ஸ்பெஷல் -1
Published:Updated:

கூட்டணி பேரங்கள்! திணறும் கட்சிகள் திக் திக் காட்சிகள்

கூட்டணி பேரங்கள்! திணறும் கட்சிகள் திக் திக் காட்சிகள்


கூட்டணி பேரங்கள்! திணறும் கட்சிகள் திக் திக் காட்சிகள்
கூட்டணி பேரங்கள்! திணறும் கட்சிகள் திக் திக் காட்சிகள்
கூட்டணி பேரங்கள்! திணறும் கட்சிகள் திக் திக் காட்சிகள்
ப.திருமாவேலன்
ஓவியங்கள்:ஹரன்
கூட்டணி பேரங்கள்! திணறும் கட்சிகள் திக் திக் காட்சிகள்

தெளிந்த நீரோடைபோல் தெரிகிறது தேர்தல் களம். ஆனால், அதை

உன்னிப்பாகக் கவனித்தால், உள்ளே அத்தனை கலங்கல்கள்!

பிரசவ வார்டின் உள்ளே மனைவி துடிக்க... வெளியே நிலைகொள்ளாமல் தவிக்கும் தமிழ் சினிமாவின் புருஷர் களாகவே நமது தலைவர்கள் இருக்கிறார்கள். 'அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை. நிரந்தர எதிரியும் இல்லை' என்ற வாசகம், இனி வரும் நாட்களில் மிக அதிகமாக உச்சரிக்கப்படும்... உணரப்படும். அதற்கு முன்னதாக திரைமறைவில் நடக்கும் திகுதிகு பேரங்களை நேரடிக் காட்சிகள் மூலமாக நிரூபித்தாலுமே... வாக்காளர்கள் நம்புவது சிரமம்தான்!

முறைப்படி, வரும் மே மாதம்தான் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், பிப்ரவரி மாதமே நடத்திவிட்டால் என்ன என்ற யோசனை முதல்வர் கருணாநிதியின் மனதில் ஓடுவதாக ஓர் அரசியல் கிசுகிசு. மே மாதக் கோடையானது, மின் வெட்டையும் தண்ணீர்த் தட்டுப்பாட்டையும் நினைவூட்டும் காலம் என்பதால், அது நெருங்குவதற்கு முன்னதாகவே தேர்தல் நடத்திவிடுவது நல்லது என்று நினைக்கிறாராம் கருணாநிதி.

கூட்டணி பேரங்கள்! திணறும் கட்சிகள் திக் திக் காட்சிகள்

பிப்ரவரி - மே என எப்போது நடந்தாலும், 'காங்கிரஸ் கட்சியானது தி.மு.க. கூட்டணியில்தான் இருந்தாக வேண்டும்!' என்று கருணாநிதி மனதார விரும்புகிறார். இது குறித்து குடும்பத்தினர், கட்சியின் முன்னணியினர் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் இதில் உடன்பாடுகொண்டவராகவே இன்று வரை இருக்கிறார். ஆனால், ராகுல் உள்ளிட்ட நம்பர் 10, ஜன்பத் சாலைத் தலைகள் வேறு மாதிரியாக யோசிக்கின்றன.

'40 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் எதிர்க் கட்சியாகவே இருக்கும் காங்கிரஸ் கட்சியை ஆளும் கட்சியாக ஆக்குவதற்கு இதைவிட நல்ல நேரம் கிடையாது. காங்கிரஸ் இருந்தால்தான் ஜெயிக்க முடியும் என்று நினைக்கும் தி.மு.க, காங்கிரஸின் கூட்டணிக்காக அலையும் அ.தி.மு.க. என இரண்டு பிரதானக் கட்சிகளும் பலவீனமாக இருக்கும் இந்த நேரத்தில், அவர்களுக்குக் கை கொடுத்துத் தூக்கிவிடாமல், நம்முடைய தலைமையில் கூட்டணி அமைத்தால், தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கலாம்!' என்பது அவர்களின் எண்ணம்.

கூட்டணி பேரங்கள்! திணறும் கட்சிகள் திக் திக் காட்சிகள்

காங்கிரஸ் தலைமையிலான அணியில் பிரதான இடம் விஜயகாந்த்துக்கு. 'இன்னும் பலம் வேண்டும்' என்று நினைத்தால், பா.ம.கவையும் இணைக்கலாம் என்று நினைக்கிறார்கள். அவரோடு விடுதலைச் சிறுத்தைகளும் இருந்தால் தான் வட தமிழ்நாட்டை வளைக்க முடியும் என்பது ராகுலைச் சுற்றி இருக்கும் சிலர் வகுத்து வைத்திருக்கும் கூட்டணிக் கணக்கு.

காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பதில், விஜயகாந்த்துக்கு எந்தச் சிக்கலும் இல்லை. தொகுதிப் பங்கீடு விஷயத்தில் வேண்டுமானால் மனக் கசப்பு வரலாம். 'இரண்டு கட்சிகளும் 50-க்கு 50 எனப் பிரித்துக்கொண்டு எந்தக் கட்சி அதிகத் தொகுதிகளில் ஜெயிக்கிறதோ, அந்தக் கட்சி சார்பில் முதலமைச்சர் வரலாம்!' என்றுகூடப் பேச்சுவார்த்தைப் பெரியவர்கள் சமாதானம் சொல்லி இருக்கிறார்கள். 'தி.மு.க., அ.தி.மு.க. அல்லாத காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைய வேண்டும்' என்று டாக்டர் ராமதாஸ் சொல்லி வருகிறார். மேலும், விஜயகாந்த்தை ஒரு மனிதராகக்கூட இது வரை மதிக்காமல் இருந்த அவர், இப்போது அது குறித்துப் பேச மறுக்கிறார். விஜயகாந்த் பற்றி கேள்வி கேட்டபோது, 'நிரந்தர எதிரி நண்பன்!' பழமொழிதான் ராமதாஸின் பதில். விஜயகாந்த் ஒரு படி மேலே போய், 'ராமதாஸ் கொடியில் இருக்கும் மஞ்சள் நிறத்தை கருணாநிதி எப்படிக்கள வாடலாம்?' என்று திண்டிவனத்தில் வக்காலத்து வாங்கித் திகிலூட்டினார். எனவே, தி.மு.க-வைப் பிடிக்காத காங்கிரஸார் மத்தியில், காங்கிரஸ் - விஜயகாந்த் - ராமதாஸ் அணி குறித்த பேச்சுதான் அதிகமாக ஓடு கிறது.

கூட்டணி பேரங்கள்! திணறும் கட்சிகள் திக் திக் காட்சிகள்

ஆனாலும், காங்கிரஸ் மீது, விஜயகாந்த் இன்னமும் அவநம்பிக்கையு டன் இருக்கிறார். 'தி.மு.க-விடம் தங்களுக்கு 80-க்கும் அதிகமான தொகுதிகளைப் பெற நினைக்கிறது காங்கிரஸ். அது கிடைக்காவிட்டால், விஜயகாந்த்துடன் போய்விடுவோம்' என்று கருணாநிதியை மிரட்டுவதற்கான கருவியாகவே காங்கிரஸ் தன்னைப் பயன்படுத்துகிறதோ என்பது அவர் சந்தேகம். 'கூட்டணி அமைப்பதாக இருந்தால், கடைசி வரை தி.மு.க-வுடன் இருந்துவிட்டு, தேர்தல் தேதி அறிவித்த வுடன் தன்னுடன் சேருவதைவிட, முன்னதாகவே வந்தாக வேண்டும்' என்று அவர் விரும்புகிறார். ஆர்வமாக வந்து பேசுவதும், பிறகு பதில் தராமல் பம்மிவிடுவதும் காங்கிரஸின் வழக்கமாக இருப்பது அவருக்கு வருத்தம் தரும் சங்கதி.

இந்த ஆட்டங்களை அமைதியாக வேடிக்கை பார்க்கிறார் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா. ஆரம்பத்தில், காங்கிரஸ் கட்சியைத் தி.மு.க-விடம் இருந்து பிரித்து, தன்னுடைய அணியில் சேர்க்கவே விரும்பினார். டெல்லிக்கு இவரது தூதர்களும் போனார்கள். ஜெயலலிதாவுக்கு அறிமுகமான சில காங்கிரஸ் பிரமுகர்களும் விரும்பினார் கள். ஆனால், அசையவில்லை டெல்லி. 'கருணாநிதியுடன் இருப்போம். விலகினால் தனி அணிதான். அ.தி.மு.க-வுடன் வேண்டாம்' என்பது ராகுல் வட்டாரத் திட்டம். 'காங்கிரஸ் - விஜயகாந்த்' கூட்டு சேருவதை ஜெயலலிதா விரும்பவில்லை. 'தி.மு.க-வுக்கு எதிரான வாக்குகள் இரண்டாகப் பிரிந்து, அது கருணாநிதிக்குச் சாதகமாகவே அமையும்' என்று நினைக்கிறார். எனவே, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் சிலர் அச்சத்தைவிட்டு 'விஜயகாந்த்தை இணைத்துக்கொள்ளலாம்' என்று ஜெயலலிதாவிடம் சொல்ல, 'கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே அவரை எதிர் பார்த்தேன். கடைசி நேரத்தில் மனம் மாறிவிட்டார். எனவே, விஜயகாந்த்தை முழுமையாக நம்ப முடியாது' என்று அவர் பதில் அளித்தாராம்.

கூட்டணி பேரங்கள்! திணறும் கட்சிகள் திக் திக் காட்சிகள்

ஆனால், அ.தி.மு.க-வுக்குப் பச்சைக் கொடி காட்டும் சிக்னல்கள் விஜயகாந்த் வார்த்தைகளில் தெரிகின்றன. 'தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் ஊழல் கட்சிகள்' என்று சில மாதங்களுக்கு முன் பேசி வந்தவர், இன்று அப்படிச் சொல்வதில்லை. 'தி.மு.க. ஆட்சி மீண்டும் வரக் கூடாது' என்றே சொல்லி வருகிறார். 'யாருடனும் கூட்டணி இல்லை' என்றவர், '30 அல்லது 40 ஸீட்டுக்காகக் கூட்டணி சேர மாட்டேன்' என்கிறார். அது '60 அல்லது 80 கொடுத்தால் சேருவாரா?' என்ற சந்தேகத்தைக் கிளப்பியது. '40 ஸீட்தான் தருவேன்!' என்று அ.தி.மு.க. வட்டாரமும் கண்டிப்பாகக் கூறிவிட்டது. விஜயகாந்த் தரப்பில் தங்களுக்குத் தேவையான தொகுதிகளின் பட்டியலைக் கொடுத்தார்களாம். 'அவை அனைத்துமே அ.தி.மு.க-வுக்குச் செல்வாக்கான தொகுதிகள். எப்படித் தர முடியும்?' என்று தோட்டத்துக்கு நெருக்கமானவர்கள் சொல்லி வருகிறார்கள். 'அ.தி.மு.க-வுடன் வைகோ, சி.பி.எம், சி.பி.ஐ. ஆகியவற்றுடன் விஜயகாந்த்தும் இணைந்தால், அது வெற்றிக் கூட்டணியாக அமைந்து, 200 தொகுதிகளைக் கைப்பற்றுவோம்!' என்கிறார் அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் ஒருவர்.

கூட்டணி பேரங்கள்! திணறும் கட்சிகள் திக் திக் காட்சிகள்

'விஜயகாந்த் - அ.தி.மு.க. கூட்டணி அமைந்தால், அது வெற்றி பெறும். அப்போது அதில் ஐக்கியமானால் தவறு இல்லை!' என்று பா.ம.க-வின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்பட்டு உள்ளது. விஜயகாந்த் முடிவு அறிவிக்கும் வரை காத்திருப்பது என்று டாக்டர் ராமதாஸ் முடிவு எடுத்துள்ளார். பா.ம.க-வை அவசரப்பட்டுக் கழற்றிவிட்டோமே என்று கருணாநிதியும் வருத்தப்படுகிறார். ஆனால், தான் எதிர் பார்க்கும் எண்ணிக்கையிலான தொகுதிகள் கிடைக்குமா என்ற பதற்றம் பா.ம.க தலைமைக்கு ஏற்பட்டு உள்ளதையும் மறுக்க முடியாது.

இன்னொரு பக்கம் பார்த்தால், விஜயகாந்த் வளர்வதை ஜெயலலிதா விரும்பவில்லை. 'நாம் சேர்க்காமல் விஜயகாந்த் தனித்து நின்றால், அந்தக் கட்சியில் ஒன்றிரண்டு பேர் ஜெயிக்கலாமே தவிர, சிறு சலனமும் ஏற்படாது!' என்று ஜெயலலிதா நினைப்பதாகவும் சொல்கிறார்கள். 'கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வைவிட தி.மு.க. சுமார் 16 லட்சம் வாக்குகள் மட்டுமே கூடுதலாகப் பெற்றது. அது நாடாளுமன்றத் தேர்தல் என்பதால், காங்கிரஸ் ஜெயிக்க வேண்டும் என்றுதான் பலரும் வாக்களிப்பார்கள். எதிரே சரியான எதிர்க் கட்சியும் இல்லை. மேலும், தி.மு.க. அரசை எதிர்க்கும் மக்கள் மனோபாவம் இன்று கூடி இருக்கிறது. எனவே, விஜயகாந்த் இல்லாமல் ஓர் அணி அமைத்தால்கூட வெற்றி பெறலாம். இதில் பா.ம.க-வை மட்டும் சேர்க்க வேண்டும்!' என்று ஜெயலலிதாவுக்கு ஒரு கணக்கு போட்டுத் தரப்பட்டுள்ளது. ராமதாஸ் வரும்போது, சிறுத்தைகளையும் அழைத்து வர வேண்டும் என்பது அவருக்கான நிபந்தனை.

கூட்டணி பேரங்கள்! திணறும் கட்சிகள் திக் திக் காட்சிகள்

தி.மு.க. தலைவர் கருணாநிதியைப் பொறுத்தவரையில், 'விஜயகாந்தைத் தனது அணிக்கு காங்கிரஸ் அழைத்து வரும்' என்ற அதிகபட்ச ஆசை கடந்த நாடாளுமன்றத் தேர்தலுடன் காலாவதி ஆகிவிட்டது. ஆகவே, அவரிடம் அப்படிப்பட்ட நினைப்பு இல்லை. ஆனால், அ.தி.மு.க-வுடன் விஜயகாந்த் சேருவதை அவர் விரும்ப வில்லை. வழக்கம்போல் அவர் 'தனித்து நின்றால், தனக்கு வசதி' என்று நினைக்கிறார். விஜயகாந்த் மீது ஜெயலலிதாவை வெறுப்படையவைக்கும் செய்திகளை உளவுத் துறை மூலமாகப் பரப்பும் காரியத்தை கனகச்சிதமாகப் பார்த்து வருவதற்கு அடிப்படைக் காரணம் அதுதான். 'விஜயகாந்த்துடன் காங்கிரஸ் இணைந்து அணி அமைத்தாலும் பெரிதாகத் தேறாது!' என்பது கருணாநிதியின் முடிவாக இருக்கிறது.

இப்படியாக, காங்கிரஸும் விஜயகாந்த்தும் எடுக்கும் முடிவுகளைப் பொறுத்தே, மொத்தக் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளும் போகின்றன. இந்த இருவரும் இப்போதைக்குத் தங்களது முடிவுகளை அறிவிப்பவர்களாகவும் தெரியவில்லை. ஆக, தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் கூட்டணி அமைக்காது என்பதைத் தவிர, எதுவும் நடக்கலாம்!

கூட்டணி பேரங்கள்! திணறும் கட்சிகள் திக் திக் காட்சிகள்
கூட்டணி பேரங்கள்! திணறும் கட்சிகள் திக் திக் காட்சிகள்