
புதுடெல்லி: 2005 ஆம் ஆண்டுக்கு முன் அச்சடிக்கப்பட்ட 100, 500,1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ள அடுத்த ஆண்டு ஜூன் வரை காலக்கெடு நீட்டித்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
2005 ஆம் ஆண்டிற்கு முந்தைய 100,500,1000 ரூபாய் நோட்டுக்களை, வரும் ஜனவரி 1 ஆம் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றி கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. அதன் பிறகு அந்த நோட்டுக்கள் செல்லாது என்றும் அறிவித்து இருந்தது.
தற்போது அதற்கான காலக்கெடுவை அடுத்த ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.