
News
பொதுவானது


மாணவர்களை அவர்களது வீடுகளில் கிடைக்கும் காய்கள், பழங்கள், பூக்கள், வீட்டு உபயோகப் பொருள்களை சேகரித்து வரச் செய்யவும். அவற்றை ஓரிடத்தில் மொத்தமாக வைக்கவும்.

பிறகு, மாணவர்களை சிறு குழுக்களாகப் பிரித்து, அவர்களிடம் நிறங்களின் பெயர்கள் எழுதப்பட்ட அட்டைகளைக் கொடுக்கவும். விசில் ஊதியதும் முதல் குழுவில் உள்ள மாணவர்கள், தங்களுக்குக் கொடுக்கப்பட்ட நிறத்துக்குரிய பொருள்களைக் கையில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அவ்வாறு பொருள்களை சரியாக சேகரித்தல் மற்றும் வாக்கியங்களாக கூறும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு வழங்கலாம்.
- ச.ஈஸ்வரி, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர்.