Published:Updated:

கடைமடை ஆற்றுப் பகுதி வறண்டு கிடக்கிறது... கொள்ளிடம் ஆற்றுநீர் வீணாகக் கடலில் கலக்கிறது!

கொள்ளிடம் ஆற்றுநீர்
News
கொள்ளிடம் ஆற்றுநீர்

ஒரு பக்கம் ஆறு, வாய்க்கால்கள் வறண்டு கிடக்கின்றன, மற்றொரு பக்கம் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திரண்டு போகுது. தமிழகத்தில் ஆட்சிகள் மாறினாலும் இது போன்ற காட்சிகள் மட்டும் மாறவில்லை. மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை என்ற துறை ஒன்று இருக்கிறதா, செயல்படுகிறதா என்றே தெரியல...

Published:Updated:

கடைமடை ஆற்றுப் பகுதி வறண்டு கிடக்கிறது... கொள்ளிடம் ஆற்றுநீர் வீணாகக் கடலில் கலக்கிறது!

ஒரு பக்கம் ஆறு, வாய்க்கால்கள் வறண்டு கிடக்கின்றன, மற்றொரு பக்கம் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திரண்டு போகுது. தமிழகத்தில் ஆட்சிகள் மாறினாலும் இது போன்ற காட்சிகள் மட்டும் மாறவில்லை. மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை என்ற துறை ஒன்று இருக்கிறதா, செயல்படுகிறதா என்றே தெரியல...

கொள்ளிடம் ஆற்றுநீர்
News
கொள்ளிடம் ஆற்றுநீர்

சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்ட சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கனஅடி நீர் வீணாகக் கடலில் கலக்கிறது. அதேநேரத்தில் இந்நாள்வரை கடைமடை ஆறுகள், வாய்க்கால்களுக்கு தண்ணீர் வராமல் வறண்டு கிடக்கும் அவலம் நீடிக்கிறது.

கொள்ளிடம் ஆற்றுநீர்
கொள்ளிடம் ஆற்றுநீர்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா, விவசாயத்தை மட்டுமே முதன்மை தொழிலாகக் கொண்டுள்ளது. ஒட்டுமொத்த காவிரி டெல்டா மாவட்டங்களின் கடைமடை பகுதியாக விளங்கும் சீர்காழி ,கொள்ளிடம் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டாலும் கடந்து பல வருடங்களாவே கடைமடை பகுதி வரை முழுமையாகத் தண்ணீர் சென்றடைவதில்லை. விவசாயிகளின் இந்தக் குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் வகையில் இந்த ஆண்டு மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டும் தண்ணீர் வந்து சேராதது விவசாயிகளை மிகவும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

பருவம் தவறாமல், வாழ்வாதாரத் தொழிலான விவசாயத்தை விட்டுவிடக் கூடாது என்ற குறிக்கோளோடு தொடர்ந்து சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு, தேவையான நேரத்தில் ஆறு மற்றும் வாய்க்கால்களில் போதிய தண்ணீர் கிடைக்காததால் மோட்டார் பம்பு செட் மூலம் கிடைக்கும் தண்ணீரைக் கொண்டு பயிர்களைக் காப்பாற்றி வருகிறார்கள். அந்த விவசாயிகள் தலைகளிலும் அடிக்கடி நிகழும் `பவர்கட்' இடி விழுந்ததுபோல உள்ளது.

இதனிடையே உரத்தட்டுப்பாடு, விவசாய கூலித் தொழிலாளர்கள் தட்டுப்பாடு, என விவசாயிகளுக்கு அடுத்தடுத்து சோதனைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் சீர்காழி கடைமடை பகுதியிலுள்ள ராஜன் வாய்க்கால், கழுமலையாறு, பொறைவாய்க்கால் போன்றவற்றில் தண்ணீர் வந்து சேரவில்லை. அதேசமயம் அருகிலுள்ள கொள்ளிடம் ஆற்றில் லட்சம் கன அடிக்கு மேல் உபரி தண்ணீர் இரண்டு கரைகளையும் தொட்டுக்கொண்டு யாருக்குமே பயன்படாமல் வீணாகக் கடலில் கலப்பதைக் கண்டு விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கடைமடை ஆற்றுப்பகுதிகள் வறண்டு கிடக்கிறது
கடைமடை ஆற்றுப்பகுதிகள் வறண்டு கிடக்கிறது

இதுபற்றி அப்பகுதி விவசாயிகள் சிலரிடம் பேசியபோது,

``ஒரு பக்கம் ஆறு, வாய்க்கால்கள் வறண்டு கிடக்கின்றன, மற்றொரு பக்கம் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திரண்டு போகுது. தமிழகத்தில் ஆட்சிகள் மாறினாலும் இது போன்ற காட்சிகள் மட்டும் மாறவில்லை. மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை என்ற துறை ஒன்று இருக்கிறதா, செயல்படுகிறதா என்றே தெரியல. தமிழக அரசு எங்க பகுதிகளுக்கு போதிய தண்ணீரை வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

இது பற்றிக் கொள்ளிடம் பொதுப்பணித்துறை அலுவலரிடம் விளக்கம் கேட்டோம். ``ஏற்கனவே கொள்ளிடத்தில் வந்த நீர் வீராணம் ஏரிக்குத் திருப்பி விடப்பட்டதால், கடைமடைப் பகுதிக்கு அதிகமான நீர்வரத்து இல்லை. அதனால்தான் சில ஆறுகள் வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறந்து விட முடியாத சூழல் இருந்தது. தற்போது ஆற்றில் கரைபுரண்டு தண்ணீர் வருவதால் முதல் கட்டமாக ராஜன் வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்து விட்டுள்ளோம். இந்த வாரத்துக்குள் மற்ற பகுதிகளுக்கும் தண்ணீர் சென்றுவிடும்" என்று முடித்துக்கொண்டார்.