யும் நாரதகான சபாவிலும், சத்யம் திரையிலும் ஒரே சமயத்தில் தன்னை மறந்து பாடிக்கொண்டு இருப்பார்!
இது முடியுமா?
ஆம், அவர்கள் இருவரால் முடியும்!
எப்படி?
ரஜினி, கமல் படங்கள் மாதிரியாக இசை ரசிகர்கள் மத்தியில் 'மார்கழி ராகம்' படம் வெளியாவதற்கு முன்பே, பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. படத்தின் ஐந்து நிமிட டிரெய்லரைப் பார்த்தவர்கள் பிரமிப்பிலிருந்து இன்னும் மீளவில்லை என்று கேள்வி!
டிசம்பர் 18-ம் தேதியன்று சத்யம் தியேட்டர் உட்பட உலகெங்கும் ரிலீஸாகிறது 'மார்கழி ராகம்'. இதில் கர்னாடக இசைக்கும் அரிதாரம் பூசியிருக்கிறார்கள்.
''மார்கழி மாசத்துல சென்னையில் 100 சபாக்களுடன் நாங்களும் களத்தில் குதிக்கப் போகிறோம்'' என்றார் படத்தின் இயக்குநர் ஜெயேந்திரா. புன்னகை தவழ்ந்தது அவர் முகத்தில்!
2 மணி நேர சினிமா, 'மார்கழி ராகம்'. அதாவது 2 மணி நேரத்துக்கு டி.எம்.கிருஷ்ணாவும் பாம்பே ஜெய |