<p>கடந்த 1999-ல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கார்கில் போர் நடந்தது பழைய வரலாறு.</p>.<table align="right" border="0" cellpadding="1" cellspacing="1"> <tbody> <tr> <td><strong>##~##</strong></td> </tr> </tbody> </table>.<p>இப்போது, 2010-ல் இரு நாடுகளிலும் 'சைபர் வார்’ நடந்துகொண்டு இருக்கிறது மிக, ரகசியமாக... மிகப் பயங்கரமாக!</p>.<p>கத்தியின்றி, ரத்தமின்றி ஏ.ஸி. ரூமில் இருந்தபடியே, 'கம்ப்யூட்டர் கெரில்லா தாக்குதல்’ மேற்கொண்டு, இரு நாட்டு அரசாங்கங்களும் நூற்றுக் கணக்கான வெப்சைட்டுகளை மாறி மாறி வீழ்த்தும் போர்!</p>.<p>அந்தந்த நாட்டில் உள்ள கம்ப்யூட்டர் நிபுணர் களில் சிலர், தங்கள் கிரிமினல் மூளைகளை இந்த சைபர் யுத்தத்துக்குப் பயன்படுத்துகின்றனர். 'ஹேக் கர்ஸ்’ என்று சொல்லிக்கொள்ளும் இவர்கள், 'இந்தியன் </p>.<p>ஹேக்கர்ஸ், பாகிஸ்தான் ஹேக்கர்ஸ்’ என்று பிரிந்து நின்று, எதிரிகளாகச் செயல்படுகின்றனர். இந்தியன் சைபர் ஆர்மி (ஐ.சி.ஏ.), பாகிஸ்தான் சைபர் ஆர்மி (பி.சி.ஏ.) என்று இரண்டு பேனர்களில் இணைய தளங்களில் போர் முகங்களுடன் வலம்வரும் இவர்கள் அரங்கேற்றும் அதிரடிகள், திடுக்கிடவைப்பவை!</p>.<p>இன்டர்நெட் மூலமாக வைரஸ்களை அனுப்பு வது, உளவு பார்க்கும் இ-மெயில்களை அனுப்பி எதிரியின் வெப்-சைட்டை ஆக்கிரமித்து, அங்கு இருந்து தகவல்களைத் திருடுவது, தகவல்களை காப்பியடித்துத் தங்களை ஏவிவிடும் எஜமானருக்கு அனுப்புவது, நாட்டின் முக்கிய அரசுத் துறைகளின் வெப்-சைட்டுகளுக்குள் நுழைந்து புரோக்ராம்களைத் திருத்தி அவற்றை உருக்குலைப்பது, தவறான தகவல்களைச் சேர்ப்பது... இவை எல்லாம் இந்த 'ஹேக்கர்ஸ்’களின் வேலை!</p>.<p>இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், கர்நாடக மாநில பிரபலத் தொழிலதிபரும், ராஜ்யசபா உறுப்பினருமான விஜய் மல்லையாவின் வெப்-சைட்டில் இருந்த மூவர்ணக் கொடியை அகற்றிவிட்டு, பாகிஸ்தான் நாட்டுக் கொடியை அந்த இடத்தில் பொருத்தி இருக் கிறார்கள். இது, இவர்களின் திருவிளையாடலுக்கு ஒரு சாம்பிள். உடனே இதைக் கவனித்து அதிர்ந்த மல்லையா, போலீஸில் புகார் கொடுத்தார். </p>.<p>நவம்பர் 26-ம் தேதி, மும்பைத் தாக்குதல் நடந்த நினைவு தினம். அன்று, பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தாக்குதலில் ஈடுபட்டு உயிர் நீத்த இந்திய போலீஸாருக்கு பாகிஸ்தானியர் சல்யூட் அடிக்கும் வகையில் சில சில்மிஷ வேலைகளை நம்முடைய ஆட்கள் பார்த்தார்கள். பாகிஸ்தானின் 36 அரசாங்க வெப்-சைட்களில் தங்கள் கைவரிசையைக் காட்டினார்கள். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், கடந்த டிசம்பர் 3-ம் தேதி, மிகவும் பாதுகாப்பு மிகுந்த சி.பி.ஐ-யின் அதிகாரபூர்வ வெப்-சைட்டின் முதல் பக்கத்தையே பாக்.நாட்டில் பி.சி.ஏ. ஹேக் செய்தது. அதில், 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்கிற கோஷம் வேறு இருந்தது.</p>.<p>'ஐ.சி.ஏ-வே! எங்களுடன் விளையாடாதே...’ என எச்சரித்து, '270 வெப்-சைட்டுகளை நாங்கள் ஹேக் செய்துள்ளோம்' என்றும் வாசகங்கள் மின்னின. இது டெல்லி உயர் அதிகாரி களை அதிரவைத்தது. அதைத் தொடர்ந்து, சி.பி.ஐ-யின் வெப்-சைட் மூடப்பட்டது. டிசம்பர் 13-ம் தேதி வரை அதை மீண்டும் திறக்கவில்லை. மறுசீரமைக்க சைபர் க்ரைம் நிபுணர்கள் போராடுகின்றனர்.</p>.<p>''இப்படி அரசாங்க இணையதளங்களை விஷமிகள் ஹேக் செய்வதை ஆரம்பத்திலேயே தடுக்க முடியாதா?'’ என்று முன்னாள் தமிழக டி.ஜி.பி-யான ஸ்ரீபாலிடம் கேட்டோம். ''சி.பி.ஐ-யின் சர்வர்கள் இருப்பது நேஷனல் இன்ஃபர்மேட்டிக்ஸ் சென்டரில் (என்.ஐ.சி.). இந்திய அரசாங்கத்தின் எல்லா அரசுத் துறைகளும் இந்த என்.ஐ.சி-யுடன் தொடர்பில் இருக்கின்றன. அங்கு எப்படி இது நடந்தது என்பதுதான் புரியாதபுதிர்!</p>.<p>வெப்-சைட்களை ஹேக் செய்வதற்கு என்றே கம்ப்யூட்டர் அறிவு ஜீவிகள் உலகம் பூராவும் பரவிக் </p>.<p>கிடக்கிறார்கள். இந்தியாவின் ஓ.என்.ஜி.சி. வெப்-சைட்டை இதற்கு முன்பு யாரோ ஹேக் செய்தனர். இந்த வருடத்தின் ஜனவரி முதல் ஜூன் வரை, இந்தியாவின் 4,300 வெப்-சைட்களை இப்படி ஹேக் செய்துள்ளனர். இந்த சைபர் வார்... நாட்டின் பாதுகாப்புக்கே ஆபத்தை விளை விக்கும் விவகாரம்!'' என்றார்.</p>.<p>பெங்களூருவில் உள்ள தடய அறிவியல் துறை நிபுணர் சந்திரசேகரனிடம் சி.பி.ஐ. வெப்-சைட் ஹேக் செய்யப்பட்டதைப்பற்றி கேட்டபோது, ''சி.பி.ஐ-யின் வெப்-சைட்டில் எளிதாக நுழைந்தார்கள் என்றால், அதற்குப் போதுமான பாதுகாப்பு அரண்கள் இல்லை என்றுதான் அர்த்தம். சைபர் நிபுணர்கள் எந்த நேரமும் அந்த சைட்டைக் கண்காணித்து வந்தார்களா என்று சந்தேகம் வருகிறது.</p>.<p>ஜப்பானின் ஒரு சிறுவன், கம்ப்யூட்டரில் கில்லாடி. அவன் அங்கே இருந்தபடியே அமெரிக் காவின் மிக முக்கியமான கம்பெனியின் வெப்-சைட்டுக்குள் நுழைந்து விளையாட்டுக் காட்டி னான். அப்போது முதல்தான் 'ஹேக்கிங்’ என்ற ஒன்று துவங்கி, இன்று நாடுகளுக்கு இடையே 'சைபர் வார்’ என்கிற அளவுக்கு வளர்ந்து நிற்கிறது!'' என்றார்.</p>.<p>சி.பி.ஐ-யின் உயர் அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, ''சி.பி.ஐ-யின் நெட்வொர்க், படுரகசியமானது. பாது காப்பும், கண்காணிப்பும் மிகுந்தது. இப்போது தாக்குதல் நடந்திருப்பது, பொதுமக்கள் பார்வைக்காக நாங்கள் விட்டிருந்த வெப்-சைட் ஒன்றில்தான். அதில் எந்த ரகசியங்களும் இருக்காது. இது பெரிய விஷயமே இல்லை. இருந்தாலும், இனி அப்படி ஒரு சம்பவம்கூட நடக்காத அளவுக்கு சைபர் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்தி வருகிறோம்!'' என்றார்.</p>.<p>சீனாவைச் சேர்ந்த ஹேக்கர்கள் சங்கத் தினர், கூட்டாக இந்தியாவின் சில முக்கிய வெப்-சைட்களில் திருட்டுத்தனமாக மூக்கை நுழைந்துள்ள பகீர் விஷயமும் தற்போது தெரியவந்துள்ளது. சீனாவின் எதிர்ப்பை மீறி, தங்கியிருக்கும் தலாய்லாமாவின் வெப்சைட்டில் இவர்கள் தங்களது கைவரிசையைக் காட்டியிருக்கிறார்களாம்!</p>
<p>கடந்த 1999-ல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கார்கில் போர் நடந்தது பழைய வரலாறு.</p>.<table align="right" border="0" cellpadding="1" cellspacing="1"> <tbody> <tr> <td><strong>##~##</strong></td> </tr> </tbody> </table>.<p>இப்போது, 2010-ல் இரு நாடுகளிலும் 'சைபர் வார்’ நடந்துகொண்டு இருக்கிறது மிக, ரகசியமாக... மிகப் பயங்கரமாக!</p>.<p>கத்தியின்றி, ரத்தமின்றி ஏ.ஸி. ரூமில் இருந்தபடியே, 'கம்ப்யூட்டர் கெரில்லா தாக்குதல்’ மேற்கொண்டு, இரு நாட்டு அரசாங்கங்களும் நூற்றுக் கணக்கான வெப்சைட்டுகளை மாறி மாறி வீழ்த்தும் போர்!</p>.<p>அந்தந்த நாட்டில் உள்ள கம்ப்யூட்டர் நிபுணர் களில் சிலர், தங்கள் கிரிமினல் மூளைகளை இந்த சைபர் யுத்தத்துக்குப் பயன்படுத்துகின்றனர். 'ஹேக் கர்ஸ்’ என்று சொல்லிக்கொள்ளும் இவர்கள், 'இந்தியன் </p>.<p>ஹேக்கர்ஸ், பாகிஸ்தான் ஹேக்கர்ஸ்’ என்று பிரிந்து நின்று, எதிரிகளாகச் செயல்படுகின்றனர். இந்தியன் சைபர் ஆர்மி (ஐ.சி.ஏ.), பாகிஸ்தான் சைபர் ஆர்மி (பி.சி.ஏ.) என்று இரண்டு பேனர்களில் இணைய தளங்களில் போர் முகங்களுடன் வலம்வரும் இவர்கள் அரங்கேற்றும் அதிரடிகள், திடுக்கிடவைப்பவை!</p>.<p>இன்டர்நெட் மூலமாக வைரஸ்களை அனுப்பு வது, உளவு பார்க்கும் இ-மெயில்களை அனுப்பி எதிரியின் வெப்-சைட்டை ஆக்கிரமித்து, அங்கு இருந்து தகவல்களைத் திருடுவது, தகவல்களை காப்பியடித்துத் தங்களை ஏவிவிடும் எஜமானருக்கு அனுப்புவது, நாட்டின் முக்கிய அரசுத் துறைகளின் வெப்-சைட்டுகளுக்குள் நுழைந்து புரோக்ராம்களைத் திருத்தி அவற்றை உருக்குலைப்பது, தவறான தகவல்களைச் சேர்ப்பது... இவை எல்லாம் இந்த 'ஹேக்கர்ஸ்’களின் வேலை!</p>.<p>இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், கர்நாடக மாநில பிரபலத் தொழிலதிபரும், ராஜ்யசபா உறுப்பினருமான விஜய் மல்லையாவின் வெப்-சைட்டில் இருந்த மூவர்ணக் கொடியை அகற்றிவிட்டு, பாகிஸ்தான் நாட்டுக் கொடியை அந்த இடத்தில் பொருத்தி இருக் கிறார்கள். இது, இவர்களின் திருவிளையாடலுக்கு ஒரு சாம்பிள். உடனே இதைக் கவனித்து அதிர்ந்த மல்லையா, போலீஸில் புகார் கொடுத்தார். </p>.<p>நவம்பர் 26-ம் தேதி, மும்பைத் தாக்குதல் நடந்த நினைவு தினம். அன்று, பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தாக்குதலில் ஈடுபட்டு உயிர் நீத்த இந்திய போலீஸாருக்கு பாகிஸ்தானியர் சல்யூட் அடிக்கும் வகையில் சில சில்மிஷ வேலைகளை நம்முடைய ஆட்கள் பார்த்தார்கள். பாகிஸ்தானின் 36 அரசாங்க வெப்-சைட்களில் தங்கள் கைவரிசையைக் காட்டினார்கள். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், கடந்த டிசம்பர் 3-ம் தேதி, மிகவும் பாதுகாப்பு மிகுந்த சி.பி.ஐ-யின் அதிகாரபூர்வ வெப்-சைட்டின் முதல் பக்கத்தையே பாக்.நாட்டில் பி.சி.ஏ. ஹேக் செய்தது. அதில், 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்கிற கோஷம் வேறு இருந்தது.</p>.<p>'ஐ.சி.ஏ-வே! எங்களுடன் விளையாடாதே...’ என எச்சரித்து, '270 வெப்-சைட்டுகளை நாங்கள் ஹேக் செய்துள்ளோம்' என்றும் வாசகங்கள் மின்னின. இது டெல்லி உயர் அதிகாரி களை அதிரவைத்தது. அதைத் தொடர்ந்து, சி.பி.ஐ-யின் வெப்-சைட் மூடப்பட்டது. டிசம்பர் 13-ம் தேதி வரை அதை மீண்டும் திறக்கவில்லை. மறுசீரமைக்க சைபர் க்ரைம் நிபுணர்கள் போராடுகின்றனர்.</p>.<p>''இப்படி அரசாங்க இணையதளங்களை விஷமிகள் ஹேக் செய்வதை ஆரம்பத்திலேயே தடுக்க முடியாதா?'’ என்று முன்னாள் தமிழக டி.ஜி.பி-யான ஸ்ரீபாலிடம் கேட்டோம். ''சி.பி.ஐ-யின் சர்வர்கள் இருப்பது நேஷனல் இன்ஃபர்மேட்டிக்ஸ் சென்டரில் (என்.ஐ.சி.). இந்திய அரசாங்கத்தின் எல்லா அரசுத் துறைகளும் இந்த என்.ஐ.சி-யுடன் தொடர்பில் இருக்கின்றன. அங்கு எப்படி இது நடந்தது என்பதுதான் புரியாதபுதிர்!</p>.<p>வெப்-சைட்களை ஹேக் செய்வதற்கு என்றே கம்ப்யூட்டர் அறிவு ஜீவிகள் உலகம் பூராவும் பரவிக் </p>.<p>கிடக்கிறார்கள். இந்தியாவின் ஓ.என்.ஜி.சி. வெப்-சைட்டை இதற்கு முன்பு யாரோ ஹேக் செய்தனர். இந்த வருடத்தின் ஜனவரி முதல் ஜூன் வரை, இந்தியாவின் 4,300 வெப்-சைட்களை இப்படி ஹேக் செய்துள்ளனர். இந்த சைபர் வார்... நாட்டின் பாதுகாப்புக்கே ஆபத்தை விளை விக்கும் விவகாரம்!'' என்றார்.</p>.<p>பெங்களூருவில் உள்ள தடய அறிவியல் துறை நிபுணர் சந்திரசேகரனிடம் சி.பி.ஐ. வெப்-சைட் ஹேக் செய்யப்பட்டதைப்பற்றி கேட்டபோது, ''சி.பி.ஐ-யின் வெப்-சைட்டில் எளிதாக நுழைந்தார்கள் என்றால், அதற்குப் போதுமான பாதுகாப்பு அரண்கள் இல்லை என்றுதான் அர்த்தம். சைபர் நிபுணர்கள் எந்த நேரமும் அந்த சைட்டைக் கண்காணித்து வந்தார்களா என்று சந்தேகம் வருகிறது.</p>.<p>ஜப்பானின் ஒரு சிறுவன், கம்ப்யூட்டரில் கில்லாடி. அவன் அங்கே இருந்தபடியே அமெரிக் காவின் மிக முக்கியமான கம்பெனியின் வெப்-சைட்டுக்குள் நுழைந்து விளையாட்டுக் காட்டி னான். அப்போது முதல்தான் 'ஹேக்கிங்’ என்ற ஒன்று துவங்கி, இன்று நாடுகளுக்கு இடையே 'சைபர் வார்’ என்கிற அளவுக்கு வளர்ந்து நிற்கிறது!'' என்றார்.</p>.<p>சி.பி.ஐ-யின் உயர் அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, ''சி.பி.ஐ-யின் நெட்வொர்க், படுரகசியமானது. பாது காப்பும், கண்காணிப்பும் மிகுந்தது. இப்போது தாக்குதல் நடந்திருப்பது, பொதுமக்கள் பார்வைக்காக நாங்கள் விட்டிருந்த வெப்-சைட் ஒன்றில்தான். அதில் எந்த ரகசியங்களும் இருக்காது. இது பெரிய விஷயமே இல்லை. இருந்தாலும், இனி அப்படி ஒரு சம்பவம்கூட நடக்காத அளவுக்கு சைபர் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்தி வருகிறோம்!'' என்றார்.</p>.<p>சீனாவைச் சேர்ந்த ஹேக்கர்கள் சங்கத் தினர், கூட்டாக இந்தியாவின் சில முக்கிய வெப்-சைட்களில் திருட்டுத்தனமாக மூக்கை நுழைந்துள்ள பகீர் விஷயமும் தற்போது தெரியவந்துள்ளது. சீனாவின் எதிர்ப்பை மீறி, தங்கியிருக்கும் தலாய்லாமாவின் வெப்சைட்டில் இவர்கள் தங்களது கைவரிசையைக் காட்டியிருக்கிறார்களாம்!</p>