விகடன் பொக்கிஷம்
ஸ்பெஷல் -1
அனிமல் விகடன்
சினிமா
தொடர்கள்
Published:Updated:

வாசகர்களே... வாங்க கலக்கலாம்!

வாசகர்களே... வாங்க கலக்கலாம்!

வாசகர்களே... வாங்க கலக்கலாம்!
வாசகர்களே... வாங்க கலக்கலாம்!
வாசகர்களே... வாங்க கலக்கலாம்!
வாசகர்களே... வாங்க கலக்கலாம்!
வாசகர்களே... வாங்க கலக்கலாம்!
வாசகர்களே... வாங்க கலக்கலாம்!

ருநாள் நான் பெசன்ட் நகரில் விக்ரம் வீடு எங்கே என விசாரித்துப் போனேன். வாட்ச்மேன், 'அதெல்லாம் பார்க்க முடியாது' என சிடுசிடுப்பாகச் சொல்லிவிட்டார். ஆனால், நான் அங்கேயே நிற்க, இன்னொருவர் வந்து 'நாளைக்கு வந்தாப் பார்க்கலாம்' என்றார். மறுநாள் காலையே போய்விட்டேன். டிராக் சூட், கையில பேட்மின்டன் ராக்கெட்டுடன் விக்ரமும் அவர் பையனும் வந்து ஷட்டில்காக் ஆடினார்கள். ஒரு போட்டோ எடுக்க வேண்டும் என்றதும் சம்மதித்தார். என் துரதிர்ஷ்டம், என் கேமரா செல்போனில் சார்ஜ் இல்லை. நான் அசடு வழிய, 'நீ கொஞ்ச நேரம் விளையாடுப்பா... அதுக்குள்ள இந்த போனுக்கு சார்ஜர் இருக்கான்னு தேடுவோம்' என்று ஆட்களிடம் தேடச் சொன்னார். நானும் விக்ரமும் விளையாடினோம். சார்ஜர் கிடைக்கவில்லை. என் பேரைக் கேட்ட விக்ரம், 'அட! என் கசின் பிரதர் பேரும் அரவிந்த்தான்' எனச் சிரித்தபடி அவர் மொபைலிலேயே போட்டோ எடுத்து என் மெமரி கார்டை அவருடைய போனில் மாற்றி, அந்தப் புகைப்படத்தை சேவ் பண்ணிக் கொடுத்தார். இவ்வளவு அன்பான, எளிமையான மனிதரா எனப் பிரமித்துப்போனேன். 'நீ எல்லாம் எப்படி விக்ரமைப் பார்க்க முடியும்?' எனக் கேலி பேசிய என் நண்பர்கள் இப்போது என்னை 'சீயான் அரவிந்த்'னுதான் கூப்பிடுறாங்க. தேங்க்ஸ் சீயான்!''

- அரவிந்த் பாலாஜி, சென்னை- 80.


வாசகர்களே... வாங்க கலக்கலாம்!
'' 'தெரிந்தும் தெரியாமலும்
புரிந்தும் புரியாமலும்
உணர்ந்தும் உணராமலும்
அறிந்தும் அறியாமலும்
நடந்ததெல்லாம்
நான் அறியேன் என
அறிவேன்!'

- இந்தக் கவிதையை எழுதியவர், நம் மனதில் வாழும் ரகுவரன். ஒரு விழாவுக்கு வருகை தந்த அவரிடம் ஆட்டோகிராஃப் வாங்கியபோது, அவர் எழுதித் தந்த கவிதை இது. போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும் என்றபோது, 'என்னோடு போட்டோ எடுத்துக்கிட்டா உங்களுக்கு என்னங்க பிரயோஜனம்!' என்று மறுத்தார். 'எங்கள் சந்தோஷத்துக்காக வாருங்கள்!' என்று வற்புறுத்தி நிற்கவைத்தபோது, அவருக்கே உரிய பாணியில் முகம் திருப்பிச் சிரித்து நின்ற ஸ்டைலை இப்போது பார்க்கும்போதும் ரசித்துச் சிரிப்போம். எனக்குத் திருமணமான புதிதில் பெருமையோடு இந்த போட்டோ காட்டி விவரம் சொன்ன என் கணவர், இந்த போட்டோவில் எங்கே இருக்கிறார் தெரியுமா? ரகுவரனோடு நெருங்கி நிற்கிற பூரிப்பில் பற்கள் தெரிய அரைச் சிரிப்பு சிரிக்கிறாரே... அவர்தாங்க அந்த அதிர்ஷ்டக் கட்டை!''

- மல்லிகா அன்பழகன், சென்னை-78.


வாசகர்களே... வாங்க கலக்கலாம்!
வாசகர்களே... வாங்க கலக்கலாம்!

''1982-ம் வருடம் சேலம் மாவட்டம் சங்ககிரியில் அ.தி.மு.க. பொதுக் கூட்டம். 'அம்மா'வுக்கு மாலை அணிவிக்க என் அம்மா (பச்சை சேலை) அழைக்கப்பட்டு இருந்தார். அவருடன் நானும் (சிகப்பு பாவாடைச் சிறுமி) மேடையில் ஏறிவிட்டேன். கூட்ட நெரிசலில் என் கையில் இருந்த 10 ரூபாயை எங்கோ தொலைத்துவிட்டேன். வீட்டுக்கு வந்தால் அடிவிழும் என்பதால், மேடையிலேயே சத்தமாக அழத் தொடங்கிவிட்டேன். விவரத்தைக் கேட்டு அறிந்த ஜெயலலிதா, அவருடைய பி.ஏ-விடம் 100 ரூபாய் நோட்டு ஒன்றை வாங்கி என்னிடம் கொடுத்தார். ஆனால், 10 ரூபாய் போல் இல்லாமல் அந்த நோட்டு வித்தியாசமாக இருந்ததால், வாங்க மறுத்து மேலும் அழத் தொடங்கினேன். உடனே சிரித்துவிட்ட ஜெயலலிதா, மீண்டும் பி.ஏ-விடம் இருந்து 10 ரூபாய் நோட்டு ஒன்றை வாங்கி என்னிடம் கொடுத்த பின்புதான் அழுகையை நிறுத்தினேனாம். இப்போது இந்தப் புகைப்படத்தைப் பார்த்தாலும் என் குழந்தைப் பருவ அறியாமையை நினைத்துச் சிரிப்புச் சிரிப்பாக வரும்!''

- டி.சியாமளாதேவி, சங்ககிரி.

வி.ஐ.பி-க்களுடன் பக்கத்தில் நின்று புகைப்படம் எடுத்திருக்கிறீர்களா நீங்கள்? அந்த புகைப்படத்தையும், அந்த அனுபவத்தையும் செம ஜாலியா எழுதி அனுப்புங்க. பிரசுரமானால், பரிசு ரூ.500. அனுப்ப வேண்டிய முகவரி: 'வாசகர்களே... வாங்க கலக்கலாம்!', ஆனந்த விகடன்,
757, அண்ணா சாலை, சென்னை-2. இ- மெயில்: av@vikatan.com

 
வாசகர்களே... வாங்க கலக்கலாம்!
வாசகர்களே... வாங்க கலக்கலாம்!