Published:Updated:

``ஆளுநர் `தமிழ்நாடு' என்ற பெயரை அழிக்கப் பார்க்கிறார், பிரதமர் மோடியோ..!" - கே.பாலகிருஷ்ணன் சாடல்

கே.பாலகிருஷ்ணன்
News
கே.பாலகிருஷ்ணன்

``மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் படிக்கும் மாணவர்கள் பட்டம் பெறும்போதுகூட அவர்களால் கல்லூரியைப் பார்க்க முடியாது." - சு.வெங்கடேசன்

Published:Updated:

``ஆளுநர் `தமிழ்நாடு' என்ற பெயரை அழிக்கப் பார்க்கிறார், பிரதமர் மோடியோ..!" - கே.பாலகிருஷ்ணன் சாடல்

``மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் படிக்கும் மாணவர்கள் பட்டம் பெறும்போதுகூட அவர்களால் கல்லூரியைப் பார்க்க முடியாது." - சு.வெங்கடேசன்

கே.பாலகிருஷ்ணன்
News
கே.பாலகிருஷ்ணன்

``எங்கள் எய்ம்ஸ் எங்கே?" எனும் தலைப்பில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தாமதமாவதைக் கண்டித்தும், வரும் பட்ஜெட்டில் நிதியை ஒதுக்கி பணிகளைத் தொடங்க வேண்டும் என வலியுறுத்தியும் மதுரை, பழங்காநத்தம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.

சி.பி.எம் நடத்திய போராட்டத்தில் கூட்டணிக் கட்சியினர்
சி.பி.எம் நடத்திய போராட்டத்தில் கூட்டணிக் கட்சியினர்

இந்தப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு.வெங்கடேசன், காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர், முஸ்லிம் லீக்கின் நவாஸ் கனி, தி.மு.க எம்.எல்.ஏ கோ.தளபதி, ம.தி.மு.க எம்.எல்.ஏ பூமிநாதன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துகொண்டனர்.

போராட்டம்
போராட்டம்

மாணிக்கம் தாகூர் பேசும்போது, ``ஜப்பான் நிதி நிறுவனம் ஆறு தவணைகளாகத் தரும் நிதியைப் பெற்று, எய்ம்ஸ் கட்டுமானத்தைத் தொடங்க பா.ஜ.க அரசு தாமதிக்கிறது. 2024-ம் ஆண்டு ராகுல் காந்தி பிரதமரானவுடன் முதல் பணியாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும்" என்றார்.

சு.வெங்கடேசன் பேசும்போது, ``மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் படிக்கும் மாணவர்கள் பட்டம் பெறும்போதுகூட அவர்களால் கல்லூரியைப் பார்க்க முடியாது.

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்

கண்ணால் பார்க்க முடியாத கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு பட்டம் கொடுக்கும் ஒரே பிரதமர் மோடிதான். ஏன், பிரதமர் மோடியே படிக்காமலேயே பட்டம் பெற்றவர்தான். அது தொடர்பான வழக்குகூட நிலுவையில் இருக்கிறது.

படிக்காமலேயே பட்டம் வாங்கிய பிரதமரால், கல்லூரியைப் பார்க்காமலேயே மாணவர்கள் பட்டம் வாங்கும் அவலத்தை மாற்றவே போராடிக்கொண்டிருக்கிறோம்" என்றார்.

பாலகிருஷ்ணன்
பாலகிருஷ்ணன்

சி.பி.எம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், ``எய்ம்ஸ் மருத்துவமனைக்கான டிசைன் தயாரிப்பதற்கான டெண்டரே இன்னும் அளிக்கப்படவில்லை. இந்த நிலையில், தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை செல்கிறாராம். அது பாதயாத்திரை அல்ல, மோடி அரசுக்கான இறுதி யாத்திரை. பாதயாத்திரையின்போது மதுரை பக்கம் வந்தால் எய்ம்ஸ் எங்கே என மக்கள் கேட்டால் அண்ணாமலை என்ன சொல்வார்?

ஆளுநர் தமிழ்நாடு என்ற பெயரை அழிக்க நினைக்கிறார். பிரதமர் தமிழ்நாட்டையே அழிக்க நினைக்கிறார். தமிழ்நாட்டை யாராவது சீண்டிப்பார்த்தால், அவர்களை அடிபணிய வைப்போம்" என்றார்.

போராட்டத்தில் தலைவர்கள்
போராட்டத்தில் தலைவர்கள்

இந்தப் போராட்டத்தின்போது சி.பி.எம் கட்சியைச் சேர்ந்தவர்கள் செங்கல்லை கையில் ஏந்தி கோஷம் எழுப்பினர். எய்ம்ஸ் மருத்துவமனை கவலைக்கிடமான நிலையில் இருக்கிறது என்பதை உணர்த்தும் வகையில், ஆம்புலன்ஸ் ஸ்ட்ரெச்சரில் செங்கல்லுடன் படுத்தவாறு வந்த தொண்டரால் பரபரப்பு ஏற்பட்டது.