<p>சுரேந்திரன், கோவை.</p>.<p><strong><span style="color: #ff6600">வெகுஜன ஊடகங்களில் வரும் கட்டுரைகளை சில எழுத்தாளர்கள் கேவலமாக நினைக்கிறார்களே?</span></strong></p>.<p>பத்திரிகையாளன், எழுத்தாளன் இருவருக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை என்பதை காபிரியேல் கார்ஸியா மார்குவேஸ் வார்த்தை மூலமாக அறியலாம்!</p>.<p>தென்அமெரிக்கக் கண்டத்தின் மனசாட்சி என்று வர்ணிக்கப்பட்ட அவரது எழுத்துக்கள் இன்றைய நவீன இலக்கியவாதிகளால் அதிகம் விரும்பிப் படிக்கப்படுவது. 'இதழியலில் ஒரு தவறான தகவல் மொத்தக் கட்டுரையையும் சிதைத்து விடும். ஆனால், புனைகதையில் ஒரு சரியான தகவல் மொத்தப் படைப்புக்கும் நம்பகத்தன்மையைக் கொடுத்து விடுகிறது. அதுதான் வித்தியாசம்’ என்று சொன்ன மார்குவேஸ், 'இதழியல்தான் என்னை யதார்த்தத்தோடு தொடர்ந்து தொடர்பு கொள்ள வைத்திருக்கிறது. நான் 10 தினசரிகளுக்கும் ஓர் இதழுக்கும் வாரந்தோறும் கட்டுரை எழுதுகிறேன். அது மிகவும் உபயோகமாக இருக்கிறது. அது எனது ஆயுதத்தை கூர்மையாக்கிக் கொள்ள உதவுகிறது’ என்று சொன்னார். வெகுஜன ஊடகங் களில் நிற்கமுடியாமல் தோற்று ஓடியவர்கள் வேண்டுமானால் அப்படி நினைக்கலாம்!</p>.<p> சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.</p>.<p><strong><span style="color: #ff6600">கருணாநிதி குடும்பத்தினர் - சசிகலா குடும்பத்தினர் ஒப்பிடுக! </span></strong></p>.<p>இரண்டு தரப்புமே இடத்தைக் கொடுத்தால் மடத்தை பறித்துக் கொள்ளக் கூடியவர்கள் என்பதைத்தான் நேரடியாகவே பார்த்தோமே!</p>.<p> வி.ஜி சத்தியநாராயணன், நங்கநல்லூர்.</p>.<p><strong><span style="color: #ff6600">பாட்டாளி மக்கள் கட்சி ஆரம்பித்து மக்களுக்காகச் செய்த சாதனை என்ன? </span></strong></p>.<p>வன்னியர்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவுக்குள் கொண்டுவந்து, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில், ஒட்டுமொத்த மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களுக்கு 20 சதவிகித இடஒதுக்கீடு கிடைப்பதற்குக் காரணம், பா.ம.க. நடத்திய போராட்டங்கள்தான்.</p>.<p>இரா.வளன், புனல்வாசல்.</p>.<p><strong><span style="color: #ff6600">பிளவுக்கும் பிரிவுக்கும் என்ன வித்தியாசம்? </span></strong></p>.<p>சசிகலா மட்டும் விலகுவது பிரிவு. அவருக்குப் பின்னால் சில எம்.எல்.ஏ-க்கள் திரண்டால் அது பிளவு!</p>.<p> ஆ.முத்தரசன், ஸ்ரீவைகுண்டம்.</p>.<p><strong><span style="color: #ff6600">'அரசியல் அமைப்புச் சட்டப்படி நாடாளுமன்றத்தில்தான் சட்டம் இயற்றப்பட வேண்டும். தெருவில் சட்டம் இயற்ற முடியாது’ என்கிறாரே தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி? </span></strong></p>.<p>நாடாளுமன்றத்தில் தேவதூதர்கள் உட்கார்ந்து சட்டத்தை இயற்றிவிட முடியாது. தெருவோர மக்களால் தேர்ந்து எடுக்கப்படும் பிரதிநிதிதான், சட்டம் இயற்ற யோசனைகளை சொல்கிறார். அவரது வாக்கு இல்லாமல் சட்டம் நிறைவேறவும் முடியாது. 'லோக்பால்’ என்றாலே அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல அதிகாரிகளுக்கும் அலர்ஜியாக இருப்பது குரேஷியின் வார்த்தைகள் மூலமாகத் தெரிகிறது!</p>.<p> சுப்புவேதையா சித்திரவேலு, கருப்பம்புலம்.</p>.<p><strong><span style="color: #ff6600">'45 ஆண்டு காலமா சினிமாக்காரங்க கையில் நாட்டைக் கொடுத்துட்டோம்’ என்று சொல்லப்படும் விமர்சனத்தை ஏற்றுக் கொள்கிறீர்களா? </span></strong></p>.<table align="right" border="0" cellpadding="1" cellspacing="1"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p>சினிமாவுக்குச் சம்பந்தம் இல்லாதவர் கையில் பல மாநிலங்கள் இருக்கிறது. அவர்கள் எல்லாம் நியாயமாக, உண்மையாக, ஊழல் இல்லாமல், மக்களுக்காக ஆட்சியை நடத்துகிறார்களா? இல்லையே. பொதுவாகவே அரசியல் என்பது இந்தியா முழுக்க பிசினஸாக மாறிவிட்டது. எனவே, சினிமாக்காரர்களிடம் மட்டும் கோளாறு இல்லை. கொள்கை பேசியவர்கள் கையில் ஆட்சி போனாலும் அப்படித்தான் இருந்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை, அண்ணாவும் கருணாநிதியும் தங்களது கொள்கையைப் பரப்பும் வழிமுறை யாக சினிமாவைத் தேர்ந்தெடுத்து உள்ளே நுழைந்தவர்கள். கட்சியின் பொருளாளராக இருந்த கருணாநிதிக்கு, முதல்வராக வழி அமைத்துக் கொடுத்தபிறகும் சினிமாவில் நடித்துக் கொண்டுதான் இருந்தார் எம்.ஜி.ஆர். ஆனால், கருணாநிதியால் அவர் உதாசீனப்படுத்தப்பட்டதால் உணர்ச்சி வசப்பட்டு வெளியேறவும், தனிக்கட்சி தொடங்கவும் எம்.ஜி.ஆர். நிர்பந்திக்கப்பட்டார். அ.தி.மு.க. தலைமையைக் கட்டமைக்க இப்போது, ஜெயலலிதாவைவிட வேறு தலைவர் இல்லை. காலம் தனக்குத் தேவையான தலைமையை தானே தேர்ந்து எடுத்துக் கொள்கிறது. அந்தத் தலைமை உண்மையாக அமைந்தால் தமிழகத்துக்கு நல்லது. சினிமாக்காரர் கூடாது, வக்கீல் வேண்டாம், தொழிலதிபர் வரக்கூடாது என்பதெல்லாம் நிபந்தனைகளாக இருக்க முடியாது. இவை விதண்டாவாதங்கள்!</p>.<p> சகாயராஜ், தூத்துக்குடி.</p>.<p><strong><span style="color: #ff6600">'இளைஞர்கள் அனைவரும் கணிதம் பயில முன்வர வேண்டும்’ என்று பிரதமர் மன்மோகன்சிங் அழைப்பு விடுத்துள்ளாரே? </span></strong></p>.<p>விலைவாசி நித்தமும் கூடிக் கொண்டே இருந்தால் கஷ்டப்பட்டு குடும்பம் நடத்த கணக்குகளை போட்டுப் போட்டுப் பார்த்தாக வேண்டும் அல்லவா?</p>.<p> எஸ். ஆறுமுகம், வள்ளியூர்.</p>.<p><strong><span style="color: #ff6600">உளவுத்துறை அதிகாரியாக அம்ரேஷ் பூஜாரி நியமிக்கப்பட்டு உள்ளாரே? </span></strong></p>.<p>உளவுத் துறைக்கும் இந்த ஆட்சிக்கும் அவ்வள வாக பொருத்தம் இல்லாதது போல் தெரிகிறது! ராஜேந்திரன் போனார். பொன்.மாணிக்கவேல் வந்தார். தாமரைக்கண்ணன் உட்கார்ந்தார். இப்போது அம்ரேஷ் வந்துள்ளார். ஒரு லாபி போய்... ஒடிசா லாபி வந்துவிட்டதாகவே அதிகாரிகள் தரப்பு கிண்டல் செய்கிறது.</p>.<p>தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி, உள்துறைச் செயலாளர் ரமேஷ்ராம் மிஸ்ரா, சென்னைக் கமிஷனர் திரிபாதி, உளவுத்துறை ஐ.ஜி-யாக அம்ரேஷ் பூஜாரி... என முக்கியப் பதவிகள் அனைத்தும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கே தாரை வார்க்கப்படுவது தகுதி அடிப்படையிலா? தற்காலிகமானதா? இது இன்னொரு அதிகார மையத்தை உருவாக்க அடித்தளம் அமைத்து விடக்கூடாது!</p>.<p> சிவசங்கரன், திண்டிவனம்.</p>.<p><strong><span style="color: #ff6600">பிரதமரைச் சந்திக்கச் சென்ற கருணாநிதி, தன்னுடன் கனிமொழியை அழைத்துச் சென்றது சரியா?</span></strong></p>.<p>அந்தக் குறையை மட்டும் வைப்பானேன் என்று அப்பா நினைத்தால் தப்பா?</p>.<p> லவ்லி ராஜா, கரியாக்கவுண்டனூர்.</p>.<p><strong><span style="color: #ff6600">சசிகலாவை நீக்கியதால் அ.தி.மு.க. உடைய வாய்ப்பு உள்ளதா? </span></strong></p>.<p>அப்படி நடக்கப் போவதாகச் சிலர் பீதியைக் கிளப்பி, மீண்டும் தோட்டத்துடன் நெருக்கமாக முடியுமா என்று துடிக்கிறார்கள்!</p>
<p>சுரேந்திரன், கோவை.</p>.<p><strong><span style="color: #ff6600">வெகுஜன ஊடகங்களில் வரும் கட்டுரைகளை சில எழுத்தாளர்கள் கேவலமாக நினைக்கிறார்களே?</span></strong></p>.<p>பத்திரிகையாளன், எழுத்தாளன் இருவருக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை என்பதை காபிரியேல் கார்ஸியா மார்குவேஸ் வார்த்தை மூலமாக அறியலாம்!</p>.<p>தென்அமெரிக்கக் கண்டத்தின் மனசாட்சி என்று வர்ணிக்கப்பட்ட அவரது எழுத்துக்கள் இன்றைய நவீன இலக்கியவாதிகளால் அதிகம் விரும்பிப் படிக்கப்படுவது. 'இதழியலில் ஒரு தவறான தகவல் மொத்தக் கட்டுரையையும் சிதைத்து விடும். ஆனால், புனைகதையில் ஒரு சரியான தகவல் மொத்தப் படைப்புக்கும் நம்பகத்தன்மையைக் கொடுத்து விடுகிறது. அதுதான் வித்தியாசம்’ என்று சொன்ன மார்குவேஸ், 'இதழியல்தான் என்னை யதார்த்தத்தோடு தொடர்ந்து தொடர்பு கொள்ள வைத்திருக்கிறது. நான் 10 தினசரிகளுக்கும் ஓர் இதழுக்கும் வாரந்தோறும் கட்டுரை எழுதுகிறேன். அது மிகவும் உபயோகமாக இருக்கிறது. அது எனது ஆயுதத்தை கூர்மையாக்கிக் கொள்ள உதவுகிறது’ என்று சொன்னார். வெகுஜன ஊடகங் களில் நிற்கமுடியாமல் தோற்று ஓடியவர்கள் வேண்டுமானால் அப்படி நினைக்கலாம்!</p>.<p> சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.</p>.<p><strong><span style="color: #ff6600">கருணாநிதி குடும்பத்தினர் - சசிகலா குடும்பத்தினர் ஒப்பிடுக! </span></strong></p>.<p>இரண்டு தரப்புமே இடத்தைக் கொடுத்தால் மடத்தை பறித்துக் கொள்ளக் கூடியவர்கள் என்பதைத்தான் நேரடியாகவே பார்த்தோமே!</p>.<p> வி.ஜி சத்தியநாராயணன், நங்கநல்லூர்.</p>.<p><strong><span style="color: #ff6600">பாட்டாளி மக்கள் கட்சி ஆரம்பித்து மக்களுக்காகச் செய்த சாதனை என்ன? </span></strong></p>.<p>வன்னியர்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவுக்குள் கொண்டுவந்து, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில், ஒட்டுமொத்த மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களுக்கு 20 சதவிகித இடஒதுக்கீடு கிடைப்பதற்குக் காரணம், பா.ம.க. நடத்திய போராட்டங்கள்தான்.</p>.<p>இரா.வளன், புனல்வாசல்.</p>.<p><strong><span style="color: #ff6600">பிளவுக்கும் பிரிவுக்கும் என்ன வித்தியாசம்? </span></strong></p>.<p>சசிகலா மட்டும் விலகுவது பிரிவு. அவருக்குப் பின்னால் சில எம்.எல்.ஏ-க்கள் திரண்டால் அது பிளவு!</p>.<p> ஆ.முத்தரசன், ஸ்ரீவைகுண்டம்.</p>.<p><strong><span style="color: #ff6600">'அரசியல் அமைப்புச் சட்டப்படி நாடாளுமன்றத்தில்தான் சட்டம் இயற்றப்பட வேண்டும். தெருவில் சட்டம் இயற்ற முடியாது’ என்கிறாரே தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி? </span></strong></p>.<p>நாடாளுமன்றத்தில் தேவதூதர்கள் உட்கார்ந்து சட்டத்தை இயற்றிவிட முடியாது. தெருவோர மக்களால் தேர்ந்து எடுக்கப்படும் பிரதிநிதிதான், சட்டம் இயற்ற யோசனைகளை சொல்கிறார். அவரது வாக்கு இல்லாமல் சட்டம் நிறைவேறவும் முடியாது. 'லோக்பால்’ என்றாலே அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல அதிகாரிகளுக்கும் அலர்ஜியாக இருப்பது குரேஷியின் வார்த்தைகள் மூலமாகத் தெரிகிறது!</p>.<p> சுப்புவேதையா சித்திரவேலு, கருப்பம்புலம்.</p>.<p><strong><span style="color: #ff6600">'45 ஆண்டு காலமா சினிமாக்காரங்க கையில் நாட்டைக் கொடுத்துட்டோம்’ என்று சொல்லப்படும் விமர்சனத்தை ஏற்றுக் கொள்கிறீர்களா? </span></strong></p>.<table align="right" border="0" cellpadding="1" cellspacing="1"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p>சினிமாவுக்குச் சம்பந்தம் இல்லாதவர் கையில் பல மாநிலங்கள் இருக்கிறது. அவர்கள் எல்லாம் நியாயமாக, உண்மையாக, ஊழல் இல்லாமல், மக்களுக்காக ஆட்சியை நடத்துகிறார்களா? இல்லையே. பொதுவாகவே அரசியல் என்பது இந்தியா முழுக்க பிசினஸாக மாறிவிட்டது. எனவே, சினிமாக்காரர்களிடம் மட்டும் கோளாறு இல்லை. கொள்கை பேசியவர்கள் கையில் ஆட்சி போனாலும் அப்படித்தான் இருந்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை, அண்ணாவும் கருணாநிதியும் தங்களது கொள்கையைப் பரப்பும் வழிமுறை யாக சினிமாவைத் தேர்ந்தெடுத்து உள்ளே நுழைந்தவர்கள். கட்சியின் பொருளாளராக இருந்த கருணாநிதிக்கு, முதல்வராக வழி அமைத்துக் கொடுத்தபிறகும் சினிமாவில் நடித்துக் கொண்டுதான் இருந்தார் எம்.ஜி.ஆர். ஆனால், கருணாநிதியால் அவர் உதாசீனப்படுத்தப்பட்டதால் உணர்ச்சி வசப்பட்டு வெளியேறவும், தனிக்கட்சி தொடங்கவும் எம்.ஜி.ஆர். நிர்பந்திக்கப்பட்டார். அ.தி.மு.க. தலைமையைக் கட்டமைக்க இப்போது, ஜெயலலிதாவைவிட வேறு தலைவர் இல்லை. காலம் தனக்குத் தேவையான தலைமையை தானே தேர்ந்து எடுத்துக் கொள்கிறது. அந்தத் தலைமை உண்மையாக அமைந்தால் தமிழகத்துக்கு நல்லது. சினிமாக்காரர் கூடாது, வக்கீல் வேண்டாம், தொழிலதிபர் வரக்கூடாது என்பதெல்லாம் நிபந்தனைகளாக இருக்க முடியாது. இவை விதண்டாவாதங்கள்!</p>.<p> சகாயராஜ், தூத்துக்குடி.</p>.<p><strong><span style="color: #ff6600">'இளைஞர்கள் அனைவரும் கணிதம் பயில முன்வர வேண்டும்’ என்று பிரதமர் மன்மோகன்சிங் அழைப்பு விடுத்துள்ளாரே? </span></strong></p>.<p>விலைவாசி நித்தமும் கூடிக் கொண்டே இருந்தால் கஷ்டப்பட்டு குடும்பம் நடத்த கணக்குகளை போட்டுப் போட்டுப் பார்த்தாக வேண்டும் அல்லவா?</p>.<p> எஸ். ஆறுமுகம், வள்ளியூர்.</p>.<p><strong><span style="color: #ff6600">உளவுத்துறை அதிகாரியாக அம்ரேஷ் பூஜாரி நியமிக்கப்பட்டு உள்ளாரே? </span></strong></p>.<p>உளவுத் துறைக்கும் இந்த ஆட்சிக்கும் அவ்வள வாக பொருத்தம் இல்லாதது போல் தெரிகிறது! ராஜேந்திரன் போனார். பொன்.மாணிக்கவேல் வந்தார். தாமரைக்கண்ணன் உட்கார்ந்தார். இப்போது அம்ரேஷ் வந்துள்ளார். ஒரு லாபி போய்... ஒடிசா லாபி வந்துவிட்டதாகவே அதிகாரிகள் தரப்பு கிண்டல் செய்கிறது.</p>.<p>தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி, உள்துறைச் செயலாளர் ரமேஷ்ராம் மிஸ்ரா, சென்னைக் கமிஷனர் திரிபாதி, உளவுத்துறை ஐ.ஜி-யாக அம்ரேஷ் பூஜாரி... என முக்கியப் பதவிகள் அனைத்தும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கே தாரை வார்க்கப்படுவது தகுதி அடிப்படையிலா? தற்காலிகமானதா? இது இன்னொரு அதிகார மையத்தை உருவாக்க அடித்தளம் அமைத்து விடக்கூடாது!</p>.<p> சிவசங்கரன், திண்டிவனம்.</p>.<p><strong><span style="color: #ff6600">பிரதமரைச் சந்திக்கச் சென்ற கருணாநிதி, தன்னுடன் கனிமொழியை அழைத்துச் சென்றது சரியா?</span></strong></p>.<p>அந்தக் குறையை மட்டும் வைப்பானேன் என்று அப்பா நினைத்தால் தப்பா?</p>.<p> லவ்லி ராஜா, கரியாக்கவுண்டனூர்.</p>.<p><strong><span style="color: #ff6600">சசிகலாவை நீக்கியதால் அ.தி.மு.க. உடைய வாய்ப்பு உள்ளதா? </span></strong></p>.<p>அப்படி நடக்கப் போவதாகச் சிலர் பீதியைக் கிளப்பி, மீண்டும் தோட்டத்துடன் நெருக்கமாக முடியுமா என்று துடிக்கிறார்கள்!</p>