'நடனப் புயல்' பிரபு தேவாவின் குடும்பத்தில் காலன் இப்படியரு 'ருத்ரதாண்டவம்' நடத்துவான் என யாரும் எதிர் பார்க்கவில்லை!
டிசம்பர் 4-ம் தேதி அதிகாலை மூன்றரை மணிக்கு பிரபுதேவாவின் மூத்த மகன் விஷால் அகால மரணம் அடைய... திரையுலகமே அன்று கறுப்பு காஸ்ட்யூமில் துக்கத்தை வெளிப்படுத்தியது!
பிரபுதேவாவின் மூன்று மகன்களில் மூத்தவன் விஷால். திருவான்மியூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். சின்னஞ்சிறு வயதிலேயே விஷாலைப் பற்றிக்கொண்ட எலும்புப் புற்றுநோய்தான் அவன் உயிரைப் பறித்துவிட்டது.
''நாலாம் தேதி காலைல ஏழு மணிக்கு ஒரே டைம்ல, பின்னி மில்லுல விஜய் அறிமுகமாகிற டைட்டில் பாட்டையும், கிருஷ்ணவேணி ஹவுஸ்ல விஜய் அப்பா இறந்து போற மாதிரியும் 'வில்லு' படத்துக்காக ரெண்டு இடத்துல ஷ¨ட்டிங் நடத்தத் திட்டமிட்டிருந்தோம். அதற்காக முதல்நாள் இரவு உதவி இயக்குநர்களோடு டிஸ் கஷனில் இருந்த பிரபுதேவா, அந்த காட்சிக்குத் தேவையான பாடை, மாலை, கோடித்துணி போன்றவற்றை ரெடி செய்து கொண்டிருந்தார். அப்போ விஷால் போன் பண்ணி, 'என்னாப்பா எங்கூட இருக்கவே மாட்டேங்குற... நாளைக்கு பூரா என்கூடவே இருக் கணும். நீங்க வர்ற வரைக்கும் நான் தூங்கவே மாட்டேன்'னு சொன்னான். டைரக்டர் வீடு போய் சேர லேட்டாயிடுச்சு. எப்போது போனாலும்
கொஞ்ச நேரம் தூங்குற மாதிரி பாவ்லா பண்ணிட்டு, அப்புறமா திடீர்னு கண்ணு முழிச்சு குபீர்னுசிரிப்பது விஷாலின் வழக்கம். அதுமாதிரி அன்னிக்கும் விளையாடுறான்னுதான் பிரபு நெனச்சிருக்கார். ரொம்ப நேரமாகியும் அவன்
விழிக்கல. அதிர்ச்சியானவர் அசைச்சு பார்த்திருக்கார். ஒண்ணும் தெரியல... பக்கத்துல இருக்குற டாக்டருக்கு போன் பண்ணி அழைச்சுருக்கார். டாக்டரோ, 'நான் வரமுடியாது. நீங்க வேணா பேஷன்ட்டை என்கிட்டே அழைச்சிட்டு வாங்க'னு சொல்லியிருக்கார். இவங்க பதறிக்கிட்டு போனா... விஷால் ஏற்கெனவே இறந்துட்டதா டாக்டர் சொல்லிட்டார்!'' என அந்த அதிகாலையில் நடந்த அஸ்தமனத்தை விளக்கினர் 'வில்லு' பட யூனிட்டார்.
விஷாலின் திடீர் மரணம் பிரபுதேவாவை நிலைகுலைய வைத்துவிட்டது. துக்கம் விசாரிக்க வந்த அனைவரிடமும், 'மாலை போடக்கூடாது, போட்டோ எடுக்கக்கூடாது. என் மகன் சாகலை. அவன் தூங்குறான்' என புத்திரசோகத்தில் பேதலித்துக் கொண்டிருந்தார் பிரபுதேவா.
ரஜினி மட்டும் பிரபு தேவாவைத் தேற்றி, மாலையை விஷாலுக்கு அணிவித்தார். பொதுவாக இறப்பு நிகழ்ச்சிக்கு செல்வதை விரும்பாத ரஜினி, விஷாலுக்கு குடும்பத்தோடு அஞ்சலி செலுத்த வந்திருந்தார்! அப்போது, ''பாக்கறதுக்கு பேஷன்ட் மாதிரியே தெரிய மாட்டானே. ஜம்முன்னு இருப்பானே! நல்லகுரோத், ச்...ச்...சே அவனுக்குப்போய் இப்படி ஆயிடுச்சே!'' என்று சுருங்கிய நெற்றிப் பொட்டில் கைவைத்துக் கண் கலங்கினார்.
'வில்லு' நாயகன் விஜய், செய்தியைக் கேள்விப்பட்ட வுடன் அதிகாலையே மனைவி சங்கீதாவுடன் ஆஜராகி விட்டார். ''காலங்காத்தால, 'விஷாலுக்கு ப்ரீத்திங் |