<p><span style="color: #ff0000"><strong>'இ</strong></span>ன்னும் கொஞ்சம் சாப்பிடு’ - எல்லோருக்கும் அவள் சொல்லுவாள். அவளுக்கு யாருமே சொன்னதில்லை.</p>.<p>'கவலைப்படாதே சரியாயிடும்’ - அவள் பிறருக்குச் சொல்லுவாள். அவளுக்கு யாருமே சொன்னதில்லை.</p>.<p>அவளுக்கும் புதுசு பிடிக்கும். புதுப்புடவையின் வாசனை பிடிக்கும். புதுப்புடவையின் வெளிச்சம் பிடிக்கும்.</p>.<p>அவளுக்கும் இனிப்பு பிடிக்கும். இனிப்புப் பண்டத்தின் வாசனை பிடிக்கும். அதன் சர்க்கரைப் பாகு மயக்கம் பிடிக்கும்.</p>.<p>அவளுக்கும் சிறகுகள் பிடிக்கும். மனச்சுமை இல்லாமல் ஒற்றைச் சிறகெனக் காற்றில் மிதக்கப் பிடிக்கும்.</p>.<p>அவளுக்கும் மத்தாப்பு பிடிக்கும். அதிலிருந்து தெறிக்கும் நட்சத்திரங்கள் பிடிக்கும்.</p>.<p>ஆனாலும் என்ன?</p>.<p>தன் பட்டுப்புடவை ஆசையை மறந்துவிட்டு, குழந்தைக்குப் பட்டாம்பூச்சி வண்ண உடை வாங்கித் தந்து சந்தோஷிப்பாள்.</p>.<p>தன் நெய்ப்பணியாரம் ஆசையை மறந்து, மகனுக்கு நெய்முறுக்கு செய்து தந்து சந்தோஷிப்பாள்.</p>.<p>தன் குந்துமணித் தங்க ஆசையை மறந்து, மகளுக்குத் தங்க செயின் வாங்கித் தந்து சந்தோஷிப்பாள்.</p>.<p>அவள் இனிமேலாவது புன்னகை செய்யட்டும். அவளின் விரலை நீவிவிடுங்கள்.</p>.<p>அவள் இனிமேலாவது புதுசு உடுத்தட்டும். உங்களின் ஆடம்பரத்தைச் சுருக்கிவிடுங்கள்.</p>.<p>அவள் இனிமேலாவது பண்டிகைப் பலகாரம் உண்ணட்டும். உங்களின் வார இறுதிக் கேளிக்கை கொண்டாட்டத்தைக் குறைத்துவிடுங்கள்.</p>.<p>அவள் இனிமேலாவது குந்துமணி தங்கம் அணியட்டும். உங்களின் பேராசையை அடகு வையுங்கள்.</p>.<p>அவள் இனிமேலாவது வாசல் காற்றைச் சுவாசிக்கட்டும்.</p>.<p>அவள் இனிமேலாவது வானத்து நிலவைப் பார்க்கட்டும்.</p>.<p>அவள் - இனிமேலாவது அவளாகவே இருக்கட்டும்...</p>.<p>சுயமாக... சுயம்புவாக!</p>
<p><span style="color: #ff0000"><strong>'இ</strong></span>ன்னும் கொஞ்சம் சாப்பிடு’ - எல்லோருக்கும் அவள் சொல்லுவாள். அவளுக்கு யாருமே சொன்னதில்லை.</p>.<p>'கவலைப்படாதே சரியாயிடும்’ - அவள் பிறருக்குச் சொல்லுவாள். அவளுக்கு யாருமே சொன்னதில்லை.</p>.<p>அவளுக்கும் புதுசு பிடிக்கும். புதுப்புடவையின் வாசனை பிடிக்கும். புதுப்புடவையின் வெளிச்சம் பிடிக்கும்.</p>.<p>அவளுக்கும் இனிப்பு பிடிக்கும். இனிப்புப் பண்டத்தின் வாசனை பிடிக்கும். அதன் சர்க்கரைப் பாகு மயக்கம் பிடிக்கும்.</p>.<p>அவளுக்கும் சிறகுகள் பிடிக்கும். மனச்சுமை இல்லாமல் ஒற்றைச் சிறகெனக் காற்றில் மிதக்கப் பிடிக்கும்.</p>.<p>அவளுக்கும் மத்தாப்பு பிடிக்கும். அதிலிருந்து தெறிக்கும் நட்சத்திரங்கள் பிடிக்கும்.</p>.<p>ஆனாலும் என்ன?</p>.<p>தன் பட்டுப்புடவை ஆசையை மறந்துவிட்டு, குழந்தைக்குப் பட்டாம்பூச்சி வண்ண உடை வாங்கித் தந்து சந்தோஷிப்பாள்.</p>.<p>தன் நெய்ப்பணியாரம் ஆசையை மறந்து, மகனுக்கு நெய்முறுக்கு செய்து தந்து சந்தோஷிப்பாள்.</p>.<p>தன் குந்துமணித் தங்க ஆசையை மறந்து, மகளுக்குத் தங்க செயின் வாங்கித் தந்து சந்தோஷிப்பாள்.</p>.<p>அவள் இனிமேலாவது புன்னகை செய்யட்டும். அவளின் விரலை நீவிவிடுங்கள்.</p>.<p>அவள் இனிமேலாவது புதுசு உடுத்தட்டும். உங்களின் ஆடம்பரத்தைச் சுருக்கிவிடுங்கள்.</p>.<p>அவள் இனிமேலாவது பண்டிகைப் பலகாரம் உண்ணட்டும். உங்களின் வார இறுதிக் கேளிக்கை கொண்டாட்டத்தைக் குறைத்துவிடுங்கள்.</p>.<p>அவள் இனிமேலாவது குந்துமணி தங்கம் அணியட்டும். உங்களின் பேராசையை அடகு வையுங்கள்.</p>.<p>அவள் இனிமேலாவது வாசல் காற்றைச் சுவாசிக்கட்டும்.</p>.<p>அவள் இனிமேலாவது வானத்து நிலவைப் பார்க்கட்டும்.</p>.<p>அவள் - இனிமேலாவது அவளாகவே இருக்கட்டும்...</p>.<p>சுயமாக... சுயம்புவாக!</p>