Published:Updated:

'ஓ மேரி சோனா..'

'ஓ மேரி சோனா..'

'ஓ மேரி சோனா..'
'ஓ மேரி சோனா..'
'ஓ மேரி சோனா..'

சோனாவுக்குத் தூக்கிவாரிப் போட் டது. அந்த நிழல் நெருங்கி வந்தது. கேஷ§வலாக சிகரெட் பற்ற வைத்தது. தீக்குச்சி வெளிச்சத்தில்தான் அந்த நிழலின் நிஜம் யாரெனத் தெரிந் தது சோனாவுக்கு. கொஞ்ச நேரத்துக்கு முன்பு மாநிற நடிகையின் அம்மாவோடு உணவருந்திக் கொண்டிருந்தவன்தான் அவன்.

'இன்றைய இரவு முழுக்க இந்த நாயோடுதானா!' கைகளை உயரேதூக்கி, கவர்ச்சியாகக் குமைந் தாள் சோனா. ஆனால், அந்த நிழல் என்ன நினைத்ததோ... சோனாவை சீண்டிக் கூட பார்க்கவில்லை.

''நான் சென்னை யையே உள்ளங்கைக்குள்ள வெச்சிருக்கிற புரோக்கர். நாளுக்கு நாள் கஸ்டமர்ஸ் பெரு கிட்டே போறாங்க. கைவசமுள்ள 'சரக்கு' போதலை. நீ

மும்பையில இருந்து பொண்ணுங்களை அனுப்பி வச்சா... எந்த சேதாரமும் இல்லாமல் சம்பாத்தியத்தையும் சரக்கையும் உனக்கு பத்திரமா திருப்பி அனுப்பி வச்சிடுறேன்!'' -நிழல் பேசியபோதுதான், இது துட்டு விவகாரம் என்று புரிந்தது. அப்போதைக்கு ஓகே சொல்லி அனுப்பி வைத்தாள் சோனா. நிழல் போன பின்னால் சோனாவின் பண ஆசை, நாக்கைச் சுழற்றிக் கொண்டு எழுந்தது. 'சபலக்காரர்களின் ஏக்கக் கோட்டையாக இருக்கும் சென்னையை நானே ஆளப் போகிறேன்!' என மனதுக்குள் திட்டம் வகுக்கத் தொடங்கினாள். அதன் பிறகு சோனா என்கிற சூறாவளி சென்னையை மையம் கொண்டு கரை கடந்தது முதல் இப்போது கைதாகியிருப்பது வரையிலான கதைகளை போலீஸார் பலவகையாகப் புட்டு வைக்கின்றனர் -

''மாநிற நடிகையின் அழைப்பின் பேரில்சென்னைக்கு வந்து சபலக்காரர்களின் பட்டியலை அள்ளிக்கொண்டு போன சோனா, ருசி கண்ட பூனையாக 1997-ம் ஆண்டு மறுபடியும் சென்னைக்கு வந்தாள். கைநிறைய கலர்கலராகப் பெண்கள். 'சரக்கின் விலையை கஸ்ட மர்களே ஃபிக்ஸ் பண்ணட்டும்!' என அறிவித்து அந்தத் தொழிலுக்கே புதுப் பாணியைக் கற்றுக் கொடுத்தாள் சோனா. அப்புறமென்ன... சினிமா தொடங்கி பிசினஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் சோனா வலைக்குள் வந்து விழத் தொடங்கினர். கைவசமுள்ள சரக்குகளைத் தொழிலுக்கு அனுப்பிவிட்டு, காபரே ஆடப் போவது சோனாவின் ஹாபியானது. எழும்பூர், அண்ணாசாலை உள்ளிட்ட ஏரியாக்களில் இருந்த பிரசித்தி பெற்ற ஹோட்டல்களில் ஆட்டம் போட்டுப் பணத்தையும், கூடவே சுகத்துக்கு ஏங்கும் குடும்பஸ்தர்களையும் அள்ளிக் கொண்டு வந்தாள்.

சென்னையில் தொடங்கிய புதிதிலேயே தொழில் சக்கைப்போடு போட, லோக் கல் புரோக்கர்களான பாக்கியம், தாஜ் உள்ளிட்ட பலரையும் தனக்குப் பக்கபல மாகச் சேர்த்துக் கொண்டாள் சோனா. தன் தம்பி மோகன் ரெட்டியை தனது நிதி

'ஓ மேரி சோனா..'

நிர்வாகத்தை கவனிக்க சென்னைக்கு அழைத்து வந்தாள். நிரஞ்சன்குமார், கன்னட பிரசாத், கேரள விஜி உள்ளிட்ட டை கட்டிய 'மாமா'க்களை கைவச மாக்கினாள். சோனாவின் சுகப் பிரதேசமாக மாறியது சென்னை.

ஆரம்பத்தில் பிசினஸ் புள்ளிகளை மட்டுமே குறி வைத்து வீழ்த்திய சோனா, வீழ்ந்தவர்கள்லிஸ்ட்டிலிருந்து தனக்கு இணங்கி வருபவர்களது பெயர்களை மட்டும் உருவிக் கொண்டாள். அவர்களுக்காக விதவிதமான பெண்களை சப்ளை செய்தாள். சென்னையில் இன்றைக்கும் புகழ் பெற்று விளங்கும் பிசினஸ்மேன் ஒருவர் 'அந்த' விஷயத்தில் 'அப்படியானவர்' என் பதைத் தெரிந்து கொண்ட சோனா, தெலுங்கு வாசு என்பவன் மூல மாக 'புதுசு புதுசாக' அவருக்கு அர்ப்பணிக்க ஆரம்பித்தாள். அறிஞர்கள், கலைஞர்களுக்கு நிதியை அள்ளிக்கொடுத்து ஆதரிப் பதில் பெயர் பெற்ற ஒரு புள்ளியும் சோனா வலையில் விழுந்தார். அவர்கள் நழுவாமல் இருப்பதற்காகவே விகாஷ்ரெட்டி மூலம் வெளிநாட்டுப் பெண்களையும் இறக்குமதி செய்யத் தொடங்கினாளாம் சோனா. 'ஃபிளைட்டில் வந்த பெண் கவிதை உனக்கே உனக்கு...' என்று பாடாத குறைதான்! இதற்கிடையில், சோனாவின் கொடி சினிமா உலகத்தின் பக்கமும் நீண்டது. அள்ளி இறைக்கிற பணம்... சொகுசான, குறைவில்லாத வசதிகள்... கொத்துக் கொத்தாக வந்து விழுந் தார்கள் திரையுலகக் குமரிகள். ஸ்லோமோஷனில் பாந்தமும் பரவசமும் காட்டும் குடும்பப் பாங்கான அந்த நடிகை தொடங்கி மான்களையும் மயில்களையும் மிஞ்சும்படி ஆடக்கூடிய நான்கெழுத்து அழகி வரை அத்தனை பேரும் சோனாவின் சுருக்குப் பையில் என்று சொல்கிறது போலீஸ்!

'விஷயம் முடிஞ்சதும், வியர்வை காயறதுக்குள்ள பணம்' என்பதுதான் சோனாவின் பாணி. அதேநேரம் வம்படி யாக சோனா யாரையும் வலைக்குள் விழ வைப்பதும் கிடையாது. மார்க்கெட் போன சில நடிகைகள் சோனாவை நாடி வந்து 'பிஸியா நடிச்சுகிட்டிருந்தப்ப தவறான பாதைக்குப் போனதில்லை. கையில காசு இல்லைங்கிறப்பதான் வாழ்க் கையை நினைச்சு பயம் வருது!' எனச் சொல்லி கண்ணைக் கசக்கி இருக்கிறார்கள். கட்டாயத்துக்காக மனசு ஒப்பாமல் வருகிறவர்களை சகதிக்குள் தள்ளி விடுவதில் சோனாவுக்கு விருப்பம் கிடையாது. வேண்டிய பணத்தை இனாமாகவே அவர்களுக்குக் கொடுத்திருக்கிறாள் சோனா!'' - என்று நவரச ரூபங் களை எடுத்து வைக்கிறார்கள் போலீஸில்.

தன் குழாமோடு வந்து சென்னையையே குஷிப் படுத்திய சோனாவுக்கு சில நடிகைகள் மீது வருத்தமும் உண்டாம். சோனா ஒரு ரேட் பேசி அனுப்ப... அந்த நடிகைகளோ 'பெட்ரூம் கேபினட்'டில் மயக்கமான தீர்மானம் போட்டு, சம்பந்தப்பட்ட புள்ளியை தங்களின் வளையத்துக்குள் வாகாக இழுத்துக் கொள்வார்களாம். இதன்பின் அந்தப் புள்ளிக்கு நடிகையோடு 'நேரடி டச்' கிடைத்து விடுவதால், சோனாவை மறந்துவிடுவார்களாம். இந்த குறுக்கு புத்தி சோனாவுக்குப் பிடிக்காததால், பல நடிகைகளுடனான உடன்படிக்கையை வெட்டிக் கொண்டாளாம்.

இந்த நிலைமையில்தான், கேரள உன்னி என்பவர் மூலமாக ஒரு டாக்டர் சோனாவை வந்து பாத்தார். அந்த டாக்டருக்கு சோனாவின் ட்ரீட்மென்ட்...

- அடுத்த இதழில் முறியும்...