
தேங்காய் சாதம் செய்யும்போது, சிறிது வெள்ளை எள்ளை வறுத்துப் பொடி செய்து கலந்தால்... மணமாகவும், ருசியாகவும் இருக்கும்.
- ஜி.ஜெயலட்சுமி, சென்னை - 64


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பருப்பு ரசம், தக்காளி ரசம் சூடாக இருக்கும்போது, அவற்றில் புதினா இலைகள் சிலவற்றைப் போட்டு மூடவும்; புதினா மணத்துடன் ரசம் சூப்பர் சுவையில் இருக்கும்.
- சியாமளா ராஜகோபால், சிட்லபாக்கம்

குலாப்ஜாமூன் செய்த பிறகு மிகுந்துவிட்ட ஜீராவில் கோதுமை மாவைக் கலந்து உருட்டி, எண்ணெயில் பொரித்து எடுத்தால், வித்தியாசமான சுவையில் புது ஸ்வீட் ரெடி.
- அ.அன்புசெல்வி, திருச்சி

ஒரு கப் தர்பூசணி பழச்சாற்றுடன் அரை கரண்டி கடலை மாவு சேர்த்துக் குழைத்து முகத்தில் பூசி, அரை மணி நேரத்துக்குப் பிறகு வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவுங்கள். வாரத்துக்கு மூன்று முறை இப்படிச் செய்தால் முகம் பளபளக்கும்.
- பிரேமா சாந்தாராம், சென்னை - 110