<div class="article_container"><table><tbody><tr><td><div align="center"></div> <table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"> <tbody><tr> <td height="5"></td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_blue_color_heading" width="100%"> <tbody><tr> <td class="orange_color" height="25">வலிமையே வா... வா!</td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" width="600"> <tbody><tr> <td bgcolor="#990000"></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" height="400" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext" valign="top"><p><strong>நோ</strong>யாளருக்கு ஏற்பட்ட தலைவலி பற்றி அவர் விவரிப்பதை வைத்துப் பார்க்கும்போது 'உள்ளே சென்று, பிடிபடாமல் தப்பிவிடும்' ஏதோ ஒன்றைப் பற்றிய தோற்றம் நமக்கு உருவாகிறது. </p><p>அவருடைய உள்ளத்துக்குள் ஒலிக்கும் அந்த இரண்டாவது குரலுக்குரிய விலங்கினம் எது? உட்பிரிவில் எந்த வகையைச் சேர்ந்தது? அது அங்கே வந்ததன் அடிப்படை என்ன? இதையெல்லாமும் துல்லியமாகக் காண முடிகிறது. </p> <p>'தலையில் யாரோ சம்மட்டியால் அடிக்கிறார்கள்... இந்தப் பகுதியைப் </p></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" height="400" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext" valign="top"><p>பயன்படுத்தவிடாமல் யாரோ தடுக்கிறார்கள்' என்று அவர் சொன்னபோது 'அடுத்தவர் என்னவோ கெடுதல் செய்கிறார்' என்ற கருத்து பெறப்படுகிறது. இது விலங்கினத்துக்கு உரியது. அதேசமயம், உங்கள் தலைவலியை அடியோடு மறந்துவிடுங்கள் என்று நாம் கூறியது அவரை வலியிலிருந்து வெளியே கொண்டுவர உதவியது. அந்த சமயம் அவர் 'உள்ளே இழுத்துக் கொள்கிறது' என்ற ஒரு புதிய உணர்வை வெளிப்படுத்தினார். இதற்கு முன் நெருக்குதல், நசுங்குதல், சம்மட்டியால் அடித்தல் ஆகிய உணர்வு வெளிப்பாடுகளைப் பார்த்தோம் அல்லவா? இப்போது புதிதாக ஒன்றைச் சொல்வதையும் குறித்துக் கொள்ள வேண்டும். </p> <p>இழுத்துக்கொள்வதைப் பற்றிக் கேட்டபோது, 'அது உள்ளே இழுக்கப்பட்டு மூடிக்கொள்ளப்பட்டு விடுகிறது' என்றார். </p> <p>ஆக, ஒரு ஓட்டுக்குள் ஒடுங்குவது போன்ற அனுபவத் தைத் தருவது எது? விலங்கினத்தின் உட்பிரிவுகளில் ஒன்றான நத்தை வகை நம் கண்முன் வருகிறது அல்லவா? எதற்காக அதற்கு இப்படி ஒரு சிப்பி அல்லது ஓடு பாதுகாப்புக்குத் தேவையாகிறது? அது எந்த பயத்தினால்? </p> <p>இவர் ஓரிடத்தில், 'எனக்கு நம்பிக்கை இல்லை!' என்று குறிப்பிட்டிருக்கிறார். இது </p> <table align="right" bordercolor="#C8C8C8" cellpadding="0" cellspacing="0" width="250"> <tbody><tr> <td><div align="center"> </div></td> </tr> </tbody></table> <p>ஒரு உணர்ச்சி. இங்கிருந்து நாம் மாயத்தோற்றம் அல்லது பிரமை என்ற மட்டத்துக்கும், பின்பு உணர்வு வெளிப்பாட்டுக்கும் நம் பயணத்தைத் தொடர வேண்டும். எனவே, 'ஒருவரை நம்புவதால் என்ன ஆகிவிடும்?' என்று கேட்கிறோம். 'பத்திரிகைகளில் படிப்பது, கேள்விப்படுவது, எல்லாமே பயத்தைத் தருகின்றன. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பலாத்காரம், முறிவுபட்ட உறவுகள் - இவை என்னை மிகவும் பாதிக்கின்றன!' என்று பதில் வருகிறது. </p> <p>மேலும் அவர், 'எனக்கு ஒருவர் நம்பிக்கை துரோகம் செய்தால் அது என் மனதை ஒரேயடியாக நொறுங்கச் செய்துவிடும்!' என்கிறார். 'நொறுங்குவது' என்பது ஓட்டுக்குள் மறையும் ஒரு உயிருக்கே வரக்கூடிய அனுபவம்! அவருக்கு ஏற்படும் உணர்வு உள்ளுக்குள்ளே ஒட்டிக்கொள்ளக் கூடியதாக உள்ளது. அது அவரைப் பிடித்துக் கொள்கிறது. அவரும் வெளிவர முடியாமல் ஒட்டிக்கொண்டு விடுகிறார். இந்த அனுபவம் மனித இனத்துக்கு இயல்பில்லாதது. தர்க்க வாதத்துக்கு உட்படாத, வினோதமான, தனித்தன்மையுள்ள ஒரு அனுபவம் இது.</p> <p>குழந்தையைப்போல பயப்படுவது; மூடப்பட்ட இடத்தில் பயம்<span class="style5"> (Clastrophobia)</span>. 'சுவர்கள் என்னை நெருங்கி வருவதுபோல் இருக்கிறது' என்று ஒரு மாயத்தோற்றத்தையும் அவர் தனது பிரமையாகச் சொன்னார். இங்கேயும் நத்தையின் ஓட்டையே நினைவுபடுத்துகிறார்.</p> <p>சரி... இப்போது 'தாது' வகை குரல் கேட்கும் மனிதர்களுக்கான இலக்கணத்தையும் புரிந்து கொள்ளுதல் அவசியம். </p> <p>வேதியியலைச் சேர்ந்த மூலப் பொருள்கள் தனிமங்கள் <span class="style5">(Elements)</span> எனப்படுகின்றன. இவற்றின் அடிப்படையான தன்மைகள் உருக்கொள்ளுதல், பேணுதல், கட்டமைப்பு இழத்தல் என்ற மூன்றினுள் அடக்கலாம்.</p> <p>தாது இனத்தில் மையமாக இருப்பது கட்டமைப்பும், ஒழுங்கும்தான். இவையே அவற்றைப் பற்றி அறிய விஞ்ஞானிகளுக்குப் பெரிதும் உதவியாக இருக்கின்றன. </p> <p>சில மனிதர்களிடம் இத்தகைய தாதுப் பொருள்களின் குரலை அடிநாதமாகக் கேட்கிறோம். தாதுக்களுக்கு வலிமை, தாங்கக்கூடிய சக்தி, உறுதிப்பாடு, நிலைபெறும் தன்மை போன்றவை உடன்பிறந்தவை. இவையெல்லாம் மனிதரிடம் ஆற்றல், கடினம், செயல்திறன், பாதுகாப்பு என்பனவற்றில் பிரதிபலிக்கின்றன. எனவே, மனிதர்கள் எவ்வளவு தூரம் தங்களை மேம்படுத்திக் கொள்கிறார்கள், தங்கள் உடல்நலன், மற்றவர்களுடன் தொடர்பு, பண விஷயங்கள், தனித்திறமைகள் இவற்றைப் பொறுத்தவரை தங்களது அமைப்பை எப்படி வலுவாக்கிக் கொள்கிறார்கள் என்பதுதான் அடிப்படையாக நாம் பார்க்க வேண்டிய விஷயம்.</p> <p>தாதுக்களின் ஆற்றலைக் கொண்ட மனிதர் களிடம், அதேபோன்ற அமைப்பு, ஒழுங்கு, ஆற்றல் முதலியன காணப்படுகின்றன. இத்தகைய ஒரு மனிதரைப் பார்த்தாலே, அவர் ஒழுங்காக எல்லா வற்றையும் திட்டமிட்டு செய்யக்கூடியவர் என்று தோன்றிவிடும். அவருடைய உடைகளில்கூட கோடுகள் அல்லது புள்ளிகள் ஒழுங்காக அமைந்திருக்கும். <br /> சொல்ல வேண்டிய எதையும் திட்டமிட்டுத் தெளிவாக சுருக்கமாகப் பேசுவார். கை களை மார்பில் குறுக்காகக் கட்டிக்கொள்வது, அதிகமாகக் கை சைகைகள் காட்டாமல் இருப்பது இவற்றையும் அவரிடம் காணலாம். குரலும் அதிக ஏற்றத்தாழ்வு இல்லாமல் சீராக இருக்கும். </p> <p>ஒரு மருத்துவரிடம் வரும்போது மிகவும் கவனமாகத் தன் உடல்நிலை பற்றிய குறிப்புகள், பரிசோதனை முடிவுகள் எல்லாவற்றையும் எடுத்து வருவார். தொடர்ந்து மருத்துவரைப் பார்க்கவரினும் முதல் முறை வந்து மருந்து உட்கொண்டதன் விளைவுகளை வரிசையாக, தேதி, நேரம் ஒன்றுவிடாமல் சொல்வார். தனது நோய் பற்றிய குறிப்புகளை எழுதி எடுத்துக்கொண்டு வருவார். ஒவ்வொரு நோய்க்குறியையும் மிக விரிவாகத் தெளிவாகத் தெரிவிப்பார். குணம் தெரிவதை 25% குணமாகி இருக்கிறது என்பதுபோல் மிகச் சரியாகக் கணித்துச் சொல்வார். அவருடைய கையெழுத்தும் ஒழுங்காக இருக்கும். சொல்ல வேண்டியதை மட்டும், அளவோடு தெளிவாகச் சொல்லுவார். </p> <p>இத்தகைய பண்புகள் யாவும் அவருடைய மனதின் போக்கை, திட்டமிடப்பட்ட எண்ணங்களின் விளைவைக் காட்டுகின்றன. இத்தகைய மனிதர்கள் தேடும் வேலையும் பொறியாளர், தணிக்கை யாளர், கணினி ஆலோசனை வழங்குபவர், வியாபாரத் துறைத் தலைவன் - இப்படியாகத்தான் இருக்கும். எதுவா னாலும் அதில் தேர்ந்து தனி முத்திரையை பதிப்பார்.</p> <p>ஆண், பெண் இரு பாலாருக்கும் இது பொதுவானது. ஒரு பெண் அலுவலகம் செல்லாமல் ஒரு மனைவியாக மட்டுமே கடனாற்றினால்கூட, குழந்தை களை வளர்ப்பதிலும் வீட்டை நிர்வகிப்பதிலும் திறமை வாய்ந்தவளாக இருப்பாள். அதுபோலவே ஒருவர் பெரிய நகராண் மைக்கழகத் தலைவராக இருந்தாலும் ஒழுங்கும், திறமையும் அவரிடம் சிறப்பாக அமைந்திருக்கும்.</p> <p>இத்தகையவர் வாழ்க்கையில் எந்தத் துறையிலும் குடும்பமோ, அலுவலகமோ எதுவாயினும் அதனுடைய ஒழுங்கமைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஒரு சமுதாயத்தை உருவாக்குவதிலோ, ஒரு குடும்பத்தை அமைப்பதிலோ, ஒரு கழகத்தை விரிவுபடுத்துவதிலோ கட்டமைப்பு என்பது ஒரு முக்கியமான பங்கை வகிக்கிறது. </p> <p>இந்த கட்டமைப்பைப் பற்றிய அக்கறையைக் காட்டும் ஒரு குரல் உள்ளத்தில் எழுமேயானால், அந்த மனிதன் தனது சிக்கல்கள் எல்லாவற் றையும் கட்டமைப்பை ஒட்டிய கண் ணோட்டத்துடனேயே காண்பான். அவன் பிரச்னைகள் கட்டமைப்பின் குறைபாட்டையோ, இழப்பையோ சார்ந்து நிற்கும். கட்டமைப்பைக் குலைக்கக் கூடிய அச்சுறுத்தலோ அல்லது கட்டமைப்பை உண்டாக்குவதில் தோல்வியோ நேர்ந்தால் உறவில் விரிசல், வேலை மற்றும் பண விஷயங்களில் இழப்பு, செய்முறையில் தோல்வி என்ற பிரச்னைகளை விரைவில் வரவழைத்துவிடும்.</p> <p>இத்தகைய மனிதன் எப்போதும் என் குடும்பம், என் உறவு, என் வேலை, என் சேமிப்பு, என் உடல்நலம் என்று அவற்றைப் பற்றியே நினைப்பான்; பேசுவான். இவை அவனுக்கு மிகமிக முக்கியம். இவற்றால்தான் அவனுக்கு மன உளைச்சல்களும் ஏற்பட்டுக்கொண்டு இருக் கும். உணர்ச்சிகளை எழுப்பக்கூடிய இவற்றைக் குறித்தே கவலையும், பயமும் கொள்வான். </p> <p>தன்னுடைய வேலையைச் சரியாகச் செய்ய முடியாமல் போய்விடுமோ என்ற கவலை அவனுக்கு இருந்து கொண்டே இருக்கும். அமைப்பைப் பாதுகாக்கவே பாடுபடுவான். இதற்காகவே எதையும் ஆராய்ந்து பார்த்து மன வலிமை யுடன் செயல்படுவது அவனுக்கு அவசியமாகிறது. இதுவே அவனுடைய இயல்பைத் தெரிவிக்கிறது. அவன் எளிதில் மாறமாட்டான். அவனுடைய இயல்பும், நடவடிக்கையும் ஒரே சீராக உறுதியுடன் இருப்பதால், எளிதில் மாறமாட்டான். வேறுபட்ட சூழ்நிலைகளில்கூட அவனது நடவடிக்கைகள் பெரும்பாலும் மாறுவ தேயில்லை.</p> <p>அவன் கனவுகளில் வரும் காட்சிகளும், அலுவலக வேலை தொடர்பானதாக, </p></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" height="400" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext" valign="top"><p>உடல்நலம் குன்றுவதாக, பணம் பறிபோவதாக, உறவுகள் முறிவதாக, வீடு பற்றி எரிவதாக - இப்படியெல்லாம் இருக்கும். மேற்கூறிய செய்திகள் அவனுடைய மனதில் மையம் கொண்டிருப்பதே இத்தகைய கனவுகள் வரக்காரணம். இவன் தனது நோய்க்குறியைப் பற்றிச் சொன்னாலும் அதன் ஆழத்தில் கட்டமைப்பு பற்றிய எண்ணமே குடிகொண்டி ருக்கும்.</p> <p>அவன் வாயில் வரும் சொற்களில்கூட தாதுப் பொருள்களுக்கே உரிய அடர்த்தி, அழுத்தம், திடத்தன்மை, லேசு, கனம், குளிர்ச்சி, கட்டமைப்பு, உருவாகிறது, கரைகிறது, காலியாக உள்ளது போன்றவை அடிக்கடி வருவதைக் காணலாம். அவனுடைய உள்ளத்தின் ஆழத்தில் காணப்படும் கட்டமைப்பைப் பற்றிய ஒரு அக்கறையே அவனுடைய உணர்வு வெளிப்பாடாக வார்த்தைகளில் வடிகிறது. இதற்கு தகுந்த உதாரணத்தை அடுத்துப் பார்க்கலாம்.</p> </td> </tr> <tr> <td class="big_block_color_bodytext" valign="top"><table align="center" border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"> <tbody><tr> <td width="42%"></td></tr></tbody></table></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" height="400" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext" valign="top"><table align="center" border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"><tbody><tr><td width="42%"></td> <td width="25%"> </td> <td width="33%"> </td> </tr> <tr> <td width="42%"> </td> <td width="25%"> </td> <td width="33%"> </td> </tr> </tbody></table></td> </tr> </tbody></table></td> <td height="300" width="5"> </td> </tr> </tbody></table> <!-- google_ad_section_end --> <table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_bluecolor_english_text" width="100%"> <tbody><tr> <td colspan="5" height="25"><span class="style3"><span class="style4"> <!--– google_ad_section_start –--> medicine medical dr.rajan shankaran </span> <!--– google_ad_section_end –--> </span></td> </tr> <tr> <td width="300"><div align="right"> </div></td> <td height="25" width="104"> </td> <td align="center" width="105"><a class="big_bluecolor_english_text style1" href="#" onclick="Javascripthistory.back()"></a> </td> <td align="right" width="59"><a class="big_bluecolor_english_text" href="#"></a></td> <td width="15"> </td> </tr> </tbody></table></div>
<div class="article_container"><table><tbody><tr><td><div align="center"></div> <table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"> <tbody><tr> <td height="5"></td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_blue_color_heading" width="100%"> <tbody><tr> <td class="orange_color" height="25">வலிமையே வா... வா!</td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" width="600"> <tbody><tr> <td bgcolor="#990000"></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" height="400" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext" valign="top"><p><strong>நோ</strong>யாளருக்கு ஏற்பட்ட தலைவலி பற்றி அவர் விவரிப்பதை வைத்துப் பார்க்கும்போது 'உள்ளே சென்று, பிடிபடாமல் தப்பிவிடும்' ஏதோ ஒன்றைப் பற்றிய தோற்றம் நமக்கு உருவாகிறது. </p><p>அவருடைய உள்ளத்துக்குள் ஒலிக்கும் அந்த இரண்டாவது குரலுக்குரிய விலங்கினம் எது? உட்பிரிவில் எந்த வகையைச் சேர்ந்தது? அது அங்கே வந்ததன் அடிப்படை என்ன? இதையெல்லாமும் துல்லியமாகக் காண முடிகிறது. </p> <p>'தலையில் யாரோ சம்மட்டியால் அடிக்கிறார்கள்... இந்தப் பகுதியைப் </p></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" height="400" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext" valign="top"><p>பயன்படுத்தவிடாமல் யாரோ தடுக்கிறார்கள்' என்று அவர் சொன்னபோது 'அடுத்தவர் என்னவோ கெடுதல் செய்கிறார்' என்ற கருத்து பெறப்படுகிறது. இது விலங்கினத்துக்கு உரியது. அதேசமயம், உங்கள் தலைவலியை அடியோடு மறந்துவிடுங்கள் என்று நாம் கூறியது அவரை வலியிலிருந்து வெளியே கொண்டுவர உதவியது. அந்த சமயம் அவர் 'உள்ளே இழுத்துக் கொள்கிறது' என்ற ஒரு புதிய உணர்வை வெளிப்படுத்தினார். இதற்கு முன் நெருக்குதல், நசுங்குதல், சம்மட்டியால் அடித்தல் ஆகிய உணர்வு வெளிப்பாடுகளைப் பார்த்தோம் அல்லவா? இப்போது புதிதாக ஒன்றைச் சொல்வதையும் குறித்துக் கொள்ள வேண்டும். </p> <p>இழுத்துக்கொள்வதைப் பற்றிக் கேட்டபோது, 'அது உள்ளே இழுக்கப்பட்டு மூடிக்கொள்ளப்பட்டு விடுகிறது' என்றார். </p> <p>ஆக, ஒரு ஓட்டுக்குள் ஒடுங்குவது போன்ற அனுபவத் தைத் தருவது எது? விலங்கினத்தின் உட்பிரிவுகளில் ஒன்றான நத்தை வகை நம் கண்முன் வருகிறது அல்லவா? எதற்காக அதற்கு இப்படி ஒரு சிப்பி அல்லது ஓடு பாதுகாப்புக்குத் தேவையாகிறது? அது எந்த பயத்தினால்? </p> <p>இவர் ஓரிடத்தில், 'எனக்கு நம்பிக்கை இல்லை!' என்று குறிப்பிட்டிருக்கிறார். இது </p> <table align="right" bordercolor="#C8C8C8" cellpadding="0" cellspacing="0" width="250"> <tbody><tr> <td><div align="center"> </div></td> </tr> </tbody></table> <p>ஒரு உணர்ச்சி. இங்கிருந்து நாம் மாயத்தோற்றம் அல்லது பிரமை என்ற மட்டத்துக்கும், பின்பு உணர்வு வெளிப்பாட்டுக்கும் நம் பயணத்தைத் தொடர வேண்டும். எனவே, 'ஒருவரை நம்புவதால் என்ன ஆகிவிடும்?' என்று கேட்கிறோம். 'பத்திரிகைகளில் படிப்பது, கேள்விப்படுவது, எல்லாமே பயத்தைத் தருகின்றன. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பலாத்காரம், முறிவுபட்ட உறவுகள் - இவை என்னை மிகவும் பாதிக்கின்றன!' என்று பதில் வருகிறது. </p> <p>மேலும் அவர், 'எனக்கு ஒருவர் நம்பிக்கை துரோகம் செய்தால் அது என் மனதை ஒரேயடியாக நொறுங்கச் செய்துவிடும்!' என்கிறார். 'நொறுங்குவது' என்பது ஓட்டுக்குள் மறையும் ஒரு உயிருக்கே வரக்கூடிய அனுபவம்! அவருக்கு ஏற்படும் உணர்வு உள்ளுக்குள்ளே ஒட்டிக்கொள்ளக் கூடியதாக உள்ளது. அது அவரைப் பிடித்துக் கொள்கிறது. அவரும் வெளிவர முடியாமல் ஒட்டிக்கொண்டு விடுகிறார். இந்த அனுபவம் மனித இனத்துக்கு இயல்பில்லாதது. தர்க்க வாதத்துக்கு உட்படாத, வினோதமான, தனித்தன்மையுள்ள ஒரு அனுபவம் இது.</p> <p>குழந்தையைப்போல பயப்படுவது; மூடப்பட்ட இடத்தில் பயம்<span class="style5"> (Clastrophobia)</span>. 'சுவர்கள் என்னை நெருங்கி வருவதுபோல் இருக்கிறது' என்று ஒரு மாயத்தோற்றத்தையும் அவர் தனது பிரமையாகச் சொன்னார். இங்கேயும் நத்தையின் ஓட்டையே நினைவுபடுத்துகிறார்.</p> <p>சரி... இப்போது 'தாது' வகை குரல் கேட்கும் மனிதர்களுக்கான இலக்கணத்தையும் புரிந்து கொள்ளுதல் அவசியம். </p> <p>வேதியியலைச் சேர்ந்த மூலப் பொருள்கள் தனிமங்கள் <span class="style5">(Elements)</span> எனப்படுகின்றன. இவற்றின் அடிப்படையான தன்மைகள் உருக்கொள்ளுதல், பேணுதல், கட்டமைப்பு இழத்தல் என்ற மூன்றினுள் அடக்கலாம்.</p> <p>தாது இனத்தில் மையமாக இருப்பது கட்டமைப்பும், ஒழுங்கும்தான். இவையே அவற்றைப் பற்றி அறிய விஞ்ஞானிகளுக்குப் பெரிதும் உதவியாக இருக்கின்றன. </p> <p>சில மனிதர்களிடம் இத்தகைய தாதுப் பொருள்களின் குரலை அடிநாதமாகக் கேட்கிறோம். தாதுக்களுக்கு வலிமை, தாங்கக்கூடிய சக்தி, உறுதிப்பாடு, நிலைபெறும் தன்மை போன்றவை உடன்பிறந்தவை. இவையெல்லாம் மனிதரிடம் ஆற்றல், கடினம், செயல்திறன், பாதுகாப்பு என்பனவற்றில் பிரதிபலிக்கின்றன. எனவே, மனிதர்கள் எவ்வளவு தூரம் தங்களை மேம்படுத்திக் கொள்கிறார்கள், தங்கள் உடல்நலன், மற்றவர்களுடன் தொடர்பு, பண விஷயங்கள், தனித்திறமைகள் இவற்றைப் பொறுத்தவரை தங்களது அமைப்பை எப்படி வலுவாக்கிக் கொள்கிறார்கள் என்பதுதான் அடிப்படையாக நாம் பார்க்க வேண்டிய விஷயம்.</p> <p>தாதுக்களின் ஆற்றலைக் கொண்ட மனிதர் களிடம், அதேபோன்ற அமைப்பு, ஒழுங்கு, ஆற்றல் முதலியன காணப்படுகின்றன. இத்தகைய ஒரு மனிதரைப் பார்த்தாலே, அவர் ஒழுங்காக எல்லா வற்றையும் திட்டமிட்டு செய்யக்கூடியவர் என்று தோன்றிவிடும். அவருடைய உடைகளில்கூட கோடுகள் அல்லது புள்ளிகள் ஒழுங்காக அமைந்திருக்கும். <br /> சொல்ல வேண்டிய எதையும் திட்டமிட்டுத் தெளிவாக சுருக்கமாகப் பேசுவார். கை களை மார்பில் குறுக்காகக் கட்டிக்கொள்வது, அதிகமாகக் கை சைகைகள் காட்டாமல் இருப்பது இவற்றையும் அவரிடம் காணலாம். குரலும் அதிக ஏற்றத்தாழ்வு இல்லாமல் சீராக இருக்கும். </p> <p>ஒரு மருத்துவரிடம் வரும்போது மிகவும் கவனமாகத் தன் உடல்நிலை பற்றிய குறிப்புகள், பரிசோதனை முடிவுகள் எல்லாவற்றையும் எடுத்து வருவார். தொடர்ந்து மருத்துவரைப் பார்க்கவரினும் முதல் முறை வந்து மருந்து உட்கொண்டதன் விளைவுகளை வரிசையாக, தேதி, நேரம் ஒன்றுவிடாமல் சொல்வார். தனது நோய் பற்றிய குறிப்புகளை எழுதி எடுத்துக்கொண்டு வருவார். ஒவ்வொரு நோய்க்குறியையும் மிக விரிவாகத் தெளிவாகத் தெரிவிப்பார். குணம் தெரிவதை 25% குணமாகி இருக்கிறது என்பதுபோல் மிகச் சரியாகக் கணித்துச் சொல்வார். அவருடைய கையெழுத்தும் ஒழுங்காக இருக்கும். சொல்ல வேண்டியதை மட்டும், அளவோடு தெளிவாகச் சொல்லுவார். </p> <p>இத்தகைய பண்புகள் யாவும் அவருடைய மனதின் போக்கை, திட்டமிடப்பட்ட எண்ணங்களின் விளைவைக் காட்டுகின்றன. இத்தகைய மனிதர்கள் தேடும் வேலையும் பொறியாளர், தணிக்கை யாளர், கணினி ஆலோசனை வழங்குபவர், வியாபாரத் துறைத் தலைவன் - இப்படியாகத்தான் இருக்கும். எதுவா னாலும் அதில் தேர்ந்து தனி முத்திரையை பதிப்பார்.</p> <p>ஆண், பெண் இரு பாலாருக்கும் இது பொதுவானது. ஒரு பெண் அலுவலகம் செல்லாமல் ஒரு மனைவியாக மட்டுமே கடனாற்றினால்கூட, குழந்தை களை வளர்ப்பதிலும் வீட்டை நிர்வகிப்பதிலும் திறமை வாய்ந்தவளாக இருப்பாள். அதுபோலவே ஒருவர் பெரிய நகராண் மைக்கழகத் தலைவராக இருந்தாலும் ஒழுங்கும், திறமையும் அவரிடம் சிறப்பாக அமைந்திருக்கும்.</p> <p>இத்தகையவர் வாழ்க்கையில் எந்தத் துறையிலும் குடும்பமோ, அலுவலகமோ எதுவாயினும் அதனுடைய ஒழுங்கமைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஒரு சமுதாயத்தை உருவாக்குவதிலோ, ஒரு குடும்பத்தை அமைப்பதிலோ, ஒரு கழகத்தை விரிவுபடுத்துவதிலோ கட்டமைப்பு என்பது ஒரு முக்கியமான பங்கை வகிக்கிறது. </p> <p>இந்த கட்டமைப்பைப் பற்றிய அக்கறையைக் காட்டும் ஒரு குரல் உள்ளத்தில் எழுமேயானால், அந்த மனிதன் தனது சிக்கல்கள் எல்லாவற் றையும் கட்டமைப்பை ஒட்டிய கண் ணோட்டத்துடனேயே காண்பான். அவன் பிரச்னைகள் கட்டமைப்பின் குறைபாட்டையோ, இழப்பையோ சார்ந்து நிற்கும். கட்டமைப்பைக் குலைக்கக் கூடிய அச்சுறுத்தலோ அல்லது கட்டமைப்பை உண்டாக்குவதில் தோல்வியோ நேர்ந்தால் உறவில் விரிசல், வேலை மற்றும் பண விஷயங்களில் இழப்பு, செய்முறையில் தோல்வி என்ற பிரச்னைகளை விரைவில் வரவழைத்துவிடும்.</p> <p>இத்தகைய மனிதன் எப்போதும் என் குடும்பம், என் உறவு, என் வேலை, என் சேமிப்பு, என் உடல்நலம் என்று அவற்றைப் பற்றியே நினைப்பான்; பேசுவான். இவை அவனுக்கு மிகமிக முக்கியம். இவற்றால்தான் அவனுக்கு மன உளைச்சல்களும் ஏற்பட்டுக்கொண்டு இருக் கும். உணர்ச்சிகளை எழுப்பக்கூடிய இவற்றைக் குறித்தே கவலையும், பயமும் கொள்வான். </p> <p>தன்னுடைய வேலையைச் சரியாகச் செய்ய முடியாமல் போய்விடுமோ என்ற கவலை அவனுக்கு இருந்து கொண்டே இருக்கும். அமைப்பைப் பாதுகாக்கவே பாடுபடுவான். இதற்காகவே எதையும் ஆராய்ந்து பார்த்து மன வலிமை யுடன் செயல்படுவது அவனுக்கு அவசியமாகிறது. இதுவே அவனுடைய இயல்பைத் தெரிவிக்கிறது. அவன் எளிதில் மாறமாட்டான். அவனுடைய இயல்பும், நடவடிக்கையும் ஒரே சீராக உறுதியுடன் இருப்பதால், எளிதில் மாறமாட்டான். வேறுபட்ட சூழ்நிலைகளில்கூட அவனது நடவடிக்கைகள் பெரும்பாலும் மாறுவ தேயில்லை.</p> <p>அவன் கனவுகளில் வரும் காட்சிகளும், அலுவலக வேலை தொடர்பானதாக, </p></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" height="400" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext" valign="top"><p>உடல்நலம் குன்றுவதாக, பணம் பறிபோவதாக, உறவுகள் முறிவதாக, வீடு பற்றி எரிவதாக - இப்படியெல்லாம் இருக்கும். மேற்கூறிய செய்திகள் அவனுடைய மனதில் மையம் கொண்டிருப்பதே இத்தகைய கனவுகள் வரக்காரணம். இவன் தனது நோய்க்குறியைப் பற்றிச் சொன்னாலும் அதன் ஆழத்தில் கட்டமைப்பு பற்றிய எண்ணமே குடிகொண்டி ருக்கும்.</p> <p>அவன் வாயில் வரும் சொற்களில்கூட தாதுப் பொருள்களுக்கே உரிய அடர்த்தி, அழுத்தம், திடத்தன்மை, லேசு, கனம், குளிர்ச்சி, கட்டமைப்பு, உருவாகிறது, கரைகிறது, காலியாக உள்ளது போன்றவை அடிக்கடி வருவதைக் காணலாம். அவனுடைய உள்ளத்தின் ஆழத்தில் காணப்படும் கட்டமைப்பைப் பற்றிய ஒரு அக்கறையே அவனுடைய உணர்வு வெளிப்பாடாக வார்த்தைகளில் வடிகிறது. இதற்கு தகுந்த உதாரணத்தை அடுத்துப் பார்க்கலாம்.</p> </td> </tr> <tr> <td class="big_block_color_bodytext" valign="top"><table align="center" border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"> <tbody><tr> <td width="42%"></td></tr></tbody></table></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" height="400" width="96%"><tbody><tr><td class="big_block_color_bodytext" valign="top"><table align="center" border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"><tbody><tr><td width="42%"></td> <td width="25%"> </td> <td width="33%"> </td> </tr> <tr> <td width="42%"> </td> <td width="25%"> </td> <td width="33%"> </td> </tr> </tbody></table></td> </tr> </tbody></table></td> <td height="300" width="5"> </td> </tr> </tbody></table> <!-- google_ad_section_end --> <table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_bluecolor_english_text" width="100%"> <tbody><tr> <td colspan="5" height="25"><span class="style3"><span class="style4"> <!--– google_ad_section_start –--> medicine medical dr.rajan shankaran </span> <!--– google_ad_section_end –--> </span></td> </tr> <tr> <td width="300"><div align="right"> </div></td> <td height="25" width="104"> </td> <td align="center" width="105"><a class="big_bluecolor_english_text style1" href="#" onclick="Javascripthistory.back()"></a> </td> <td align="right" width="59"><a class="big_bluecolor_english_text" href="#"></a></td> <td width="15"> </td> </tr> </tbody></table></div>