Published:Updated:

தடை செய்யப்பட்ட 14,000 கத்திகள்; சீனாவிலிருந்து இறக்குமதி - பிரபல நிறுவனத்துக்கு நோட்டீஸ்!

கத்தி
News
கத்தி

சுங்க அதிகாரிகளின் பங்கு குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருவதாகவும், எப்படி விற்பனை செய்தார்கள் என்பது குறித்து மீஷோ, ஃபிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதாகவும் போலீஸ் கூறியிருக்கிறது.

Published:Updated:

தடை செய்யப்பட்ட 14,000 கத்திகள்; சீனாவிலிருந்து இறக்குமதி - பிரபல நிறுவனத்துக்கு நோட்டீஸ்!

சுங்க அதிகாரிகளின் பங்கு குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருவதாகவும், எப்படி விற்பனை செய்தார்கள் என்பது குறித்து மீஷோ, ஃபிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதாகவும் போலீஸ் கூறியிருக்கிறது.

கத்தி
News
கத்தி

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தடைசெய்யப்பட்ட 14,000 கத்திகளை டெல்லி போலீஸார் பறிமுதல் செய்திருக்கின்றனர். மேலும், இது சம்பந்தமாக ஐந்து பேரை போலீஸார் கைதும் செய்திருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் தடைசெய்யப்பட்ட கத்திகளைத் தங்கள் இணையதளங்களில் விற்பனை செய்ததற்காக, இ-காமர்ஸ் தளங்களான ஃபிளிப்கார்ட், மீஷோ நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பாகாகவும் போலீஸ் தெரிவித்திருக்கிறது.

போலீஸ் கைது
போலீஸ் கைது

இந்தச் சம்பவம் குறித்து பேசிய டெல்லியின் தெற்கு மாவட்ட போலீஸ் அதிகாரி பெனிடா மேரி ஜெய்கர், ``சி.ஆர்.பூங்காவில் உரிமை கோரப்படாத ஒரு பார்சலிலிருந்து, ராம்புரி கத்திகள் எனப்படும் 50 தடைசெய்யப்பட்ட, பட்டன்-ஆக்ட்டிவேட்டடு கத்திகள் மீட்கப்பட்டன. பார்சலிலிருந்த பெயர் மற்றும் முகவரியைவைத்து, மாளவியா நகரில் முகமது சாஹல் என்பவருக்குச் சொந்தமான துணிக்கடைக்கு வந்த போலீஸார் 500-க்கும் மேற்பட்ட சட்டவிரோதக் கத்திகளை கண்டெடுத்தனர். அதைத் தொடர்ந்து முகமது சாஹல், அவரின் ஊழியர் வாசிம் ஆகியோரை போலீஸார் கைதுசெய்தனர். அதன் பின்னர் முகமது சாஹல் கொடுத்த தகவலின்படி முகமது யூசுப் என்பவருடன், சீனாவுக்குக் கத்திகளுக்கு ஆர்டர் கொடுப்பவரான ஆஷிஷ் சாவ்லாவிடம் விசாரணை நடத்திய போலீஸார், அவரின் குடோனிலிருந்து 13,000-க்கும் மேற்பட்ட கத்திகளைப் பறிமுதல் செய்தனர்.

 ஃபிளிப்கார்ட்
ஃபிளிப்கார்ட்

இறுதியாக இதில் இறக்குமதியாளர் மற்றும் ஏற்றுமதியாளர்களின் உரிமையாளர் மயங்க் பப்பரை போலீஸ் கைதுசெய்தது. இதில் கைதான மயங்க் பப்பர், கடந்த ஆண்டில் 19,000 கத்திகளுக்கு ஆர்டர் செய்ததாகக் கூறினார்" என்று தெரிவித்தார்.

மேலும் இந்த விவகாரத்தில், சுங்க அதிகாரிகளின் பங்கு குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருவதாகவும், எப்படி விற்பனை செய்தார்கள் என்பது குறித்து மீஷோ, ஃபிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதாகவும் போலீஸ் கூறியிருக்கிறது.