Published:Updated:

2-ம் வகுப்பு மாணவியை வகுப்பறையில் வைத்துப் பூட்டிய ஊழியர்கள்... அலட்சியத்தால் நடந்த அவலம்!

பூட்டிய அறை
News
பூட்டிய அறை

உத்தரப்பிரதேசத்தில் 2-ம் வகுப்பு மாணவியை ஊழியர்கள் வகுப்பறையில் பூட்டிவிட்டுச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:

2-ம் வகுப்பு மாணவியை வகுப்பறையில் வைத்துப் பூட்டிய ஊழியர்கள்... அலட்சியத்தால் நடந்த அவலம்!

உத்தரப்பிரதேசத்தில் 2-ம் வகுப்பு மாணவியை ஊழியர்கள் வகுப்பறையில் பூட்டிவிட்டுச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பூட்டிய அறை
News
பூட்டிய அறை

உத்தரப்பிரதேச மாநிலம், புலந்த்சாகிர் மாவட்டத்திலுள்ள பள்ளி ஒன்றில் 2-ம் வகுப்பு படித்துவரும் மாணவி ஒருவர் வகுப்பறையில் பூட்டப்பட்டிருக்கிறார். வியாழக்கிழமை மாலை வேளையில் சிறுமி வீடு திரும்பாத காரணத்தால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக பள்ளிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது வகுப்பறையிலிருந்து அந்தக் குழந்தை அழும் சத்தம் கேட்டிருக்கிறது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாகக் கதவைத் திறந்து பார்த்தபோது, அந்தச் சிறுமி வகுப்பறையில் அழுதுகொண்டிருந்தாள்.

2-ம் வகுப்பு மாணவியை வகுப்பறையில் வைத்துப் பூட்டிய ஊழியர்கள்... அலட்சியத்தால் நடந்த அவலம்!

பள்ளிக்கூட ஊழியர்கள் தவறுதலாக சிறுமியை வகுப்பறையில் வைத்துப் பூட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில், இது தொடர்பாகக் கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். வியாழக்கிழமை அந்தப் பகுதியில் தொகுதி அளவிலான யூனியன் தேர்தல் இருந்தது, அதற்காக ஆசிரியர்களும், தலைமை ஆசிரியரும் சீக்கிரமாகப் பள்ளியைவிட்டு வெளியேறிவிட்டனர் எனக் கூறப்படுகிறது.

அந்த விசாரணையில், பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் குழந்தைகளை ஊழியர்களின் பொறுப்பில் விட்டுவிட்டு சிறிது நேரத்துக்கு முன்பாகவே வீடு திரும்பியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அலட்சியமாக இருந்த தலைமை ஆசிரியர், நான்கு ஆசிரியர்கள், மூன்று ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.