<p><strong>வெ</strong>ந்தயத்தை ஊறவைத்துச் சாப்பிடுவதால், வயிற்றுப் புண்கள் குறையும். ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை நீர்விட்டுக் கொதிக்கவைத்து, வடிகட்டி வாய் கொப்பளித்தால் தொண்டைக்கட்டுச் சரியாகும்.</p><p><strong>கீ</strong>ரைச் சமையலில் வறுத்துப் பொடித்த எள் மற்றும் வேகவைத்த பூண்டு சேர்த்து சமைத்தால், கீரையின் முழுப் பலனையும் பெற முடியும். வேகவைத்த முட்டையில் மிளகுத்தூளும், எள்ளுப்பொடியும் சேர்த்துச் சுவைத்தால், உடலில் ஊட்டங்கள் கூடுதலாகும்.</p>.<p><strong>கு</strong>ளிர்க்காய்ச்சல் இருக்கும் போது, மூன்று மிளகை வெங்காயத் துடன் சேர்த்துச் சாப் பிட்டால், சீக்கிரமாகக் காய்ச்சல் அடங்கும். சிறுநீர் எரிச்சல், சிறுநீர் அடைப்பு ஏற்படும்போது, வெங் காயத்தை ஒன்றிரண்டாக இடித்து குடிநீரிட்டுப் பருகலாம்.</p><p><strong>250</strong> கிராம் இஞ்சியை நறுக்கி, இரண்டு லிட்டர் நீர் சேர்த்து நன்றாக ஊறவைத்து, வெல்லம் சேர்த்து, சிறு தீயில் கொதிக்கவைத்து பாகுபதத்தில் இறக்கி வைக்கவும். இதைத் தினமும் அரை டீஸ்பூன் அளவு சாப்பிட்டுவந்தால் சுவை யின்மை, பசியின்மை தீரும். </p><p><strong>க</strong>சகசாவை நீரில் ஊறவைத்து அரைத்து பாலில் கலந்து பருகினால், அற்புதமான உறக்கம் ஏற்படும். கசகசாவை லேசாக வதக்கி, தேனில் குழைத்துச் சாப்பிட்டால், செரிமானக் கோளாறால் ஏற்பட்ட வயிற்றுவலி குணமாகும்.</p>.<p><strong>வா</strong>ந்தி உணர்வை நிறுத்த, ஜாதிக்காயை நெல்லிக்காய்ச் சாற்றுடன் சேர்த்துப் பருகலாம். பொடித்த ஜாதிக்காயைச் சிட்டிகை அளவு எடுத்து, தேனில் குழைத்துச் சாப்பிட்டால் முழுமையான உறக்கம் வர வாய்ப்பு அதிகம்.</p>.<p><strong>சி</strong>றிதளவு புளியுடன் கரிசலாங்கண்ணிக் கீரை சேர்த்து அரைத்து, சிறிய நெல்லிக்காய் அளவு சாப்பிட்டுவந்தால், மூல நோயின் குறிகுணங்கள் குறையும்.</p><p><strong>இ</strong>ஞ்சித் துண்டுகளைப் புளி கரைத்த நீரில் வதக்கி சுண்டச்செய்த `புளி இஞ்சி’, செரிமானத்தைத் துரிதமாக்கும். வாந்தி, குமட்டல், உணவு எதுக்களித்தல் போன்ற குறிகுணங்களுக்கு உடனடியாகப் பலன் தரும்.</p>.<p><strong>பிரி</strong>ஞ்சி இலைகளை குடிநீராகக் காய்ச்சி தினமும் காலை சிறிதளவு குடித்துவந்தால், அதிகப்படியான கொழுப்புகள் குறைய வாய்ப்பு அதிகம். சிறிது பிரிஞ்சி இலைப் பொடியுடன், இரண்டு சிட்டிகை ஜாதிக்காய்ப்பொடி சேர்த்து பாலில் கலந்து கொதிக்கவைத்து வடிகட்டிக் குடித்தால் நிம்மதியான உறக்கம் வரும்.</p>
<p><strong>வெ</strong>ந்தயத்தை ஊறவைத்துச் சாப்பிடுவதால், வயிற்றுப் புண்கள் குறையும். ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை நீர்விட்டுக் கொதிக்கவைத்து, வடிகட்டி வாய் கொப்பளித்தால் தொண்டைக்கட்டுச் சரியாகும்.</p><p><strong>கீ</strong>ரைச் சமையலில் வறுத்துப் பொடித்த எள் மற்றும் வேகவைத்த பூண்டு சேர்த்து சமைத்தால், கீரையின் முழுப் பலனையும் பெற முடியும். வேகவைத்த முட்டையில் மிளகுத்தூளும், எள்ளுப்பொடியும் சேர்த்துச் சுவைத்தால், உடலில் ஊட்டங்கள் கூடுதலாகும்.</p>.<p><strong>கு</strong>ளிர்க்காய்ச்சல் இருக்கும் போது, மூன்று மிளகை வெங்காயத் துடன் சேர்த்துச் சாப் பிட்டால், சீக்கிரமாகக் காய்ச்சல் அடங்கும். சிறுநீர் எரிச்சல், சிறுநீர் அடைப்பு ஏற்படும்போது, வெங் காயத்தை ஒன்றிரண்டாக இடித்து குடிநீரிட்டுப் பருகலாம்.</p><p><strong>250</strong> கிராம் இஞ்சியை நறுக்கி, இரண்டு லிட்டர் நீர் சேர்த்து நன்றாக ஊறவைத்து, வெல்லம் சேர்த்து, சிறு தீயில் கொதிக்கவைத்து பாகுபதத்தில் இறக்கி வைக்கவும். இதைத் தினமும் அரை டீஸ்பூன் அளவு சாப்பிட்டுவந்தால் சுவை யின்மை, பசியின்மை தீரும். </p><p><strong>க</strong>சகசாவை நீரில் ஊறவைத்து அரைத்து பாலில் கலந்து பருகினால், அற்புதமான உறக்கம் ஏற்படும். கசகசாவை லேசாக வதக்கி, தேனில் குழைத்துச் சாப்பிட்டால், செரிமானக் கோளாறால் ஏற்பட்ட வயிற்றுவலி குணமாகும்.</p>.<p><strong>வா</strong>ந்தி உணர்வை நிறுத்த, ஜாதிக்காயை நெல்லிக்காய்ச் சாற்றுடன் சேர்த்துப் பருகலாம். பொடித்த ஜாதிக்காயைச் சிட்டிகை அளவு எடுத்து, தேனில் குழைத்துச் சாப்பிட்டால் முழுமையான உறக்கம் வர வாய்ப்பு அதிகம்.</p>.<p><strong>சி</strong>றிதளவு புளியுடன் கரிசலாங்கண்ணிக் கீரை சேர்த்து அரைத்து, சிறிய நெல்லிக்காய் அளவு சாப்பிட்டுவந்தால், மூல நோயின் குறிகுணங்கள் குறையும்.</p><p><strong>இ</strong>ஞ்சித் துண்டுகளைப் புளி கரைத்த நீரில் வதக்கி சுண்டச்செய்த `புளி இஞ்சி’, செரிமானத்தைத் துரிதமாக்கும். வாந்தி, குமட்டல், உணவு எதுக்களித்தல் போன்ற குறிகுணங்களுக்கு உடனடியாகப் பலன் தரும்.</p>.<p><strong>பிரி</strong>ஞ்சி இலைகளை குடிநீராகக் காய்ச்சி தினமும் காலை சிறிதளவு குடித்துவந்தால், அதிகப்படியான கொழுப்புகள் குறைய வாய்ப்பு அதிகம். சிறிது பிரிஞ்சி இலைப் பொடியுடன், இரண்டு சிட்டிகை ஜாதிக்காய்ப்பொடி சேர்த்து பாலில் கலந்து கொதிக்கவைத்து வடிகட்டிக் குடித்தால் நிம்மதியான உறக்கம் வரும்.</p>