இதே சூரணத்தை கால் ஸ்பூன் அளவு எடுத்து நெய் சேர்த்து காலைலயும் சாயங்காலமும் சாப்பிட்டு வந்தா... எலும்பும் தோலுமா உள்ளவங்களோட உடல் பருக்கும்.
சதாவரிக் கிழங்கு சூரணத்தை கால் ஸ்பூன் எடுத்து அதோட கொஞ்சம் நெய் சேர்த்து சாப்பிட்டாலும் உடல் பருக்கும்.
முடி உதிர்தல், இளநரை சரியாக...
அடுத்ததா முடி உதிர்தல், இளநரைனு பொண்ணுங்க ரொம்பவே கஷ்டப்படுவாங்க. அதுக்கு சில வைத்தியம் சொல்றேன், கேளுங்க.
கரிசலாங்கண்ணி இலையை (200 கிராம்) மையா அரைச்சி, அதோட அரை லிட்டர் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி பதத்துக்கு வந்ததும் இறக்கி வச்சிரணும். வழக்கமா தலைக்கு எண்ணெய் தேய்க்கிற மாதிரி அதை தேய்ச்சிட்டு வந்தா... முடி உதிர்றது, இளநரை எல்லாம் சரியாகும்.
|