<p><strong>க</strong>டுகை அரைத்து அரிசி மாவுடன் சேர்த்து, நீர்விட்டு களிபோல கிளறி, துணியில் தடவி மார்பின் மீது பற்றுபோட, இருமலின் தீவிரம் குறைந்து சுவாசம் எளிமையாகும். இடைவிடாமல் தொடர்ந்து விக்கல் வரும்போது, கடுகை அரைத்து துணியில் தடவி, மார்புக் குழியில் பற்றுப் போடலாம்.</p><p><strong>பொ</strong>டியாக நறுக்கிய நாட்டுத்தக்காளித் துண்டுகள், வதக்கிய சின்ன வெங்காயம், மிளகுத்தூள், பொடித்த அன்னாசிப்பூ போன்றவற்றை நெய்யில் வதக்கி இணை உணவாகச் சாப்பிட்டால், கப நோய்களை எதிர்த்து நிற்கும் வன்மையை உடலுக்கு அளிக்கும்.</p>.<p><strong>தொ</strong>ண்டை கரகரக்கும்போது, சிற்றரத்தையை நெருப்பில் எரித்துச் சாம்பலாக்கி, அதைத் தேனில் குழைத்து, அதன் உரைப்பு நாவிலும் தொண்டையிலும் தவழும்படி சாப்பிட்டால், கரகரப்பு கரைந்து தொண்டை இதமாகும். </p><p><strong>ஈ</strong>ரல் சார்ந்த நோய்களுக்கு வெந்தயம், பெருங்காயம், கறிமஞ்சள், கடுகு ஆகியவற்றை நெய்விட்டு வறுத்துப் பொடியாக்கி, சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். வெந்தயம், பெருங்காயம், துவரம்பருப்பு சேர்த்து மண்பானையில் தயாரித்த உணவை, சூடாக சாப்பிட்டால் உடல் எரிச்சல் குறையும்.</p>.<p><strong>சி</strong>றுநீர் எரிச்சல், சிறுநீர் அடைப்பு போன்ற பிரச்னைகளுக்கு உளுந்து ஊறிய நீரைப் பருகினால் நிவாரணம் கிடைக்கும். சுக்கு, பனைவெல்லம் துணையுடன் உளுந்து சேர்த்து களியாகக் கிளறி சாப்பிட்டால் உடலுக்கு பலமுண்டாகும்.</p>.<p><strong>மா</strong>தவிடாய் தள்ளிப்போகிறது என்றாலோ, பி.சி.ஓ.டி எனும் சினைப்பை நீர்க்கட்டிகள் பிரச்னையால் அவதிப்பட்டாலோ, கருஞ்சீரகத்தை நன்றாக அரைத்துப் பொடித்து, அதில் ஒரு தேக்கரண்டியைத் தேனில் குழைத்து, 10 நாள்கள் தொடர்ந்துச் சாப்பிட்டுவர, பிரச்னை சரியாகும்.</p><p><strong>ம</strong>ழை மற்றும் குளிர்காலங்களில் கிரீன் டீ அல்லது கொதிக்கும் நீரில் சில நிமிடங்கள் அன்னாசிப்பூவைப் போட்டு, வடிகட்டிப் பருகினால் சுவாசம் எளிதாகும். தூதுவளை இலைகளைத் துவையலாகச் செய்யும்போது, சிறிதளவு அன்னாசிப்பூப்பொடி சேர்த்தால், சோர்ந்திருக்கும் மூச்சுக் குழாய் உற்சாகமடையும்.</p>
<p><strong>க</strong>டுகை அரைத்து அரிசி மாவுடன் சேர்த்து, நீர்விட்டு களிபோல கிளறி, துணியில் தடவி மார்பின் மீது பற்றுபோட, இருமலின் தீவிரம் குறைந்து சுவாசம் எளிமையாகும். இடைவிடாமல் தொடர்ந்து விக்கல் வரும்போது, கடுகை அரைத்து துணியில் தடவி, மார்புக் குழியில் பற்றுப் போடலாம்.</p><p><strong>பொ</strong>டியாக நறுக்கிய நாட்டுத்தக்காளித் துண்டுகள், வதக்கிய சின்ன வெங்காயம், மிளகுத்தூள், பொடித்த அன்னாசிப்பூ போன்றவற்றை நெய்யில் வதக்கி இணை உணவாகச் சாப்பிட்டால், கப நோய்களை எதிர்த்து நிற்கும் வன்மையை உடலுக்கு அளிக்கும்.</p>.<p><strong>தொ</strong>ண்டை கரகரக்கும்போது, சிற்றரத்தையை நெருப்பில் எரித்துச் சாம்பலாக்கி, அதைத் தேனில் குழைத்து, அதன் உரைப்பு நாவிலும் தொண்டையிலும் தவழும்படி சாப்பிட்டால், கரகரப்பு கரைந்து தொண்டை இதமாகும். </p><p><strong>ஈ</strong>ரல் சார்ந்த நோய்களுக்கு வெந்தயம், பெருங்காயம், கறிமஞ்சள், கடுகு ஆகியவற்றை நெய்விட்டு வறுத்துப் பொடியாக்கி, சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். வெந்தயம், பெருங்காயம், துவரம்பருப்பு சேர்த்து மண்பானையில் தயாரித்த உணவை, சூடாக சாப்பிட்டால் உடல் எரிச்சல் குறையும்.</p>.<p><strong>சி</strong>றுநீர் எரிச்சல், சிறுநீர் அடைப்பு போன்ற பிரச்னைகளுக்கு உளுந்து ஊறிய நீரைப் பருகினால் நிவாரணம் கிடைக்கும். சுக்கு, பனைவெல்லம் துணையுடன் உளுந்து சேர்த்து களியாகக் கிளறி சாப்பிட்டால் உடலுக்கு பலமுண்டாகும்.</p>.<p><strong>மா</strong>தவிடாய் தள்ளிப்போகிறது என்றாலோ, பி.சி.ஓ.டி எனும் சினைப்பை நீர்க்கட்டிகள் பிரச்னையால் அவதிப்பட்டாலோ, கருஞ்சீரகத்தை நன்றாக அரைத்துப் பொடித்து, அதில் ஒரு தேக்கரண்டியைத் தேனில் குழைத்து, 10 நாள்கள் தொடர்ந்துச் சாப்பிட்டுவர, பிரச்னை சரியாகும்.</p><p><strong>ம</strong>ழை மற்றும் குளிர்காலங்களில் கிரீன் டீ அல்லது கொதிக்கும் நீரில் சில நிமிடங்கள் அன்னாசிப்பூவைப் போட்டு, வடிகட்டிப் பருகினால் சுவாசம் எளிதாகும். தூதுவளை இலைகளைத் துவையலாகச் செய்யும்போது, சிறிதளவு அன்னாசிப்பூப்பொடி சேர்த்தால், சோர்ந்திருக்கும் மூச்சுக் குழாய் உற்சாகமடையும்.</p>