
புதுடெல்லி: குற்ற வழக்குகளில் தொடர்புடைய எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவதைத் தடுக்கும் அவரசச் சட்டத்துக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதற்கு, பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி கூறுகையில், ''மத்திய அமைச்சரவையின் முடிவு எங்கள் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அமைச்சரவையின் இந்த முடிவு, குற்றம் சுமத்தப்பட்ட எம்.பி.க்கள்,
##~~## |
ஏமாற்றுக்காரர்களாக, மோசடிக்காரர்களாக, கொலைகாரர்களாக அரசியலில் வலம் வரமுடியும் என்ற சூழலை ஏற்படுத்துவதாக அமையும்'' என்றார்.