Published:Updated:

ராண்டர் கை கேஸ்புக்

ராண்டர் கை கேஸ்புக்

ராண்டர் கை கேஸ்புக்
மர்மக் கடிதம்!
ராண்டர் கை கேஸ்புக்

டிவேலு மட்டும் போலீஸால் கைது செய்யப் பட... மற்ற இருவர் யார் என்பது பெரும் கேள்விக் குறியாக உருவெடுத்தது. இந்நிலையில், போலீ ஸ§க்கு சில உபயோகமான தகவல்கள் கிடைத்தன.

ராண்டர் கை கேஸ்புக்

லட்சுமிகாந்தன் தாக்கப்பட்ட அன்று அந்தப் பகுதியில் வடிவேலுடன் கூட்டாகச்

சென்ற அந்த இருவரும், வடிவேலின் சாதியைச் சேர்ந்தவர்கள்.ஓரளவு படித்தவர் கள். தங்கள் இனத்தைச் சேர்ந்தவர் களுக்குத் தேவையான சேவைகளைச் செய்பவர்கள். கோர்ட், கேஸ் என்ற அனுபவங்களும் அவர்களுக்கு உண்டு. ஆகவே, லட்சுமிகாந்தனுடன் தனக்கிருந்த வீட்டுத் தகராறுகளுக்காக அவர்களை நாடினான் வடிவேலு.

இந்தத் தகவல்கள் தெரிந்ததும் உடனடியாக அந்த இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கும் லட்சுமிகாந்தனுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. இருந்தும், போலீஸ் அவர்களை அந்தக் கொலையுடன் தொடர்புபடுத்தி விசாரித்ததைப் பார்த்த அவர்கள் இருவரும், அரண்டு போனார்கள்.

அவர்கள் இருவரும் சில நாட்கள் காவலில் வைக்கப் பட்டனர். அதை எதிர்த்து அவர்கள் உயரதிகாரிகளுக்கு மனு போட்டனர். அதன் விளைவாக போலீஸ் அவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டது. வடிவேலு மட்டும் சிறையில் வைக்கப்பட்டான்.

இதற்கு மேல் வழக்கு விசாரணை சண்டிக் குதிரையாக நின்றுவிட்டது. 'யாரோ சில பெரிய மனிதர்களைக் காப்பாற்று வதற்காக, சென்னை நகர போலீஸ் காலம் தள்ளுகிறது' என்று மக்கள் பேசத்தொடங்கினார்கள்.

மக்கள் மனதை எதிரொலிப்பதைப் போல், அந்த சமயத்தில் பொன்.முத்துராமலிங்கத்தேவர் ஒரு பொதுக்கூட்டத்தில், 'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு விசாரணையில் போலீஸ் காரர்கள் யாரையோ பாதுகாக்க... எதுவும் செய்யாமல் இருக்கிறார்கள்!' என்று குற்றம் சாட்டினார். அவருடைய குற்றச்சாட்டு பத்திரிகைகளில் பிரதான இடம் பெற்றது.

இவ்வளவு நடந்த பிறகு வெள்ளைக்கார கவர்னரால் சும்மா இருக்க முடியவில்லை. மாகாணத்தின் உயர் போலீஸ் அதிகாரி களை அழைத்து அவர்களுக்கு டோஸ் விட்டு, குற்றவாளிகளை விரைவில் கைது செய்யும்படி எச்சரித்து அனுப்பினார்.

உடனடியாக போலீஸ் கோதாவில் இறங்கியது. அவசர அவசரமாக மூன்று பேரைக்

ராண்டர் கை கேஸ்புக்

கைது செய்தது. ஒருவன் லட்சுமி காந்தனின் பால்காரன் நாகலிங்கம். மற்றொருவன், புரசைவாக்கத்தில் கறிக்கடை வைத்திருந்த ராஜாபாதர். மூன்றாவது நபர் ஆரிய வீரசேனன்!

'வடிவேலுடன் சேர்ந்து லட்சுமிகாந் தனைக் குத்திய மற்றொருவன் முப்பது வயது மதிக்கத்தக்க நாகலிங்கம்தான்...' -இது போலீஸின் வாதம்! அப்படியென்றால் லட்சுமிகாந்தன் ஏன் வெள்ளைக்காகிதத்தில் அவன் பெயரைக் குறிப்பிடவில்லை. இத்தனைக்கும், தன் ஏரியா பால்காரன் என்ற முறையில் அவனுக்கு நாகலிங்கத்தைப் பல ஆண்டுகளாகவே தெரியும். ஆனால், சாகும்வரை நாகலிங்கத்தின் பெயரை அவன் யாரிடமும் சொல்லவே இல்லை. அப்படியானால், போலீஸ்காரர்கள் அவனை கைது செய்வானேன்? இதுவும் இன்றுவரை புரிபடாத மர்மமாகவே இருக்கிறது.

ஆரிய வீரசேனன் புரசைப்பகுதியில் பிரபலமானவர். ஓரளவு வசதியானவர். லட்சுமிகாந்தனின் மெய்க்காப்பாளராகவும் இருந்தவர். அவரையும் கைது செய்வானேன்? இது இன்னொரு அவிழ்க்கப்படாத முடிச்சு!

ராஜாபாதருக்கு லட்சுமிகாந்தன் யார் என்றே தெரியாது. அவனை எதற்காகக் கைது செய்தார்கள் என்பதும் இன்றுவரை காலத்தின் இருள் குகையில் கேள்வியாகவே கிடக்கிறது!

இந்த சந்தர்ப்பத்தில் போலீஸ்காரர்களுக்கு ஒரு கடிதம் கிடைத்தது. அதில் லட்சுமிகாந்தன் கொலை பற்றி சில வரிகள் எழுதப்பட்டிருந்தன.

அதை எழுதியவன் கதாசிரியன் என்று சொல்லித் திரிந்த ஏ.கே.ராமண்ணா! (இவன் அப்போது புரசைப் பகுதியில் குடியிருந்தான். இவன் குடியிருந்த வீட்டு ஓனர் அந்நாளில் ஓரளவு மக்களுக்கு அறிமுகமான நடிகர் வி.எஸ்.மணி)

'நேற்று காலை சுமார் 10.30 மணியளவில் சி.என்.எல். வக்கீல் நற்குணம் வீட்டிலிருந்து திரும்பி வரும்போது லட்சுமிகாந்தன் மூன்று இடங்களில் 'பிச்சுவாÕவினால் குத்தப்பட்டான்... மறுநாள் அதிகாலை நான்கு மணியளவில் செத்தான்.... அவனைத் தீர்த்துக்கட்டியவன் - (கடிதத்தில் பெயர் குறிப்பிடப்படவில்லை) நேற்று காலை... 11 மணிக்கு என்னிடம் வந்தான். 'சி.என்.எல்-ஐ தீர்த்துக் கட்டிவிட்டேன். இதை யாரிடமும் சொல்லாதே!' என்று என்னிடம் சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.' -இதுதான் கடிதத்தில் இருந்தவரிகள்!

அந்தக் கடிதத்தில் நவம்பர் 9, 1944 என்ற தேதி எழுதப்பட்டிருந்தது. கையப்பமிட்டவன் ஏ.கே.ஆர். இந்தப் பரபரப்பூட்டும் மர்மக் கடிதம் சென்னையிலிருந்து சுமார் இருநூறு மைல்களுக்கு அப்பாலிருந்த சேலத்துக்கு 14-ம் தேதி காலையில் போய்ச் சேர்ந்தது. கடித உறையில் 'வி.எஸ்.மணி. மே/பா. மாடர்ன் தியேட்டர்ஸ்' என்ற விலாசம் எழுதப்பட்டிருந்தது. அப்போது வி.எஸ்.மணி மாடர்ன் தியேட்டர்ஸ் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.

மற்றொரு புரியாத புதிர்... அந்தக் கடிதத்தை தபால்காரன் நடிகர் மணியிடம் கொடுக்கும்போது அவர் அருகில் உட்கார்ந் திருந்தார், சென்னை நகர போலீஸ் அதிகாரி கே.வி.வெங்கிடசுப்ரமணியம். கடிதத்தைக் கைப்பற்றத்தான் அப்படி உட்கார்ந்து கொண்டிருந்தார்.

அது எப்படி?

ராமண்ணா அந்தக் கடிதத்தை புரசைவாக்கம் நெடுஞ்சாலை வெள்ளாளத்தெரு சந்திக்கும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு தபால் பெட்டியில் போட்டதாக ஒரு கதை.

அவனே எழுதிப்போட்டானா? அல்லது வேறு யாராவது எழுத வைத்தார்களா? மீண்டும் ஒரு மர்மம். இந்தக் கடிதம் அந்நாளில் பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தால் கைப்பற்றபட்டது.

அது இரண்டாவது உலகப்போர் நடந்து கொண்டிருந்த காலம். அப்போது அரசாங்கத்துக்கு எந்தக் கடிதத்தையும் பிரித்து, படித்துப் பார்க்கும் உரிமை இருந்தது. அதற்கென்று ஒரு தனி இலாகாவே இருந்தது. அவர்கள் இந்தக் கடிதத்தைக் கைப்பற்றுவானேன்? ராமண்ணா ஒரு உளவாளி அல்ல! பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக வேலை செய் பவனுமல்ல. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கு எடுத்தவனும் அல்ல. அப்படிப்பட்டவன் எழுதிய கடிதத்தை சென்னை காவல்துறை கைப்பற்றுவானேன்?

அவர்கள் அந்த கடிதத்தை அன்று சென்னை நகர உயர்போலீஸ் அதிகாரியாக இருந்த ஏ.வி.பாத்ரோவுக்கு அனுப்பினார்கள். அதை அவர் அருணகிரி முதலியாருக்கு அனுப்பினார். அந்தக் கடிதத்தை போலீஸ்காரர்கள் படித்தார்கள்.

ராண்டர் கை கேஸ்புக்

மீண்டும் அதை ஒட்டி சேலத்துக்கு தபாலில் அனுப்பினார்கள். அதனால்தான் அந்தக் கடிதம் சேலம் போய்ச் சேருவதற்கு ஐந்து நாட்கள் ஆகியது.

பின்னாளில் வழக்கு விசாரணையில் குற்றவாளிகளுக்காக வாதாடிய பிரபல வக்கீல்கள் இந்தக் கடிதம் குறித்து பலமான கேள்விகளை எழுப்பினார்கள். போலீஸாரே கடிதத்தைத் தயார் செய்திருக்கிறார்கள் என்று வாதாடினார்கள்.

உண்மை எதுவாக இருந்தாலும் போலீஸ்காரர்கள் ராமண்ணாவை சுலபமாகவே பிடித்தார்கள். அவனை கைது செய்யாமலேயே தங்கள் கஸ்டடியில் வைத்திருந்தார்கள். அவனுடைய உணவுத் தேவையையும் செலவையும் போலீஸே கவனித்துக்கொண்டது.

ராமண்ணா தன்னுடைய கடிதத்தில் ஒருவரின் பெயரைக் குறிப்பிடாமல் ஒரு கோடு மட்டும் போட்டது ஏன்? போலீஸ்காரர் களிடம் அந்தச் செய்தியைச் சொன்னவர் ஆரிய வீரசேனன். வி.எஸ்.மணி மூலமாக ராமண்ணாவுக்கு ஆரிய வீரசேனனைத் தெரியும். அவர் மூலமாக லட்சுமிகாந்தனை சந்தித்திருக்கிறான்!

அது மட்டுமல்லாமல், 'லட்சுமிகாந்தனை தீர்த்துக்கட்ட பின்னணியில் இருந்து செலவு செய்தவர்கள் தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், ஸ்ரீராமுலுநாயுடுÕ என்றான் ராமண்ணா!

லட்சுமிகாந்தன் நடத்தி வந்த 'சினிமா தூது' பத்திரிகையை எதிர்த்து. சர். ஆர்தர் ஹோப்புக்கு திரைப்படப் புள்ளிகள் முன்பு அனுப்பிய மனு விவகாரத்தை இந்த கடிதத்துடன் முடிச்சுப் போட்ட னர் போலீஸார். அந்த மனுவில் கையெழுத்திட்ட மிகப்பிரபலமான புள்ளிகள் தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் மற்றும் ஸ்ரீராமுலு நாயுடு!

இதற்கிடையே போலீஸ்காரர்கள் ராயபுரத்தைச் சேர்ந்த ஜெயானந்தம் என்பவனைக் கைது செய்தார்கள். அவன் ஊர் பேர் தெரியாத மீனவ வகுப்பைச் சேர்ந்த கிறிஸ்துவன். அவனுக்கு நிரந்தரமான தொழில் ஏதும் இல்லை.

அவனுக்கு ஒரு சகோதரி. வசீகரமான அழகி. அவள் பெயர் கிளேரா. இவள் ஒரு தமிழ்ப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறாள். அப்போது அவள் பெயர் சந்திரா என மாற்றப்பட்டது.

கிளேரா என்ற சந்திராவைப் பற்றி லட்சுமிகாந்தன் தன் பத்திரிகை யில் அவதூறாக எழுதித் தள்ளியிருந்தான். அவளுடைய நடத்தைக்கு சகோதரன் ஜெயானந்தமும் உடந்தை என்று குறிப்பிட்டிருந்தான்.

அதனால் ஜெயானந்தமுக்கும் லட்சுமிகாந்தனைக் கொலை செய்யவேண்டுமென்ற எண்ணம் இருந்தது என்றது போலீஸ். ஜெயானந்தனையும் போலீஸ்காரர்கள் ஒதுக்குப்புறமான ஒரு போலீஸ் நிலையத்தில் நீண்ட நாள் வைத்திருந்தார்கள்.

ஜெயானந்தம், 'எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறேன்' என்ற வகையில் 'எல்லாம் உண்மை' என்று பிரமாணம் செய்து நீதிமன்றத்தில் சொன்னான். அதன் விளைவாக அவனுக்கு 'கிங்ஸ் பர்டன்' (kings pardon) கொடுக்கப்பட்டு வழக்கில் அப்ரூவராக ஏற்றுக்கொள்ளப்பட்டான்.

('கிங்ஸ் பர்டன்' என்றால் 'அரச மன்னிப்பு' என்று அர்த்தம். அதாவது, நடந்ததை வெளியிட்டால் நீ மன்னிக்கப்பட்டு, குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்படுவாய். அப்ரூவராக அவன் ஏற்றுக்கொள்ளப்பட்டு பிராசிக்யூஷன் சார்பாக அவனே முக்கிய சாட்சியாக நிறுத்தப்படுவான். அந்த அமைப்பு இன்றைய அளவிலும் அமலில் இருக்கிறது.)

அப்ரூவரான ஜெயானந்தம் சென்னை உயர் நீதிமன்ற செஷன்ஸ் விசாரணையில் எல்லோரையும் திடுக்கிட வைக்கும் வகையில் 'பல்டி அடித்தான்.' நீதிபதி வியர் மார்க்கெட்டின் முன்பு, 'நான் மாஜிஸ்திரேட்டிடம் சொன்னதெல்லாம் அப்பட்டமான பொய். போலீஸ்காரர்கள் என்னை அடித்துத் துன்புறுத்தினார்கள். அவர்கள் சொல்லித் தந்ததை மாஜிஸ் திரேட்டிடம் சொல்லச் சொன்னார்கள். மறுத்தால், என் சகோதரி கிளேராவையும் கைதுசெய்வோம் என்று மிரட்டினார்கள்' என்றான்.

ஜெயானந்தம் அடித்த பல்டி பிராசிக் யூஷனை ஆட்டம்காண வைத்தது. பிராசிக் யூஷன் தரப்பில் ஆஜரானவர் பின்னாளில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரதம நீதிபதி யாக இருந்த பி.வி.ராஜமன்னார். விசாரணை சமயத்தில் அவர் அட்வகேட் ஜெனரலாக இருந்தார். அவரே ஆடிப்போனார். சட்டப் படி ஜெயானந்தமை குறுக்கு விசாரணை செய்தார்.

இந்த எதிர்பாராத திருப்பம் பின்னாளில் தியாகராஜ பாகவதர், என்.எஸ். கிருஷ்ணன் ஆகியோர் விடுதலை அடைவதற்கு அடிப் படையாக அமைந்தது.