வரி ஏய்ப்பில் 612 இந்திய நிறுவனங்கள்...சர்வதேச ஊடக புலனாய்வில் அம்பலம்!


புதுடெல்லி: இந்தியா உள்பட உலகம் முழுவதும் 170 க்கும் அதிகமான நாடுகளில் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், தனி நபர்கள் செய்த வரி ஏய்ப்பு விவரங்களை சர்வதேச அளவிலான புலனாய்வு பத்திரிகையாளர்களை கொண்ட அமைப்பு அம்பலப்படுத்தி உள்ளது.
உலகம் முழுவதும் உள்ள 38 ஊடக நிறுவனங்களில் பணியாற்றும் புலனாய்வு பத்திரிகையாளர்கள் ஏற்படுத்திய, சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்களின் கூட்டுச் சங்கம் ( International Consortium of Investigative Journalists- ICIJ -) அமெரிக்காவின் வாஷிங்ட்னை தளமாக கொண்டு செயல்படுகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த இந்தியன் எக்ஸ்பிரஸ், அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட், பிரிட்டனின் த கார்டியன், பிபிசி, பிரான்ஸின் லே மோன்டே மற்றும் கனடா ஒலிபரப்புக் கழகம் உள்ளிட்ட ஏராளமான முன்னனி ஊடகங்களை சேர்ந்த பத்திரிகையாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
எல்லை தாண்டிய புலனாய்வில் ஈடுபடும் இந்த சங்கத்தில் இடம்பெற்றுள்ள பத்திரிகையாளர்களின் தீவிர மற்றும் கடுமையான உழைப்பினால், 2.5 மில்லியன் ரகசிய கோப்புகள் மற்றும் 206 க்கும் அதிகமான கணக்குகளின் ரகசிய கம்ப்யூட்டர் டேட்டாக்கள் என விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்களை காட்டிலும் 160 மடங்கு அதிகமான ரகசிய கோப்புகளை இந்த பத்திரிகையாளர்கள் திரட்டி உள்ளனர்.
##~~## |