<ul><li><p> கேழ்வரகுடன் கம்பு சேர்த்துப் புட்டு செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.</p></li><li><p> சப்ஜா விதைகளை ஊறவைத்து பழச்சாற்றுடன் சேர்த்துச் சாப்பிட, குடல் சூடு தணிந்து குளுமையாக இருக்கும்.</p></li><li><p> பொரியல்களுக்காக கடலைப்பருப்பு, மல்லி (தனியா), மிளகாய் எனச் சேர்த்து மசாலா அரைக்கும்போது, ஒரு ஸ்பூன் கம்பு சேர்த்து வறுத்து அரைத்தால், சுவை கூடும். வாரத்துக்கு இருமுறை அல்லது தினமும்கூட சிறிதளவு சிறுதானியம் சேர்த்துச் சாப்பிட, ஆரோக்கியம் கூடும்.</p></li><li><p> சாம்பாருக்குப் பருப்பு வேகவைக்கும்போது ஒரு டேபிள்ஸ்பூன் கொள்ளு சேர்த்து வேகவைத்து சாம்பார் வைக்க, உடலில் கொழுப்பு சேராமல் இருக்கும்.</p></li><li><p> கோதுமையில் பரோட்டா செய்யும்போது ஒரு டேபிள்ஸ்பூன் ஓமம் கலந்து செய்யலாம். சுவையாகவும் எளிதில் ஜீரணமும் ஆகும்.</p></li></ul>.<ul><li><p> வெண்டைக்காய், கத்திரிக்காய் காரக்குழம்பு செய்யும்போது ஒரு டேபிள்ஸ்பூன் சீரகப்பொடி சேர்த்தால், குழம்பு மிகவும் ருசியாக இருக்கும்.</p></li><li><p> ரசம் வைக்கும்போது கறிவேப்பிலை இல்லையென்றால் சிறிதளவு முருங்கையிலைகளைத் தூவி இறக்க, அது தனிச்சுவையைத் தரும்.</p></li><li><p> சுண்டைக்காய் குழம்பு செய்யும்போது நல்லெண்ணெய்விட்டு தாளிப்பு செய்தால், சுவையும் மணமும் மனத்தை அள்ளும்.</p></li></ul>.<ul><li><p>தேங்காய்க்குப் பதில் வெங்காயத்துடன் பீர்க்கங்காயையும் வதக்கி அரைத்துவிட்டால் குழம்பு கெட்டியாகவும் சுவையுடனும் இருக்கும். இரும்புச்சத்து, நார்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து மற்றும் இதர நுண்ணூட்டச் சத்துகளைப் பெறலாம்.</p></li><li><p> பருப்பு சாம்பாரை சீரகம் தாளித்து இறக்கும் முன்பு சிறிதளவு புதினாவைப் பொடியாக நறுக்கிச் சேர்த்து இறக்கினால், சாம்பாரின் சுவை அதிகரிக்கும்.</p></li></ul>
<ul><li><p> கேழ்வரகுடன் கம்பு சேர்த்துப் புட்டு செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.</p></li><li><p> சப்ஜா விதைகளை ஊறவைத்து பழச்சாற்றுடன் சேர்த்துச் சாப்பிட, குடல் சூடு தணிந்து குளுமையாக இருக்கும்.</p></li><li><p> பொரியல்களுக்காக கடலைப்பருப்பு, மல்லி (தனியா), மிளகாய் எனச் சேர்த்து மசாலா அரைக்கும்போது, ஒரு ஸ்பூன் கம்பு சேர்த்து வறுத்து அரைத்தால், சுவை கூடும். வாரத்துக்கு இருமுறை அல்லது தினமும்கூட சிறிதளவு சிறுதானியம் சேர்த்துச் சாப்பிட, ஆரோக்கியம் கூடும்.</p></li><li><p> சாம்பாருக்குப் பருப்பு வேகவைக்கும்போது ஒரு டேபிள்ஸ்பூன் கொள்ளு சேர்த்து வேகவைத்து சாம்பார் வைக்க, உடலில் கொழுப்பு சேராமல் இருக்கும்.</p></li><li><p> கோதுமையில் பரோட்டா செய்யும்போது ஒரு டேபிள்ஸ்பூன் ஓமம் கலந்து செய்யலாம். சுவையாகவும் எளிதில் ஜீரணமும் ஆகும்.</p></li></ul>.<ul><li><p> வெண்டைக்காய், கத்திரிக்காய் காரக்குழம்பு செய்யும்போது ஒரு டேபிள்ஸ்பூன் சீரகப்பொடி சேர்த்தால், குழம்பு மிகவும் ருசியாக இருக்கும்.</p></li><li><p> ரசம் வைக்கும்போது கறிவேப்பிலை இல்லையென்றால் சிறிதளவு முருங்கையிலைகளைத் தூவி இறக்க, அது தனிச்சுவையைத் தரும்.</p></li><li><p> சுண்டைக்காய் குழம்பு செய்யும்போது நல்லெண்ணெய்விட்டு தாளிப்பு செய்தால், சுவையும் மணமும் மனத்தை அள்ளும்.</p></li></ul>.<ul><li><p>தேங்காய்க்குப் பதில் வெங்காயத்துடன் பீர்க்கங்காயையும் வதக்கி அரைத்துவிட்டால் குழம்பு கெட்டியாகவும் சுவையுடனும் இருக்கும். இரும்புச்சத்து, நார்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து மற்றும் இதர நுண்ணூட்டச் சத்துகளைப் பெறலாம்.</p></li><li><p> பருப்பு சாம்பாரை சீரகம் தாளித்து இறக்கும் முன்பு சிறிதளவு புதினாவைப் பொடியாக நறுக்கிச் சேர்த்து இறக்கினால், சாம்பாரின் சுவை அதிகரிக்கும்.</p></li></ul>