Published:Updated:

மதுரவாயலில் நடந்த கொடூர விபத்து; தம்பியின் கண்முன்னே பறிபோன அக்காவின் உயிர் - என்ன நடந்தது?

சாலை விபத்து - உயிரிழந்த ஷோபனா
News
சாலை விபத்து - உயிரிழந்த ஷோபனா

மதுரவாயலில் இளம்பெண் ஒருவர் சாலை விபத்தில் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.

Published:Updated:

மதுரவாயலில் நடந்த கொடூர விபத்து; தம்பியின் கண்முன்னே பறிபோன அக்காவின் உயிர் - என்ன நடந்தது?

மதுரவாயலில் இளம்பெண் ஒருவர் சாலை விபத்தில் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.

சாலை விபத்து - உயிரிழந்த ஷோபனா
News
சாலை விபத்து - உயிரிழந்த ஷோபனா

சென்னை அருகிலுள்ள போரூர் பகுதியைச் சேர்ந்தவர் ஷோபனா (22). இவர் கூடுவாஞ்சேரியிலுள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினீயராகப் பணியாற்றிவந்தார். இந்த நிலையில் நேற்று ஷோபனா, தன் தம்பியைத் திருவேற்காட்டிலுள்ள பள்ளியில் விடுவதற்காகத் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சென்றிருக்கிறார். மதுரவாயல் சர்வீஸ் சாலையில் பயணம் செய்தபோது, சாலையில் எதிரே வந்த வேன் ஷோபனாவின் இரு சக்கர வாகனத்தில் மோதியதாகக் கூறப்படுகிறது.

விபத்து நடந்த சாலை
விபத்து நடந்த சாலை

இதில் நிலை தடுமாறி ஷோபனா பைக்குடன் சாலையில் விழுந்தார். அப்போது சாலையில் மணல் ஏற்றிக்கொண்டுவந்த லாரி ஒன்று ஷோபனாவின் தலையில் ஏறி இறங்கிச் சென்றது. இதில் ஷோபனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதிர்ஷ்டவசமாகப் பின்னால் அமர்ந்திருந்த அவருடைய தம்பி லேசான காயங்களுடன் உயிர்தப்பினார். இருந்தபோதிலும், கண்முன்னே தன் அக்கா உயிரிழந்ததைக் கண்ட சிறுவன் கதறி அழத் தொடங்கினான்.

விபத்து குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், ஷோபனாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும், விபத்து குறித்து பூந்தமல்லி போக்குவரத்து காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர். அந்தச் சாலை மிகவும் குண்டும் குழியுமாக இருந்ததுதான் விபத்துக்குக் காரணம் என்று அந்தப் பகுதி மக்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர். இந்தச் சாலையைச் சரிசெய்யப் பலமுறை கோரிக்கைவைத்தும் அரசுத் தரப்பில் சரிசெய்யவில்லை என்று கூறப்படுகிறது.

சாலைகளைச் சரிசெய்யும் பணி
சாலைகளைச் சரிசெய்யும் பணி

விபத்து நடந்து ஒருவர் உயிரிழந்திருக்கும் நிலையில், தற்போது சாலையிலுள்ள பள்ளங்களைச் சரிசெய்யும் பணி நடைபெற்றுவருகிறது. `இந்தப் பணியை முன்னரே செய்திருந்தால், அநியாயமாக ஓர் இளம்பெண்ணின் உயிர் பறிபோயிருக்காது’ என்று ஷோபனாவின் உறவினர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். இந்த நிலையில், விபத்துக்குக் காரணமான வேன் ஓட்டுநர் பார்த்திபன், லாரி ஓட்டுநர் மோகன் ஆகியோரை இன்று போலீஸார் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். சாலை விபத்தில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.