
பக்கோடா செய்யும்போது கடலை மாவுடன் பாதி அளவு பார்லி மாவு சேர்த்தால் ருசியாக இருக்கும்.
- இந்திராணி தங்கவேல், சென்னை - 26

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மிளகாயை சிறிது நல்லெண்ணெய் ஊற்றி வறுத்து, பொடி செய்தால் கமறாமல் இருப்பதோடு, பொடியும் மணமாக இருக்கும்.
- க.நாகமுத்து, திண்டுக்கல்

எலுமிச்சைச் சாதம் செய்வதற்கு முன் சில நிமிடங்கள் எலுமிச்சைப் பழத்தை வெந்நீரில் போட்டு வைத்து, சாறு பிழிந்தால் அதிக அளவு சாறு கிடைக்கும்.
- ஜி.விஜயலெட்சுமி, கும்பகோணம்

மைசூர்பாகு மொறுமொறுவென்று வர வேண்டுமா..? மைசூர்பாகு செய்து அடுப்பில் இருந்து கீழே இறக்குவதற்குமுன் ஒரு சிட்டிகை சோடா உப்பைப் போட்டால் பொங்கி வரும்; மொறுமொறுவென்று இருப்பதுடன் கடை மைசூர்பாகு போல சுவையாக இருக்கும்.
- செல்வ மேகலா, பந்தநல்லூர்

வடை, சிப்ஸ், பஜ்ஜி போன்றவற்றை எண்ணெயில் பொரித்தெடுக்கும்போது நான்கு துளி எலுமிச்சைப்பழச் சாற்றை சேருங்கள். எண்ணெய் குறைந்த அளவே செலவாகும்.
- சே.தமிழரசி, சென்னை - 58

ஆணி மற்றும் ஸ்குரூக்களைப் போட்டு வைக்கும் டப்பா வில் சில துளி தேங்காய் எண்ணெயை விட்டு வைத்தால் எளிதில் துரு பிடிக்காது.
- ஹெச்.ராஜேஸ்வரி, மாங்காடு

அரிசி களை ந்த நீரில் கீரைகளை ஊறவைத் து, பிறகு சமையல் செய்து சாப்பிட்டா ல் நிறம் மாறா மல் பசுமையாக இருப்பதோடு, உடம் புக்கும் நல்லது.
- க.நாகமுத்து, திண்டுக்கல்

குக்கரின் உள்ளே கறை படிந்து கறுப்பாக இருந்தால் புளித்த மோரை கறை யுள்ள பகுதி வரை ஊற்றி, இரண் டு நாட்கள் ஊறவைத்து பிறகு தேய்த்தால் கறை காணா மல் போய்விடும்.
- எஸ்.நிர்மலா, மதுரை

பேரீச்சம்பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்துப் பாலில் கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் நரம்புத்தளர்ச்சி, கை கால் தளர்ச்சி போன்றவை சரியாகும்.
- கீதா, ஆலுவா

இலந்தைப் பழத்தில் ஊட்டச்சத்துகள் உள்ளன. அதுமட்டுமல்லாமல் இலந்தைப் பழம் வயிற்றுப் புண்ணுக்குச் சிறந்த மருந்தா கவும் செயல்படுகிறது. உணவில் ஏற்படும் விஷத்தன்மைக்கு மாற்று மருந்தாகவும் இது பயன்படுகிறது.
- தா.பூர்விகா, வேலூர்

உதட்டில் வரக்கூடிய வெடிப்பைத் தவிர்க்க நல்லெண்ணெய், வெண்ணெய், நெய் போன்றவற்றில் எதையாவது பூசலாம். கேரட் சாறு, பீட்ரூட் சாறுகளையும் தடவலாம்.
- எஸ்.நவீனா தாமு, திருவள்ளூர்

கனிந்த சப்போட்டோப்பழத்தைப் பசும் பாலுடன் சேர்த்து மசித்து முகத்தில் தடவி, அது காய்ந்த பிறகு முகம் கழுவினால் முகம் பளபளப்பாக மாறும்.
- கே.சாரா, ஈரோடு

ஜாதிக்காய், சுக்கு இரண்டையும் சம அளவு எடுத்து சிறிதளவு சீரகம் சேர்த்து மாவாக அரைத்து காலை, மாலை ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு வர... அஜீரணக் கோளாறு, பித்த ஏப்பம் ஆகியவை சரியாகும்.
- ஆர்.லட்சுமி, மதுரை