"எங்க ஸ்கூல்ல ரெண்டு நாள் ஜாலியா டூர் போறோமே... நல்ல சாப்பாடு, ஸ்நாக்ஸ் செஞ்சு தாங்க... ஆனா, கண்டிப்பா போன தடவை கட்டித் தந்த புளி சாதம் வேண்டவே வேண்டாம்!"
- இது நம்ம வீட்டுக் குட்டி பாப்பா.
"போன வருஷம் மாதிரியே எங்க பார்க் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து மதுரை, ராமேஸ்வரம்னு சின்னதா ஒரு ஆன்மிக டூர் போலாம்னு முடிவு பண்ணியிருக்கோம். ஒவ்வொரு தடவையும் இட்லி, தயிர் சாதம், உருளைக்கிழங்கு சிப்ஸ்னு ஒரே போர். டிஃபரன்ட்டா... அதேசமயம் வயித்துக்கு கெடுதல் இல்லாததா கொண்டு போகணும்..."
- இது நம்ம வீட்டுப் பெரியவர்கள். நமக்கும்கூட இதே ஃபீலிங்க்ஸ்தான்.
'டூர், பிக்னிக் சாப்பாடு' என்றாலே இட்லி, புளி சாதம், தயிர் சாதம், சிப்ஸ், ஊறுகாய் என்ற நேர்க்கோட்டில் தான் சிந்திக்கிறோம். அதைத் தாண்டி எதையாவது சமைத்து எடுத்துச் சென்றாலும்... அது கெட்டுப்போய், பார்சலைப் பிரிக்கும்போதே பல் இளித்துவிடும்.
இத்தகைய சங்கடங்களை எல்லாம் தவிர்த்து, டூரின்போது கூட விதம்விதமான சாப்பாட்டைக் கையோடு கொண்டுபோய், குடும்பத்தோடு குஷியாகச் சாப்பிட இங்கே கைகொடுக்கிறார் கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார். "எளிதில் கெட்டுப் போகாத, சத்தான இந்த உணவுகளை தயாரிப்பதும் செம ஈஸி'' என்றும் சான்றளிக்கிறார்.
ஹேவ் எ வொண்டர்ஃபுல் ஜர்னி!
மூங்தால் பூரி
|