உத்தரப்பிரதேச மாநிலம் மஹோபா (Mahoba) மாவட்டத்தில் உள்ள முதாரி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேந்திர ரைக்வார் (Surendra Raikwar). இவரின் மனைவி சீமாவை (Seema) பிரசவத்துக்காக அந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட மகளிர் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

கடந்த மே 30-ம் தேதி இவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தைக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டதன் காரணமாக மருத்துவரால் அந்தக் குழந்தையைப் பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் (NICU) அனுமதித்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
குழந்தை இருந்த வார்டு மிகவும் அசுத்தமாகவும், எறும்புகள் இருந்ததாகவும் குழந்தையின் பெற்றோர் மருத்துவமனை ஊழியர்களிடமும், அங்கிருந்த மருத்துவர்களிடமும் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், அது குறித்து யாரும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
இந்த நிலையில், குழந்தை திடீரென இறந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, மருத்துவமனை அலட்சியத்தின் காரணமாகவே எறும்பு கடித்து பச்சிளம் குழந்தை இறந்துவிட்டதாகக் குழந்தையின் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பிரசவம் பார்ப்பதற்கு அந்த மருத்துவமனையைச் சேர்ந்த ஒரு மருத்துவர் 6,500 ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். மருத்துவமனைக்கு விரைந்து வந்த கோட்வாலி (Kotwali) பகுதி போலீஸார் மருத்துவமனையில் விசாரணை நடத்தினர்.
மேலும், தலைமை மருத்துவக் கண்காணிப்பாளர் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். பிறந்து மூன்றே நாளான பச்சிளம் குழந்தை எறும்பு கடித்து உயிரிழந்த விவகாரம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.