Published:Updated:

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி காலமானார்... தலைவர்கள் இரங்கல்!

மோடி - ஹீராபென் மோடி
News
மோடி - ஹீராபென் மோடி

கடந்த சில நாள்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் (வயது 99) காலமானார்.

Published:Updated:

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி காலமானார்... தலைவர்கள் இரங்கல்!

கடந்த சில நாள்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் (வயது 99) காலமானார்.

மோடி - ஹீராபென் மோடி
News
மோடி - ஹீராபென் மோடி

பிரதமரின் தாயார் ஹீராபென் மோடி உடல்நலக்குறைவால் அகமதாபாத்திலுள்ள யூ.என்.மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார்.

தன்னுடைய தாயார் மறைவு தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியில் இருக்கிறது" என இதயபூர்வமான இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

இதைத் தொடர்ந்து மோடியின் தாயார் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் தங்கள் இரங்கலைத் தெரிவித்துவருகின்றனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், ``குடும்பத்தைப் பேணி வளர்ப்பதற்கு ஹீரா அம்மா எதிர்கொண்ட போராட்டங்கள் அனைவருக்கும் முன்னுதாரணம். அவரது தியாகத் துறவு வாழ்க்கை என்றும் நம் நினைவில் இருக்கும். இந்தத் துயர நேரத்தில் பிரதமர் மோடி, அவரின் குடும்பத்தினருடன் ஒட்டுமொத்த தேசமும் நிற்கிறது. கோடிக்கணக்கான மக்களின் பிரார்த்தனைகள் உங்களுடன் இருக்கின்றன. ஒரு மனிதனின் வாழ்க்கையின் முதல் நண்பன் மற்றும் ஆசிரியை அம்மா. அவரை இழக்க நேரிடும் என்பது சந்தேகத்துக்கு இடமின்றி உலகின் மிகப்பெரிய வலி" எனப் பதிவிட்டிருக்கிறார்.

அமித் ஷா
அமித் ஷா

பா.ஜ.க மூத்த தலைவர் வெங்கைய நாயுடு, ``பிரதமரின் அன்புத் தாயாரின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். கடவுளின் படைப்பில் தாய்க்கும் குழந்தைக்கும் இடையிலான பந்தத்தைப்போல விலைமதிப்பற்ற, விவரிக்க முடியாதது எதுவுமில்லை. அவர் ஆத்மா சாந்தி அடையட்டும்" எனப் பதிவிட்டிருக்கிறார்.

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத், ``ஒரு மகனுக்கு அம்மாதான் உலகம். தாயின் மரணம் ஒரு மகனுக்குத் தாங்க முடியாத, ஈடுசெய்ய முடியாத இழப்பு. மதிப்புக்குரிய பிரதமர் திரு.நரேந்திர மோடியின் மதிப்புக்குரிய அன்னையின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. பகவான் ஸ்ரீராமரின் புனிதப் பாதத்தில் மறைந்த புண்ணிய ஆத்மாவுக்கு இடம் கிடைக்கட்டும்" எனத் தெரிவித்திருக்கிறார்.

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

மத்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், ``பிரதமர் திரு.நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் அவர்களின் மறைவால் நான் மிகவும் வேதனையடைந்திருக்கிறேன். தாயின் மரணம் ஒருவரின் வாழ்வில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்துகிறது. பிரதமருக்கும், அவரின் குடும்பத்தினருக்கும் இந்தத் துயரமான நேரத்தில் என்னுடைய இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனப் பதிவிட்டிருக்கிறார்.