
அம்பேத்கர், பெரியார், காமராஜர், அண்ணா, கலைஞர், சமத்துவம், பெண்ணுரிமை, சமூகநீதி, மத நல்லிணக்கம்...’ எனப் பலப் பெயர்களையும், வார்த்தைகளையும், பத்திகளையும் படிக்காமல் தவிர்த்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2023-ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடரில் தொடக்க உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, அச்சிடப்பட்ட உரையில் இடம்பெற்றிருந்த `தமிழ்நாடு அரசு, அம்பேத்கர், பெரியார், காமராஜர், அண்ணா, கலைஞர், சமத்துவம், பெண்ணுரிமை, சமூகநீதி, மத நல்லிணக்கம்...’ எனப் பலப் பெயர்களையும், வார்த்தைகளையும், பத்திகளையும் படிக்காமல் தவிர்த்தார். இதனால் முதல்வருக்கும் - ஆளுநருக்குமான பனிப்போர் நேரடி மோதலாக மாற, சட்டமன்றத்திலிருந்தே வெளியேறினார் ரவி. ஆளுநர் படிக்காத அப்படிப்பட்ட வார்த்தைகளைப்போல, நம் அரசியல்வாதிகளுக்குப் பிடிக்காத வார்த்தைகள், பெயர்கள் என்னென்ன எனப் பட்டியல் போடலாம் வாங்க!

