உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் ஏழாவது நாளை எட்டியுள்ளது. இதுவரை குறைந்தது 14 குழந்தைகள் உட்பட 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான தாக்குதலால் கடுமையான பொருளாதாரத் தடைகளையும், உலகளாவிய கண்டனங்களையும் ரஷ்யா எதிர்கொண்டுவருகிறது. ஆனால், இலக்குகளை அடையும் வரை உக்ரைன் மீதான தாக்குதலைத் தொடரப்போவதாக ரஷ்யா தெரிவித்திருப்பதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் தனியார் செய்தி நிறுவனத்திடம் கூறியிருக்கிறார்.
நேற்றைய தினம் பிரதமர் மோடி ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேலுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது, உக்ரைனில் நிலவும் மோசமான நிலைமை குறித்து பிரதமர் தனது வேதனையை வெளிப்படுத்தினார். போர் நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கு முயல வேண்டும் என இந்தியாவின் வேண்டுகோளை பிரதமர் மீண்டும் வலியுறுத்தியதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த நிலையில், உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம் கார்கிவில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை எச்சரிக்கும்விதமாக ``இந்தியர்கள் அனைவரும் உடனடியாக கார்கிவிலிருந்து உக்ரைன் நேரப்படி மாலை 6 மணிக்குள் வெளியேறி, பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என அறிக்கை வெளியிட்டிருக்கிறது.