Published:Updated:

அரசுப்பள்ளி மாணவர்களுக்கான போட்டித்தேர்வு பயிற்சி வகுப்பு, பாடம் நடத்தி உற்சாகப்படுத்திய கலெக்டர்!

மாணவர்களுடன் கலெக்டர் கற்பகம்

மாவட்டத்தின் பல்வேறு அரசுப் பள்ளிகளில் பயின்ற 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு படித்து வருகின்றனர். மாவட்ட ஆட்சித்தலைவரின் விருப்ப நிதியிலிருந்து ரூ.1.80 லட்சம் மதிப்பீட்டில் போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள், காலை மற்றும் மாலை நேர சிற்றுண்டிகள் வழங்கப்படுகின்றன.

Published:Updated:

அரசுப்பள்ளி மாணவர்களுக்கான போட்டித்தேர்வு பயிற்சி வகுப்பு, பாடம் நடத்தி உற்சாகப்படுத்திய கலெக்டர்!

மாவட்டத்தின் பல்வேறு அரசுப் பள்ளிகளில் பயின்ற 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு படித்து வருகின்றனர். மாவட்ட ஆட்சித்தலைவரின் விருப்ப நிதியிலிருந்து ரூ.1.80 லட்சம் மதிப்பீட்டில் போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள், காலை மற்றும் மாலை நேர சிற்றுண்டிகள் வழங்கப்படுகின்றன.

மாணவர்களுடன் கலெக்டர் கற்பகம்

பெரம்பலூர் மாவட்டத்தில், அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் நீட் மற்றும் ஜே.இ.இ போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் வகையில், பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இலவச சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவடைந்த பிறகு ஏப்ரல் 5-ம் தேதி தொடங்கப்பட்ட இந்த இலவச சிறப்புப் பயிற்சி வகுப்பானது, மே 4-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

கலெக்டர் கற்பகம்
கலெக்டர் கற்பகம்

பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் இந்தப் பயிற்சி வகுப்பில், மாவட்டத்தின் பல்வேறு அரசுப் பள்ளிகளில் பயின்ற 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு படித்து வருகின்றனர். அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் விருப்ப நிதியிலிருந்து ரூ.1.80 லட்சம் மதிப்பீட்டில் போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள், கல்வி உபகரணங்கள், காலை மற்றும் மாலை நேர சிற்றுண்டிகள் வழங்கப்பட்டு பயிற்சி வகுப்பு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படி கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த இந்தப் பயிற்சி வகுப்புகள் முடிவடையும் நிலையில் உள்ளது. இப்பயிற்சி வகுப்புகளில், மாணவர்கள் போட்டித் தேர்வுகளை எவ்வித அச்சமும், தயக்கமும், பதற்றமும் இல்லாமல் எழுதும் வகையில் ஒவ்வொரு பாடத்திலும் தலைசிறந்த ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இறுதியாக 02.05.2023, 03.05.2023 மற்றும் 04.05.2023 ஆகிய தேதிகளில் காலையில் மாதிரி தேர்வுகளும், காலையில் நடைபெற்ற தேர்வுகளுக்குப் பதில் மற்றும் சந்தேகங்களை தீர்க்கும் வகுப்புகள் மாலையிலும் நடைபெறுகின்றன.

அதனடிப்படையில் நேற்று விலங்கியல் தொடர்பாக நடைபெற்ற மாலை நேர பயிற்சி வகுப்பினை, பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் நடத்தினார். மாவட்ட ஆட்சியர் வகுப்பறைக்குள் நுழைந்ததுமே, முதலில் மாணவர்கள் பதற்றமடைந்துள்ளனர். ஒருகட்டத்தில் ரிலாக்ஸ் ஆகி, மாணவர்களுக்கு விலங்கியல் தொடர்பான சந்தேகங்களுக்கு சுலபமாக புரியும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் பாடம் நடத்தியதை, மாணவர்கள் உற்சாகத்துடன் கவனித்தார்கள்.

மாணவர்களுடன் கலெக்டர் கற்பகம்
மாணவர்களுடன் கலெக்டர் கற்பகம்

இதுகுறித்து அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். ``தமிழகத்தில் பின்தங்கிய மாவட்டங்களில் பெரம்பலூர் மாவட்டமும் ஒன்று. இந்த மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் பலரும், சிறப்பான உயர்கல்வியைப் பெற்றிட வேண்டுமெனவும், அரசுப் பணிகளுக்குச் செல்லும் போட்டித் தேர்வுகளுக்கு தங்களை தயார்ப்படுத்திக் கொள்ளும் வகையிலும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பல முன்னெடுப்புகளைச் செய்து வருகிறார்கள்.

அப்படித்தான் பெரம்பலூரில் தற்போது இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மாவட்ட ஆட்சியர் அவர்கள் விலங்கியல் பாடப்பிரிவை படித்தவர் என்பதால், மாணவர்களுக்கு விலங்கியல் பாடம் சம்பந்தமான சந்தேகங்களை விளக்கி பாடம் நடத்தினார். மேலும், போட்டித் தேர்வுகளுக்கு எப்படி தயாராவது, தேர்வுகளை பயமில்லாமல் எப்படி எதிர்கொள்வது என மாணவர்களுக்கு உற்சாகம் கொடுத்தார்" என்றனர்.