஆங்காங்கே போட்டு திருட்டுப்போனது போன்று காட்டிவிட்டு பாயல் தன் கணவருடன் சாங்கிலி புறப்பட்டுச் சென்றார்'' என்று தெரிவித்தார்.