Published:Updated:

`உயர்கல்வி நிறுவனங்களில் 5 ஆண்டுகளில் 61 தற்கொலைகள்'- சு.வெங்கடேசன் எம்.பி கேள்விக்கு அமைச்சர் பதில்

சு.வெங்கடேசன்
News
சு.வெங்கடேசன்

உயர்கல்வி நிறுவனங்களில் 5 ஆண்டுகளில் 61 தற்கொலைகள் நடைபெற்றிருப்பதாக சு.வெங்கடேசன் எம்.பி எழுப்பியிருக்கும் கேள்விக்கு, மத்திய கல்வி இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் பதிலளித்திருக்கிறார்.

Published:Updated:

`உயர்கல்வி நிறுவனங்களில் 5 ஆண்டுகளில் 61 தற்கொலைகள்'- சு.வெங்கடேசன் எம்.பி கேள்விக்கு அமைச்சர் பதில்

உயர்கல்வி நிறுவனங்களில் 5 ஆண்டுகளில் 61 தற்கொலைகள் நடைபெற்றிருப்பதாக சு.வெங்கடேசன் எம்.பி எழுப்பியிருக்கும் கேள்விக்கு, மத்திய கல்வி இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் பதிலளித்திருக்கிறார்.

சு.வெங்கடேசன்
News
சு.வெங்கடேசன்

ஐஐடி உள்ளிட்ட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் தற்கொலைகள் தொடர்வதும், பட்டியல் சாதி, பழங்குடி மாணவர்கள் உயிரிழப்பது குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன்றிய கல்வி இணை அமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்கார் (Subhas Sarkar) அதிர்ச்சிகரமான பதில் அளித்திருப்பதாக சு.வெங்கடேசன் எம்.பி தெரிவித்திருக்கிறார்.

சென்னை ஐ.ஐ.டி.
சென்னை ஐ.ஐ.டி.

இது குறித்து அவர் விடுத்திருக்கும் அறிக்கையில், "அண்மையில் மும்பை ஐஐடி உள்ளிட்ட மத்திய கல்வி நிறுவனங்களில் நிகழும் தற்கொலைகளைத் தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன... மத்திய கல்வி நிறுவனங்களில் எஸ்.சி., எஸ்.டி செல்கள் அமைக்கப்பட்ட விவரங்கள் என்னென்ன... ஐஐடி மும்பை மாணவர் நல மையத்தின் தலைமை ஆலோசகரே இட ஒதுக்கீடுக்கு எதிராகப் பகிரங்கமாகப் பேசினாரா?

இப்படிப்பட்டவர்கள் இது போன்ற குழுக்களில் இருந்தால் எப்படி பட்டியல் சாதி, பழங்குடி மாணவர்களுக்கு நம்பிக்கை ஏற்படும்... பொருத்தமான நபர்களை இது போன்ற குழுக்களில் நியமிக்க என்னென்ன ஏற்பாடுகள் இருக்கின்றன... இது போன்ற குழுக்களில் பட்டியல் சாதி, பழங்குடியினர் பிரதிநிதித்துவம் இடம்பெறுவதற்கு என்னென்ன வழிகாட்டல்கள் இருக்கின்றன ஆகிய கேள்விகளுக்கு மத்திய கல்வி இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் பதிலளித்திருக்கிறார்.

அதில், 108 மத்திய கல்வி நிறுவனங்களில் 87-ல் எஸ்.சி., எஸ்.டி செல்கள் இருக்கின்றன. ஐஐடி 19 (23), ஐஐஐடி 14 (25), ஐஐஎஸ்இஆர் 7 (7), ஐஐஎம் 20 (20), என்ஐடி 26 (32), ஐஐஎஸ்சி 1 (1) என்ற அளவில் இந்த செல்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

மற்ற நிறுவனங்களில் சம வாய்ப்பு செல், மாணவர் குறைதீர் செல், மாணவர் குறைதீர் குழு, மாணவர் சமூக மன்றம், குறைதீர் அலுவலர் ஆகிய ஏற்பாடுகள் இருக்கின்றன. கடந்த ஐந்தாண்டுகளில், (ஐஐடி 33, என்ஐடி 24, ஐஐஎம் 4) மொத்தம் 61 மாணவர்கள் தற்கொலை செய்திருக்கின்றனர் என்றும் தெரிவித்திருக்கிறார்.

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்

2009-ல் ராகிங்குக்கு எதிராக, 2019-ல் மாணவர் குறைதீர்ப்பு, 2023-ல் தேசிய தற்கொலைத் தடுப்பு வழிமுறைகள் ஆகியவை குறித்து பல்கலைக்கழக மானியக்குழு விடுத்த சுற்றறிக்கைகளைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். `தேசிய கல்விக் கொள்கை-2020’ எப்படி மாணவர் ஆலோசனை, உணர்வு சமநிலை, விளையாட்டு, கலாசாரம், சமூக சேவை, சூழலியல் ஆகியவை மூலம் மாணவர்களின் உள வலிமையை மேம்படுத்த வழி சொல்லியிருக்கிறது என்றும் விவரித்திருக்கிறார்.

ஐஐடி மும்பையில் இறந்த மாணவர் குடும்பத்துக்கு உரிய ஆதரவை அந்த நிறுவனம் தந்துவருவதாகவும், உள் விசாரணை நடைபெற்றுவருவதோடு, மகாராஷ்டிரா அரசு அமைத்திருக்கும் சிறப்பு புலனாய்வுக்குழுவுக்கு ஒத்துழைப்பு நல்கிவருவதாகவும், இட ஒதுக்கீட்டுக்கு எதிராகக் கருத்துகளை வெளியிட்ட மாணவர் நல மைய தலைமை ஆலோசகர் நீக்கப்பட்டு, பட்டியல் சாதி, பழங்குடி பிரதிநிதித்துவம் உறுதிசெய்யப்பட நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

அமைச்சரின் பதில் அதிர்ச்சியைத் தருகிறது. 61 தற்கொலைகள் என்பது, மன அழுத்த சூழல் மத்திய கல்வி நிறுவனங்களில் தொடர்வதையே காண்பிக்கிறது. இன்னும் 21 நிறுவனங்களில் எஸ்.சி., எஸ்.டி செல்கள் இல்லை என்பது இத்தனை தற்கொலைகளிலிருந்து இந்த உயர்கல்வி நிறுவனங்கள் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பதும், அரசுத் தரப்பிலிருந்து கண்காணித்து உறுதிசெய்யவில்லை என்பதும் தெளிவாகிறது. சனாதன அணுகுமுறையின் பிரதிபலிப்பா என்ற கேள்விகள்தான் எழுகிறது.

என் கேள்வியில் மிகத் தெளிவாக நிறுவனவாரியாக விவரங்கள் கேட்டிருந்தும், நிறுவனங்களின் பெயர்களைச் சொல்லாமல் எண்ணிக்கையை மட்டும் அமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார். எஸ்.சி., எஸ்.டி செல்கள் இருப்பதாகக் கூறப்படும் 87 மத்திய கல்வி நிலையங்களிலும் அவை செயல்படுகின்றனவா என்பதெல்லாம் தனிக் கேள்விகள்.

தற்கொலைகள்
தற்கொலைகள்
சித்திரிப்புப் படம்

ஐஐடி மும்பை குறித்த பதில்கள், இவர்கள் சொல்கிற குழுக்களில் சாதிய உணர்வுகொண்டவர்கள் அமர்ந்துவிடுகிறார்கள், எஸ்.சி., எஸ்.டி பிரதிநிதித்துவம் இல்லாத நிலை இருக்கிறது என்பதன் நிரூபணமே. தர்ஷன் சோலங்கி தற்கொலை மீதான உள் விசாரணை தொடங்குவதற்கு முன்பே எங்கள் வளாகத்தில் சாதிய பாரபட்சம் இல்லை என்று அதன் இயக்குநர் தீர்ப்பு எழுதியதும் மக்கள் கவனத்துக்கு வந்த அவலங்களே.

இதையெல்லாம் ஒன்பது ஆண்டுகளில் கண்காணிக்கவும், உறுதிசெய்யவும் தவறியிருக்கும் ஒன்றியக் கல்வி அமைச்சகம், புது மருந்தைக் கண்டுபிடித்ததுபோல 'புதிய கல்விக் கொள்கை 2020' தற்கொலைகளைத் தடுத்துவிடும் என்று நீட்டி முழக்கி வகுப்பு எடுத்திருப்பது நகைச்சுவை. ஏக்கத்தோடும், பெற்றோரின் எதிர்பார்ப்புகளைச் சுமந்தும், சமூகத் தடைகளைத் தாண்டியும் உயர்கல்வி நிறுவனங்களில் அடியெடுத்துவைக்கும் ரோகித் வெமுலாக்களும், தர்ஷன் சோலங்கிகளும் வாழ்வதற்கு வழி சொல்லுங்கள் அமைச்சரே" என்று தெரிவித்திருக்கிறார்.