தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

உலகம் எங்கும் விற்கிறது... தமிழ்ப் பெண்ணின் ஓவியங்கள்!

உலகம் எங்கும் விற்கிறது... தமிழ்ப் பெண்ணின் ஓவியங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
உலகம் எங்கும் விற்கிறது... தமிழ்ப் பெண்ணின் ஓவியங்கள்!

சக்சஸ் ஸ்டோரிஸ்ரீ அகத்திய ஸ்ரீதர் - ஓவியங்கள்: வித்யா விவேக்

‘`சுயம்புவாக ஓவியம் கற்றேன். இன்று வெளிநாடுகளிலும் என் ஓவியங்கள் விற்பனை யாவது மிகவும் சந்தோஷமாகயிருக்கிறது’’ என்கிறார் பெங்களூரில் வசிக்கும் தமிழ்ப் பெண் வித்யா விவேக். தன் கலைநயமிக்க ஓவியங்களால் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துவரும் 36 வயது பெண்மணி; இரண்டு பெண் குழந்தைகளின் தாய். சித்திரமும் கைப் பழக்கம் என்பதை நிரூபித்து வருபவரிடம் பேசினோம்.

உலகம் எங்கும் விற்கிறது... தமிழ்ப் பெண்ணின் ஓவியங்கள்!

``நீலகிரியில் பிறந்தேன். சிறு வயதிலிருந்தே பொழுதுபோக்காக ஓவியங்கள் வரைவேன். அதற்கான பயிற்சி எதுவும் பெறவில்லை. என்றாலும், நான் வரையும் ஓவியங்கள் கலை நேர்த்தியுடன் மிளிர்வதாக அனைவரும் குறிப்பிட்டுச் சொல்வார்கள். தந்தையின் மத்திய அரசுப் பணி காரணமாக மும்பைக்குக் குடிபெயர்ந்தது எங்கள் குடும்பம்.

உலகம் எங்கும் விற்கிறது... தமிழ்ப் பெண்ணின் ஓவியங்கள்!

எம்.பி.ஏ, பி.இ முடித்தபிறகு என் திருமணம் முடிந்தது. நானும் கணவரும் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்தோம். குழந்தை பிறந்த பிறகு முழுநேரமாகச் சித்திரம் வரைவதில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.

என் படைப்புகளைச் சமூக வலைதளங் களில் பதிவிட்டபோது நிறைய பாராட்டுகள் கிடைத்தன. 2012-ம் ஆண்டு குடும்ப நண்பர் ஒருவர் பணம் கொடுத்து என் ஓவியங்களை வாங்கியபோது தான் இந்தப் படைப்பு களின் மதிப்பு எனக்கே தெரியவந்தது. என் மாமியார், உறவினர்கள், நண்பர்கள் என பலரும் உற்சாகப்படுத்த, பாரம்பர்ய மற்றும் நவீன ஓவியங்களில் கவனம் செலுத்தினேன். இந்தியாவில் பல நகரங்களிலும் வெளி நாடுகளிலும் ஓவியக் காட்சி களில் கலந்துகொண்டு என் ஓவியங்களைப் பார்வைக்கு வைத்தேன். இயற்கைக் காட்சிகள், புராண, இதிகாச, ஆன்மிகக் கதாபாத்திரங்கள் மற்றும் தெய்வ உருவங்களை வரைவதிலும் தேர்ச்சி பெற்றேன்.

உலகம் எங்கும் விற்கிறது... தமிழ்ப் பெண்ணின் ஓவியங்கள்!

என் ஓவியங்கள் தொடர்ந்து விற்பனையாகி, நல்ல வருமானம் வரத் தொடங்கியது. இப்போது அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறேன். குழந்தை களுக்கு ஓவியப் பயிற்சி வகுப்புகள் எடுப்பதுடன், பல கருத்தரங்கங்களில் சிறப்புப் பேச்சாளராகக் கலந்துகொள்கிறேன். சுயம்புவாக நான் கற்ற ஓவியம், இன்று என்னை வெற்றியாளராகவே மாற்றியுள்ளது.

புடவை, துப்பட்டாவில் கைவேலைப் பாடுகள் செய்ய, அதையும் பலரும் போட்டி போட்டு வாங்கினர். வணிக இணையதளங் களின் மூலமாகவும் அவற்றை விற்பனை செய்கிறேன். திருமணம், குழந்தை என்றான பின்னரும், வேலையைவிட்ட பின்னரும், எந்தத் தேக்கமும் இல்லாமல் வாழ்க்கையைப் பரபரப்பாக வைத்திருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது!”

வண்ணங்கள் தெளிக்கின்றன வித்யாவின் பேச்சில்!