<p style="text-align: center"><span style="color: #008080">தஹி சாட் </span></p>.<p><strong>தேவையானவை: </strong>புளிப்பில்லாத கெட்டித் தயிர் - 2 கப், ஆம்சூர் பவுடர் - 2 டீஸ்பூன், மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலாத்தூள் - தலா அரை டீஸ்பூன், ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை) - ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்கா யம் - அரை கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, உப்பு - தேவையான அளவு.</p>.<p><strong>இனிப்பு சட்னிக்கு: </strong>பேரீச்சம்பழம் - 50 கிராம், உலர்ந்த திராட்சை - 50 கிராம், புளிக் கரைசல் - 3 டீஸ்பூன், வெல்லம் - தேவையான அளவு.</p>.<table align="left" border="0" cellpadding="1" cellspacing="1" width="100"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p><strong>செய்முறை: </strong>அடுப்பில் கடாயை வைத்து சிறிதளவு தண்ணீர் விட்டு, கொதித்ததும் பேரீச்சம்பழம், உலர்ந்த திராட்சையை அதில் சேர்த்து வேக வைக்கவும். ஆறியதும் மிக்ஸியில் அரைத்து... புளிக் கரைசல், வெல்லம், உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இறக்கினால்... இனிப்பு சட்னி ரெடி!</p>.<p>ஒரு கிண்ணத்தில் இனிப்புச் சட்னி விட்டு, அதனுடன் ஆம்சூர் பவுடர், மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவையுடன் புளிக்காத கெட்டித் தயிரைக் கலக்கவும். எல்லாவற்றையும் கலந்த பின், அந்தக் கலவையின் மேல், ஓமப்பொடி தூவி... நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும். சாப்பிடும்போது ஸ்பூனால் கலக்கிச் சாப்பிட்டால்... இனிப்பு, புளிப்பு, காரம், துவர்ப்பு என பலவித சுவையுடன் இருக்கும்.</p>.<p style="text-align: right"><strong>- ஆர்.மங்களம், ஸ்ரீரங்கம் </strong></p>.<p style="text-align: center"><span style="color: #008080">பேரீச்சம்பழ இலை அடை </span></p>.<p><strong>தேவையானவை: </strong>அரிசி மாவு, மைதா மாவு, - தலா கால் கிலோ, பால் - அரை லிட்டர், பால் பவுடர் - கால் கப், பேரீச்சம்பழம் - ஒரு கப், தேங்காய் துருவல் - ஒரு கப், பொடித்த வெல்லம் - ஒன்றரை கப், முந்திரி - 20, ஏலக்காய்த்தூள், நெய், உப்பு - சிறிதளவு.</p>.<p><strong>செய்முறை</strong>: பாலை நன்கு காய்ச்சி ஆற வைத்து அதில் அரிசி மாவு, மைதா மாவு, உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.</p>.<p>முந்திரியை நன்கு பொடித்து நெய்யில் வறுத்துக் கொள்ளவும். பேரீச்சம்பழத்தை ஊற வைத்து நைஸாக அரைத்து... அதனுடன் தேங்காய் துருவல், பால் பவுடர், பொடித்த முந்திரி, பொடித்த வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து வாணலியில் லேசாக புரட்டவும். பூரணம் தயார். </p>.<p>நறுக்கிய வாழை இலையை ஒரு தட்டில் வைத்து, மாவுக் கலவையை விட்டு ஒரு ஸ்பூனில் பூரணத்தை வைத்து, இலையின் மறுபாதியால் மூடி ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.</p>.<p style="text-align: right"><strong>- கே.விஜயலட்சுமி, சென்னை-41 </strong></p>.<p>வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து, ருசித்து சர்டிஃபிகேட் தந்திருப்பவர் 'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன். அவருடைய கமென்ட்ஸ்...</p>.<p><strong>தஹி சாட்: </strong>கைப்பிடியளவு கொத்தமல்லி, புதினா, ஒரு பச்சை மிளகாய் மூன்றையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்த கார சட்னியைச் சேர்த்தால் மேலும் சுவையாக இருக்கும்.</p>.<p>பேரீச்சம்பழ இலை அடை: பேரீச்சம்பழத்துடன், உலர்ந்த திராட்சை சிறிதளவு சேர்த்தால்... சுவை, மணம் கூடும்.</p>
<p style="text-align: center"><span style="color: #008080">தஹி சாட் </span></p>.<p><strong>தேவையானவை: </strong>புளிப்பில்லாத கெட்டித் தயிர் - 2 கப், ஆம்சூர் பவுடர் - 2 டீஸ்பூன், மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலாத்தூள் - தலா அரை டீஸ்பூன், ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை) - ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்கா யம் - அரை கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, உப்பு - தேவையான அளவு.</p>.<p><strong>இனிப்பு சட்னிக்கு: </strong>பேரீச்சம்பழம் - 50 கிராம், உலர்ந்த திராட்சை - 50 கிராம், புளிக் கரைசல் - 3 டீஸ்பூன், வெல்லம் - தேவையான அளவு.</p>.<table align="left" border="0" cellpadding="1" cellspacing="1" width="100"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p><strong>செய்முறை: </strong>அடுப்பில் கடாயை வைத்து சிறிதளவு தண்ணீர் விட்டு, கொதித்ததும் பேரீச்சம்பழம், உலர்ந்த திராட்சையை அதில் சேர்த்து வேக வைக்கவும். ஆறியதும் மிக்ஸியில் அரைத்து... புளிக் கரைசல், வெல்லம், உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இறக்கினால்... இனிப்பு சட்னி ரெடி!</p>.<p>ஒரு கிண்ணத்தில் இனிப்புச் சட்னி விட்டு, அதனுடன் ஆம்சூர் பவுடர், மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவையுடன் புளிக்காத கெட்டித் தயிரைக் கலக்கவும். எல்லாவற்றையும் கலந்த பின், அந்தக் கலவையின் மேல், ஓமப்பொடி தூவி... நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும். சாப்பிடும்போது ஸ்பூனால் கலக்கிச் சாப்பிட்டால்... இனிப்பு, புளிப்பு, காரம், துவர்ப்பு என பலவித சுவையுடன் இருக்கும்.</p>.<p style="text-align: right"><strong>- ஆர்.மங்களம், ஸ்ரீரங்கம் </strong></p>.<p style="text-align: center"><span style="color: #008080">பேரீச்சம்பழ இலை அடை </span></p>.<p><strong>தேவையானவை: </strong>அரிசி மாவு, மைதா மாவு, - தலா கால் கிலோ, பால் - அரை லிட்டர், பால் பவுடர் - கால் கப், பேரீச்சம்பழம் - ஒரு கப், தேங்காய் துருவல் - ஒரு கப், பொடித்த வெல்லம் - ஒன்றரை கப், முந்திரி - 20, ஏலக்காய்த்தூள், நெய், உப்பு - சிறிதளவு.</p>.<p><strong>செய்முறை</strong>: பாலை நன்கு காய்ச்சி ஆற வைத்து அதில் அரிசி மாவு, மைதா மாவு, உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.</p>.<p>முந்திரியை நன்கு பொடித்து நெய்யில் வறுத்துக் கொள்ளவும். பேரீச்சம்பழத்தை ஊற வைத்து நைஸாக அரைத்து... அதனுடன் தேங்காய் துருவல், பால் பவுடர், பொடித்த முந்திரி, பொடித்த வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து வாணலியில் லேசாக புரட்டவும். பூரணம் தயார். </p>.<p>நறுக்கிய வாழை இலையை ஒரு தட்டில் வைத்து, மாவுக் கலவையை விட்டு ஒரு ஸ்பூனில் பூரணத்தை வைத்து, இலையின் மறுபாதியால் மூடி ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.</p>.<p style="text-align: right"><strong>- கே.விஜயலட்சுமி, சென்னை-41 </strong></p>.<p>வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து, ருசித்து சர்டிஃபிகேட் தந்திருப்பவர் 'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன். அவருடைய கமென்ட்ஸ்...</p>.<p><strong>தஹி சாட்: </strong>கைப்பிடியளவு கொத்தமல்லி, புதினா, ஒரு பச்சை மிளகாய் மூன்றையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்த கார சட்னியைச் சேர்த்தால் மேலும் சுவையாக இருக்கும்.</p>.<p>பேரீச்சம்பழ இலை அடை: பேரீச்சம்பழத்துடன், உலர்ந்த திராட்சை சிறிதளவு சேர்த்தால்... சுவை, மணம் கூடும்.</p>